எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சிண்டி ஹெஸ் காஸ்பர்கட்டுரைகள்

புகழும் தாழ்மையும்

நம்மில் அநேகர் புகழ்ச்சியின் மேல் தீரா ஆசை கொண்டுள்ளோம். அதாவது, ஒன்று நம்முடைய புகழ்ச்சியை குறித்த ஆசை அல்லது புகழ்ச்சிமிக்க நபர்களின் அன்றாட வாழ்வின் காரியங்களை அப்படியே பின்பற்ற தீரா ஆசை. சர்வதேச புத்தகம் அல்லது சினிமா நட்சத்திர சுற்றுப்பயணம், இரவு நேர நட்சத்திர நிகழ்ச்சிகள், டிவிட்டரில் லட்சக்கணக்கில் தங்களை பின்தொடர்பவர்கள் என பலவித ஆசைகள்.

அண்மையில் அமெரிக்காவில் இணையதளத்தை அலசி ஆராய்ந்து பார்த்து, புகழ்மிக்க நபர்களை வரிசைப்படுத்தும் ஒரு கணக்கு வழிமுறை (algorithm) ஆய்வாளர்களால் இதற்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. இந்த தரவரிசையில், வரலாற்றில் மிகவும் புகழ்வாய்ந்த மனிதராக இயேசுவே முன்னிலை வகித்தார்.

ஆனால் புகழ்ச்சியை இயேசு ஒருநாளும் விரும்பியதே இல்லை. அவர் இந்த பூமியில் இருந்த பொழுது அதை நாடித் தேடவும் இல்லை (மத். 9:30; யோவா. 6:15). ஆனால், அவரைப் பற்றிய செய்தி கலிலேயா எங்கும் விரைந்து பரவிய பொழுது புகழ்ச்சி அவரைத் தேடி வந்தது (மாற். 1:28; லூக். 4:37).

இயேசு சென்ற இடமெல்லாம், கூட்டம் கூடியது. அவர் செய்த அற்புதங்கள் மக்களை அவரிடம் கொண்டு வந்தது. ஆனால் அவர்கள் அவரை பலவந்தமாய் ராஜாவாக்க நினைத்தபொழுது, அவர் அவர்களிடமிருந்து நழுவிக் கொண்டார் (யோவா. 6:15). தன் பிதாவின் நோக்கத்திற்குள்ளாக தன்னை இணைத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் அவருடைய சித்தத்திற்கும், நேரத்திற்கும் தன்னை ஒப்புக்கொடுத்தார் (4:34; 8:29; 12:23). “மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலி. 2:8).

புகழ் எப்பொழுதும் இயேசுவின் இலக்கு அல்ல. அவருடைய நோக்கம் மிக எளிமையானது. தேவனுடைய குமாரனாக, அவருக்கு கீழ்படிந்து, தாழ்மையோடு தாமாகவே தன்னைத்தானே நம்முடைய பாவங்களுக்காக ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார்.

பருகக்கூடிய புத்தகம்

உலகின் சில பகுதிகளில் சுத்தமான குடிநீர் கிடைப்பது மிக அரிதாக இருப்பதால், தண்ணீரே ஜீவன் என்ற நிறுவனம் “பருகக்கூடிய புத்தகம்” என்ற மிகச்சிறந்த மூல ஆதாரத்தை உருவாக்கியது. அந்தப் புத்தகத்திலுள்ள காகிதங்களில் பூசப்பட்டிருந்த மிக நுன்னிய வெள்ளித் துகள்கள் 99.9 சதவீத நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை வடிகட்டி விடும் தன்மை உடையது. அப்புத்தகத்திலிருந்து கிழித்து பயன்படுத்தப்பட்ட காகிதத்தை மறுபடி மறுபடியும் பயன்படுத்தி 100 லிட்டர் சுத்தமான தண்ணீரை மிகக்குறைந்த விலையில் பெற இயலும்.

வேதாகமமும் வழக்கத்திற்கு மாறான “பருகக்கூடிய” புத்தகமாகும். யோவான் 4ம் அதிகாரத்தில் சிறப்பான தண்ணீரைப் பற்றியும் வாசிக்கிறோம். கிணற்றண்டை இருந்த அந்த பெண்ணிற்கு சரீர தாகத்தை தீர்ப்பதற்கு தேவையான, சுத்தமான தண்ணீருக்கும் மேலாக, தெளிவான ஜீவத்தண்ணீர் தேவையாக இருந்தது. அந்த ஜீவத்தண்ணீரை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிய மிக ஆவலாக இருந்தாள். தேவனிடமிருந்து மட்டும் கிடைக்கக்கூடிய கிருபையும், மன்னிப்பும் அவளுக்குத் தேவையாக இருந்தது.

