எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டேவிட் ரோப்பர்கட்டுரைகள்

வைக்கோலை அடுக்குவது

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கோடை விடுமுறையில் கொலராடோவில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் வேலை செய்தேன்.  நவம்பர் முழுவதும் வைக்கோலை வெட்டி முடித்துவிட்டு, மாலையில் களைப்போடும், பசியோடும் ட்ராக்டர் வண்டியை அதை நிறுத்தும் இடத்திற்கு ஓட்டிவந்தேன். ஒரு வீரப்பிரதாப செயலாக நினைத்து, ட்ராக்டரை ஒடித்துத் திருப்பி, நிறுத்தியதில், ட்ராக்டர் சுழன்றது.

இதனால் அருகில் இருந்த 2000 லிட்டர் பெட்ரோல் இருந்த கலன் பெரிய சத்தத்துடன் கீழே விழுந்து, பெட்ரோல் முழுவதும் கீழே கொட்டியது.

பண்ணைக்கு சொந்தக்காரர் அருகில் நின்று அந்த இடத்தை முழுவதும் பார்த்தார்.

நான் ட்ராக்டரில் இருந்து இறங்கி, மன்னிப்புக் கேட்டேன். வேறு எதுவும் மனதில் தோன்றாததால் கோடை முழுவதும் ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறேன் என்று கூறினேன்.

உடைந்த கலனையும், கொட்டிய பெட்ரோலையும் பார்த்த அவர், திரும்பி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். “வா, நாம் போய் சாப்பிடலாம்” என்றார்.

தவறு செய்த இளைஞனைப் பற்றி இயேசு சொன்ன கதை எனக்கு நினைவுக்கு வந்தது. “தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்” என்று கதறினான். “உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்” என்று சொல்ல நினைத்திருந்தான். ஆனால் அதை அவன் சொல்லும் முன்பே அவன் தந்தை அவனை இடைமறித்தார். “வா, நாம் போய் சாப்பிடலாம்” என்பதே அவர் சொன்னதின் சாராம்சம் (லூக். 15:17-24).

தேவனின் பெருந்தன்மை இதேபோன்று வியக்க வைப்பதாகும்.

தந்தைகளும், மகன்களும்

என் தந்தை ஒரு நல்ல தகப்பனாக நடந்துகொண்டார். பெரும்பாலான விஷயங்களில் நானும் ஒரு கடமை உணர்ச்சி உள்ள மகனாக நடந்துகொண்டேன். ஆனால், என் தந்தையை ஒரு விஷயத்திற்காக நான் ஏங்கவைத்தேன்: எனக்காக. அவர் ஒரு அமைதியான மனிதர். நானும் அதேபோல் அமைதியாக இருப்பேன். நாங்கள் இருவரும் அருகருகே பல மணி நேரம் வேலை பார்ப்போம். ஆனால், ஒரு வார்த்தைகூட பேசியிருக்க மாட்டோம். என்னுடைய உள்ளான விருப்பங்களையும், கனவுகளையும், நம்பிக்கைகளையும், பயங்களையும் நான் ஒருபோதும் அவரிடம் சொன்னதில்லை; அவரும் கேட்டதில்லை.

சிறிது காலத்தில் என்னுடைய மவுனம் என்னை வாதித்தது உரைத்தது. ஒருவேளை என் முதல் மகன் பிறந்த சமயம் அதை நான் உணர்ந்திருக்கலாம். அல்லது ஒருவர் பின் ஒருவராக என் மகன்கள் வளர்ந்து வீட்டை விட்டுப் போனபோது உணர்ந்திருக்கலாம். இன்னும் ஒரு நல்ல மகனாக நான் இருந்திருக்க வேண்டும் என்று இப்போது யோசிக்கிறேன்.

எத்தனை விஷயங்களை என் தகப்பனிடம் சொல்லியிருக்கலாம் என்று இப்போது யோசிக்கிறேன். என்னென்ன விஷயங்கள் அவர் என்னிடம் சொல்லியிருக்கலாம் என்றும் யோசிக்கிறேன். அவருடைய அடக்க ஆராதனையில், என்னுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறி அவர் உடல் அருகில் நின்றுகொண்டிருந்தேன். “இப்போது கால தாமதமாகி விட்டது. அப்படித்தானே?” என்று என் மனைவி அமைதியாகக் கேட்டாள். “ஆம் அப்படித்தான்”

இவை அனைத்தையும் பரலோகத்தில் சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கையில் நான் ஆறுதல் அடைகிறேன். ஏனென்றால் அங்கேதானே கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார் (வெளி. 21:4).

இயேசுவை விசுவாசிப்பவர்களுக்கு மரணம் அன்பை முடிவுக்குக் கொண்டுவருவதில்லை. மாறாக, மனத்தாங்கல்கள் இல்லாத நித்திய வாழ்க்கைக்கான ஆரம்பம்தான் மரணம்; உறவுகள் சீர்படுத்தப்பட்டு அன்பு நித்தியமாக வளரும். அங்கே பிதாக்களுடைய இருதயம் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயம் அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திரும்பும் (மல்கியா 4:6).

எப்போதும் இல்லாத நல்ல மாற்றம்

சால்மன் மீன் பிடிக்கும் ஒரு குழுவைப் பற்றிய ஒரு கதை உண்டு. மீன் பிடிப்பதற்காக நாள் முழுதும் செலவழித்துவிட்டு, ஒரு ஸ்காட்லாந்து விடுதியில் கூடி இருந்தார்கள். அந்தக் குழுவில் ஒருவர் தான் பிடித்த மீனைப் பற்றிக் கூறும்போது, கையை ஆட்டிப் பேசியதில், ஒரு கண்ணாடிக் குவளை சுவரில் பட்டு நொறுங்கி, வெள்ளைச் சுவரில் கறையை ஏற்படுத்தியது. அந்த மனிதர் விடுதிக் காப்பாளரிடம் மன்னிப்புக் கேட்டதோடு, தான் ஏற்படுத்திய சேதத்திற்கு பணம் செலுத்துவதாகக் கூறினார். ஆனாலும் சேதமடைந்த அந்தச் சுவரை அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அருகில் உட்கார்ந்திருந்த ஒருவர் “கவலைப் படவேண்டாம்” என்று சொல்லி, எழுந்து வந்து, தன்னிடமிருந்த ஒரு தூரிகையால், அந்த கறையைச் சுற்றி வரைய ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அந்தக் கறை ஒரு கலைமானாக மாறி இருந்தது. அந்த மனிதர் விலங்குகளை அழகாகப் படம் வரையக்கூடிய ஸ்காட்லாந்தைச் சேர்ந்த
சர் இ. ஹெச். லேண்ட்ஸியர்.

சங்கீதம் 51ஐ எழுதிய, இஸ்ரவேலின் மிகச் சிறந்த இராஜாவான தாவீது, தன்னுடைய பாவங்கள் காரணமாக, தன் மீதும், தன் இராஜ்யத்தின் மீதும் அவமானத்தை வரப்பண்ணினான். தன்னுடைய நண்பர்களில் ஒருவனின் மனைவியை அபகரித்ததோடு, அந்த நண்பன் மரணம் அடையும்படி செய்தான். இந்த இரண்டு செயல்களுக்குமே மரணம்தான் தண்டனை. அவன் வாழ்க்கையே பாழானதாகத் தோன்றியது. ஆனால் அவன் கடவுளிடம் மன்றாடினான்: “உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்” (வச. 12).

தாவீதைப் போல, நாமும் கடந்த காலத்தில் ஏதோ அவமானமான செயல்களைச் செய்திருக்கலாம். அந்த நினைவுகள் நம்மைத் துரத்தி, இரவில் நம்மை தூக்கம் இழக்கச் செய்யலாம். நாம் செய்த காரியங்களை அழிக்க முடியாதா அல்லது சரியாக மீண்டும் செய்ய முடியாதா என்று நினைக்கலாம். 

ஆனால் கடவுளின் கிருபை நம் பாவங்களை மன்னிப்பதோடு, அவற்றின்மூலம் நம்மை முன்பை விட நல்லபடியாக மாற்றக்கூடியது. கடவுள் எதையுமே வீண் செய்வதில்லை.

நிலைத்திருக்கும் மகிழ்ச்சி

நம்முடைய சொந்த வழியில் செயல்களைச் செய்வதாலேயே மகிழ்ச்சி கிடைக்கும் என சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், அது உண்மையல்ல. அப்படிச் செய்வது வெறுமையையும், பதட்டத்தையும், தலைவலியையுமே தரும்.

மக்கள், தாங்கள் ஏதோ ஒன்றிலிருந்து தப்பித்துக் கொள்வதே மகிழ்ச்சி எனக் கருதுவதாகக் கவிஞர் W.H. ஆடன் கூறுகின்றார். “பேய்கள் நிறைந்த காட்டில் தொலைந்து போனவர்கள், இரவைக் கண்டு பயந்த குழந்தைகள், இது வரை மகிழ்ச்சியையும், நல்லதையும் காணாதவர்கள்” என இவர்களைப் பற்றி எழுதுகின்றார்.

நம்முடைய பயத்திற்கும், மகிழ்ச்சியின்மைக்கும் தீர்வு என்ன என்பதை சங்கீதக்காரன் தாவீது பாடலாகத் தருகின்றார். “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவி கொடுத்து, என்னுடைய எல்லா பயத்துக்கும் என்னை நீங்கலாக்கி விட்டார்” (சங். 34:4). தேவன் விரும்பும் வகையில் காரியங்களைச் செய்வதே மகிழ்ச்சியாகும். இந்த உண்மையை நாம் ஒவ்வொரு நாளும் சரிபார்க்க முடியும். “அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்;” என தாவீது எழுதுகின்றார் (வச. 5). இதனை நீ முயற்சி செய்து பார், நீயே தெரிந்து கொள்வாய். இதனையே “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்” (வச. 8) என தாவீது கூறுகின்றார்.

“காண்பவை நம்பக் கூடியவை” என நாம் சொல்கின்றோம். இப்படித்தான் இவ்வுலகக் காரியங்களை நாம் தெரிந்து கொள்கின்றோம். அதற்கான நிரூபணத்தைக் காட்டு, நான் நம்புகிறேன் என்கின்றோம். ஆனால், தேவன் அதனை மாற்றிச் சொல்கின்றார். நம்புகிறவற்றையே நாம் காண்கின்றோம். “ருசிபார் அப்பொழுது உனக்குத் தெரியும்” என்கின்றார் தேவன்.

தேவனுடைய வார்த்தையை நம்பு, தேவன் உனக்கு என்ன கட்டளையிடுகிறாரோ, அதைச் செய், அப்பொழுது காண்பாய். சரியானவற்றைச் செய்ய அவருடைய கிருபையைத் தருகின்றார். அதற்கும் மேலாக அவர் உனக்காகத் தம்மையே தந்தார். அது ஒன்றுதான் நன்மைக்கெல்லாம் ஊற்று. அதிலிருந்துதான் நிலையான மகிழ்ச்சி கிடைக்கும்.

நம்மைப் போன்ற பாவிகள்

என்னுடைய சிநேகிதியின் பெயர் ஈடித். அவர் தான் இயேசுவைப் பின்பற்ற தீர்மானம் செய்த நாளைக் குறித்து எனக்குச் சொன்னாள்.

ஈடித் தேவனைப் பற்றி எந்த அக்கறையும் கொண்டவளல்ல. ஒரு நாள் தன் ஆன்மாவில் ஏற்பட்ட விரக்தியோடு, அந்த ஞாயிறு காலை, தன் வீட்டின் அருகிலுள்ள ஆலயத்தினுள் சென்றாள். அன்றைய தினம் போதகர் வேதாகமத்திலிருந்து வாசித்த பகுதி லூக்கா 15:1-2 “சகல ஆயக்காரரும் பாவிகளும அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும், வேதபாரகரும் முறுமுறுத்து, அவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்” என்பதாக வாசிக்கப்பட்டது. ஆனால், அது ஈடித்தின் காதில் “இவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடு ஈடித்தையும் ஏற்றுக் கொண்டார்” என்பதாக விழுந்தது. உடனே அவள் தன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தாள். சற்று நேரத்தில் தான் தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்து கொண்டாள். ஆனால். இயேசு பாவிகளை ஏற்றுக் கொண்டார் என்ற எண்ணமும் அதில் ஈடித்தும் அடங்குவாள் என்ற எண்ணமும் அவளில் தங்கி விட்டது. அன்று மாலை அவள் இயேசுவை நெருங்கி வரத் தீர்மானித்தாள். அவரின் வார்த்தைக்குச் செவி கொடுத்தாள். சுவிசேஷங்களை வாசிக்க ஆரம்பித்தாள். தன்னுடைய நம்பிக்கையை இயேசுவின் மீது வைத்து அவரைப் பின் தொடர்ந்தாள்.

இயேசுவின் நாட்களில் இருந்த வேதபாரகர்கள், இயேசு பாவிகளோடு உணவருந்தினார், அநியாயக்காரரோடு சாப்பிட்டார் என்ற உண்மையை அவதூறான செய்தியாகப் பரப்பினர். அவர்களுடைய சட்டம் அவர்களை அத்தகைய ஜனங்களோடு பழகுவதைத் தடுத்தது. ஆனால், இயேசு அவர்கள் உருவாக்கிக் கொண்ட சட்டத்திற்கு எந்த கவனமும் செலுத்தவில்லை அவர் புறக்கணிக்கப்பட்டவர்களையும், தள்ளப்பட்டவர்களையும், அவர்கள் எவ்வளவு தூரம் விலகியிருந்தாலும் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

இப்பொழுதும் இது உண்மை. இயேசு பாவிகளை ஏற்றுக் கொள்கின்றார்;. உன்னையும் ஏற்றுக் கொள்கின்றார்.

உன்னுடைய பேராவல் எது?

நான் செல்லும் வங்கியில் பணிபுரியும் ஒருவர் தன்னுடைய ஜன்னலின் அருகில் ஷெல்பை கோப்ரா ரோட்ஸ்டர் காரின் புகைப்படத்தை வைத்திருந்தார். (கோப்ரா என்பது போர்ட் கம்பெனியின் ஓர் உயர்தர கார்).

ஒரு நாள் நான் வங்கியில் என்னுடைய தொழில் சம்பந்தமான வேலையை செய்துகொண்டிருந்த போது, நான் அவரிடம் இந்த புகைப்படத்திலுள்ளது. அவருடைய காரா? எனக் கேட்டேன். “இல்லை” என பதிலளித்தார். “அது என்னுடைய பேராவல். நான் ஒவ்வொரு நாள் காலையும் எழுந்து வேலைக்குச் செல்வதே அதற்காகத்தான். ஒருநாள் நான் அந்தக் காரின் சொந்தக்காரனாவேன்” என்றார்.

நான் அந்த இளைஞனின் பேராவலைப் புரிந்து கொண்டேன். என்னுடைய நண்பர் ஒருவர் கோப்ரா கார் வைத்திருக்கின்றார். ஒரு சமயம் நான் அதனை ஓட்டினேன். அது ஒரு சாதாரண இயந்திரம்! உலகிலுள்ள அநேகக் காரியங்களைப் போன்றே கோப்ராவும் ஒன்று. அதற்காகவே வாழ்கின்ற வாழ்க்கை அர்த்தமற்ற ஒன்று, அளவிற்கு விலையேறப்பெற்றதன்று. தேவனை விட்டு விட்டு பிற பொருட்களை நம்புகிறவர்கள் “முறிந்து விழுந்தார்கள்” (சங். 20:8) என சங்கீதக்காரன் குறிப்பிடுகின்றார்.

ஏனெனில், நாம் தேவனுக்கென்று உருவாக்கப்பட்டோம். நம் அனுதின வாழ்வில் நாம் உண்மையென நம்பியிருக்கும் வேறெதுவும் நிலையானதல்ல. நாம் அதையும், இதையும் வாங்குகின்றோம். ஏனெனில், இவை நமக்கு நிரந்தர மகிழ்ச்சியைத் தருமென நாம்’ நினைக்கின்றோம். ஒரு குழந்தையைப் போன்று, ஒரு டஜன் அல்லது அதற்கும் மேலாக கிறிஸ்மஸ் பரிசுகளைப் பெற்றிருந்தாலும் “இவ்வளவு தானா?” என நமக்குள்ளே கேட்கின்றோம். எப்பொழுதும் ஏதோ ஒன்று இல்லாதது போலவே தோன்றுகிறது.

இவ்வுலகிலுள்ள எந்தவொரு மிகச் சிறந்த பொருளாலும் நம்மை முழுவதும் திருப்திப்படுத்த முடியாது. அவற்றில் ஏதோ ஓர் அளவு இன்பம் இருக்கலாம். ஆனால், அந்த மகிழ்ச்சி சீக்கிரத்தில் மறைந்து விடும் (1 யோவா. 2:17) “தேவனிடமிருந்தேயன்றி, வேறோன்றின் மூலமாகவும் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் பெற முடியாது”. அப்படித் தரக் கூடிய ஒரு பொருளும் இல்லை என சி.எஸ். லூயிஸ் கூறுகின்றார்.

முகங்கள்

எங்களுடைய பேத்தி சாரா மிகவும் சிறியவளாக இருந்தபோது, நாம் மரித்தபின் என்ன நடக்கும் என்று எனக்கு விளக்கினாள். “உங்களுடைய முகம் மட்டும்தான் மோட்சத்திற்குச் செல்லும். உங்கள் சரீரம் செல்வதில்லை. அங்கு உங்களுக்கு ஒரு புதிய சரீரம் கொடுக்கப்படும். ஆனால், அதே முகம்தான் இருக்கும்: என்றாள்.

நித்திய வாழ்வினைக் குறித்து சாராவின் புரிந்து கொள்ளல் குழந்தைத்தனமானது. ஆனாலும், அவள் உள்ளான ஓர் உண்மையை நன்கு புரிந்து கொண்டிருக்கின்றாள். ஒரு வகையில் நம்முடைய முகங்கள்தான், காணப்படாத நம் ஆன்மாவின் ஒரு பிரதிபலிப்பாகும்.

நம்முடைய தொடர்ச்சியான கோபமான பார்வை சில நாட்களில் நம் முகத்தில் படிந்துவிடும் என்று என் தாயார் சொல்வதுண்டு. அவர்கள் ஞானத்தோடுதான் கூறியிருக்கிறார்கள். கவலை தோய்ந்த புருவங்கள், கோபம் நிறைந்த வாய், அலட்சியப்பார்வை ஆகியவை பரிதாபநிலையிலிருக்கின்ற ஆன்மாவை வெளிப்படுத்துகின்றன. மாறாக, வெளிப்புற சுருக்கங்களும், தழும்புகளும், மற்ற தோற்றத்தில் மாற்றங்கள் யாவும் இருப்பினும், கனிவான கண்களும், மென்மையான தோற்றமும், மலர்ந்த வரவேற்கும் புன்னகையுமே உள்ளார்ந்த மாற்றத்தின் வெளிப்பாடுகளாகும்.

நாம் பிறக்கும் போதிருந்த முகத்தை மாற்ற முடியாது. ஆனால், நாம் எத்தகைய மனிதனாக வளர்கிறோம் என்பதை மாற்ற முடியும். நாம் தாழ்மை, பொறுமை, இரக்கம், சகிப்புத்தன்மை, நன்றியுணர்வு, மன்னிப்பு, சமாதானம் மற்றும் அன்பு (கலா. 5:22-26) ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள ஜெபிப்போம்.

தேவனுடைய கிருபையினால் அவருடைய சித்தமான நேரத்தில் நானும் நீயும் அவரைப் போல உள்ளான மாற்றத்தைப் பெற்றுக்கொள்வோம். அவருடைய தன்மையை நம்முடைய வயதான முகங்கள் பிரதிபலிக்கும் என்று ஜான்டோன் (1572-1631) என்ற ஆங்கில கவிஞர் “நம்முடைய வயதான நாட்களிலேயே நம்முடைய அழகு வெளிப்படும்” என்று கூறினார்.

வாக்குத்தத்தங்களில் உறுதியாய் நிற்றல்

என்னுடைய சிநேகிதியின் சகோதரன் அவளிடம் (அவர்கள் இருவரும் குழந்தைகளாயிருந்த போது) ஒரு குடையினால் அவளைத் தாங்க முடியும் எனவும், அவள் நம்பினால் செய்து பார்க்கலாம் எனவும் உறுதியளித்தான். அவளும் நம்பிக்கையோடு ஒரு கிடங்கின் கூரையிலிருந்து குடையைப் பிடித்து கொண்டு குதித்து, கீழே தரையில் மோதி சிறிய தலைக் காயத்தை ஏற்படுத்திக் கொண்டாள்.

தேவன் நமக்கு வாக்களித்ததை நிறைவேற்றுவார். ஆனால் நாம் ஒரு வாக்குத்தத்தத்தை தேவன் நிறைவேற்றும்படி கேட்கும்போது, நாம் தேவனுடைய உண்மையான வார்த்தையில்தான் நிற்கின்றோமா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தேவன் வாக்களித்ததைத் தருவார் என்ற உறுதியைப் பெற முடியும். நம்பிக்கை மட்டும் தனித்திருந்தால் வல்லமையற்றது. ஆனால் அது தேவனுடைய தெளிவான உறுதியான வாக்கின் மீது நிற்கும்போது மட்டுமே அதைச் செயல்படுத்த முடியும்.

இங்கே ஒரு நிகழ்வைப் பார்ப்போம். ‘‘நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார்” (யோவா. 15:7-8). இவை, தேவன் நாம் உச்சரிக்கும் எந்த ஜெபத்திற்கும் பதிலளிப்பார் என்பதாகக் கூறும் வார்த்தைகளல்ல.  மாறாக, பவுல் அப்போஸ்தலன் ‘‘ஆவியின் கனிகள்” (கலா. 5:22-23) என்று குறிப்பிடும் கனிகளை நம் வாழ்வில் தந்து நீதியாய் வாழ நாம் கொண்டுள்ள ஏக்கங்களை அவர் நிறைவேற்றுவார் எனக் கூறும் ஒரு வாக்குத்தத்தமாகும். நாம் பரிசுத்தப்படும்படி தாகத்தோடும், பசியோடும் தேவனிடம் கேட்கும்போது, தேவன் அதனை நிறைவேற்றத் தொடங்குவார். இந்த பரிசுத்தமாகுதல் ஒரு நாளில் நடைபெறும் காரியமல்ல. அதற்கு நேரமதிகமாகும். நம் உடல் வளர்ச்சியைப் போன்று ஆவியின் வளர்ச்சியும் படிப்படியாகத்தான் நடைபெறும். எனவே சோர்ந்துபோக வேண்டாம். தேவன் உன்னைப் பரிசுத்தப்படுத்தும்படி தொடர்ந்து கேள். அவருடைய வேளையில் அவருக்கு சித்தமான இடத்தில் அது உனக்காக நிறைவேற்றப்படும். தேவன் நிறைவேற்றாத காரியங்களை நமக்கு வாக்களிப்பதில்லை.

காத்திருக்கும் காலம்

அநேக குழந்தைகள் புத்தகங்களை எழுதிய டாக்டர்.சியூஸ் கூறுகிறார்: “தூண்டிலில் எப்பொழுது மீன் அகப்படும்,? பட்டம் விட எப்பொழுது காற்றடிக்கும், ? அல்லது எப்பொழுது வெள்ளி இரவு வரும் ?….என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஏதோ ஒரு காரியம் நடக்க காத்திருக்கின்றனர்.”

வாழ்க்கையின் அதிகமான பகுதி காத்திருப்பதிலேயே கடந்துவிடுகிறது. ஆனாலும் தேவன் எவ்விதத்திலும் அவசரப்படுவதில்லை - அல்லது அவசரப்படாதவர் போல் காணப்படுகிறார். ‘தேவன் தமக்கென்று ஒரு நேரத்தையும், தாமதத்தையும் உடையவர்’ என்று ஒரு பழம்பெரும் கூற்று சொல்லுகிறது. ஆகையால் நாம் காத்திருக்கிறோம்.

காத்திருப்பது உண்மையில் கடினமானதே. கையை காலை பிசைவோம், அங்குமிங்கும் அலைவோம், பெருமூச்சு விடுவோம், விரக்தியின் உச்சத்தில் உள்ளே புழுங்குவோம். இந்த கொடூரமான மனுஷனோடு நான் ஏன் வாழனும்? இந்த கஷ்டமான வேலை, இந்த தகாத நடத்தை, இந்த வியாதிப்போராட்டம், இன்னும் எத்தனை காலம்தான் இதை சகிக்கனும்? ஏன் ஆண்டவர் பதிலளிக்காமல் உள்ளார்?

ஆண்டவருடைய பதில்: “சற்றே பொறுத்திருந்து நான் செய்யும் காரியத்தை பார்”

வாழ்க்கையை நமக்கு போதிக்கும் சிறந்த ஆசிரியர்களில் ‘காத்திருத்தலும்’ ஒன்று. அதன் மூலமாகவே நாம் ஆண்டவர் நமக்குள்ளும், நமக்காகவும் கிரியை செய்யும்வரை காத்திருப்பதினால் காத்திருத்தலின் பண்பைக் கற்றுக்கொள்கிறோம். காத்திருக்கும் அனுபவத்திலே தான் நாம் சகிப்புத்தன்மை, காரியங்கள் நமக்கு சாதகமில்லாது போனாலும் தேவனுடைய அன்பு , மற்றும் நன்மையின்மேல் நம்பிக்கை வைக்கும் திறன் (சங். 70:5) போன்றவைகளில் வளருகிறோம்.

ஆனாலும், காத்திருத்தல் ஒரு கொடுமையான, பல்லை கடிக்கும் அனுபவமாக இருக்க வேண்டியதில்லை. காத்திருப்பின் நாட்களில் நாம் அவருக்குள் “மகிழ்ந்து களிகூரலாம்” (வச. 4). இம்மையானாலும் மறுமையானலும், ஆண்டவர் நம்மை ஏற்ற நேரத்தில் விடுவிப்பார் என்கின்ற நம்பிக்கையோடு நாம் காத்திருப்போம். ஆண்டவர் எப்போதும் அவசரப்படுகிறவரல்ல, அவர் எப்போதும் சரியான நேரத்தில் வருவார்.