தேவகுமாரனாகிய இயேசு மட்டுமே “ஜீவதண்ணீரைக்” கொடுக்கக்கூடியவர், என்று கூறும் தேவனுடைய வார்த்தையே (வேதாகமம்) தலைசிறந்த “பருகக்கூடிய” புத்தகமாக உள்ளது. இயேசு அருளும் அந்தத் தண்ணீரைக் குடிக்கிறவன் “நித்திய ஜீவகாலமாக ஊறுகிற நிரூற்றை” அவன் உள்ளத்திற்குள்ளாக அனுபவிப்பான்.

ஆயத்தமாகுதல்

சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த என் மாமனாருடைய உடலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது, அவருடைய மகன்களில் ஒருவன், அவர் உபயோகப்படுத்திய சுத்தியை கூப்பியிருந்த அவருடைய கைகளுக்குள் செருகிவிட்டார். வருடங்கள் கழித்து, என்னுடைய மாமியார் மரித்த பொழுது, அவருடைய ஒரு பிள்ளை இரு பின்னல் ஊசிகளை அவருடைய விரல்களுக்கடியில் செருகிவிட்டார். அவர்களுடைய வாழ்நாட்களில் எவ்வளவாய் அக்கருவிகளை அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பதை நினைக்கும் பொழுது, இச்செயல்கள் ஆறுதலைக் கொண்டுவந்தது.

நிச்சயமாக நித்தியத்தில் அவர்களுக்கு இக்கருவிகள் தேவைப்படாது தான். அடுத்த வாழ்விற்கு தங்களை தயார் செய்து கொள்ள உதவியாக பணத்தையோ, ஆயுதங்களையோ அல்லது…

ஞாபகத்தில் வைத்திருத்தல்

வயது முதிர்ச்சி அடையும் பொழுதுள்ள கஷ்டங்களில் ஒன்று நினைவாற்றலை இழப்பதும், சமீபகால நிகழ்வுகளை மறப்பதும் ஆகும். ஆனால், மறதி வியாதியான அல்ஷைமர் பற்றி ஆராய்ச்சி செய்த நிபுணரான டாக்டர் பென்ஜமின் மாஸ்ட், அவ்வியாதியைப் பற்றி நம்பிக்கை அளிக்கக்கூடிய சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அல்ஷைமர் வியாதியினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூளை பொதுவாக முற்றிலும் சோர்வுற்றதாகவும், பழக்கப்படுத்திக் கொண்டவைகளை நினைவில் கொண்டதாகவும் இருக்கும். அவர்கள் அறிந்துள்ள பழைய பாடலை கேட்கவும், வரிவிடாமல் பாடவும் அவர்களால் கூடும். ஆவிக்கேற்ற ஒழுக்கங்களான வேதாகமத்தை வாசித்தல், ஜெபித்தல், பாடல்களை பாடுதல் போன்ற…

வெளிப்படையான பலவீனம்

என் தோள்பட்டையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்குப்பின் பல வாரங்களாகியும் தைரியமற்ற நிலையில் பயந்து கொண்டே இருந்தேன். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கையைத் தாங்கிப் பிடிக்கும் தூக்கை (ஸ்லிங்) நான் உபயோகித்ததால் அது எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. ஆனால் அறுவை சிகிச்சை வைத்தியரும், கைக்கு பயிற்சி கொடுக்கும் வைத்தியரும் ஸ்லிங்கை நான் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறினர். “காயம் குணமடைந்து வரும் நிலையில் ஸ்லிங் உபயோகிப்பது சுகமடைய உதவாது. அது உங்கள் பலவீனத்தை வெளிக்காட்டவே உதவும்.” என்று அவர்கள் தந்த குறிப்பில்…

உங்களுக்கு நோக்கமுண்டு

மேற்கு டெக்ஸாஸில் ஓர் உஷ்ணமான நாளில் ஓர் பெண் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் விளக்கு ஸ்தம்பம் அருகில் ஒரு எழுதப்பட்ட வாசகத்தைப் பிடித்துக்கொண்டு நிற்பதை என் மருமகள் வானியா பார்த்தாள். வாகனத்தை அவள் அருகாமையில் ஓட்டிச்சென்று, அதில் என்ன எழுதியிருக்கிறது என்று வாசிக்க முயற்சித்தாள். தனக்குள் அதில் ஆகாரம் அல்லது பணஉதவி கேட்டு எழுதியிருப்பாள் என்று எண்ணிக்கொண்டாள். ஆனால் இந்த மூன்று வார்த்தைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள். அதில் “உனக்கு நோக்கம் உண்டு” என்றிருந்தது.

தேவன் நம் ஒவ்வொருவரையும் ஓர் குறிப்பிட்ட நோக்கத்துடன்தான் படைத்திருக்கிறார். அதில்…

புதிதாக ஆரம்பியுங்கள்

எனது இளம் பிராயத்தில் லூசி மாட்மாண்ட் கோமரி எழுதின “கிரீன் கேபிளுடைய ஆனி” என்ற புத்தகம், எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்றாக இருந்தது. அப்புத்தகத்தில் வேடிக்கையான ஒரு பகுதியில், ஆனி, அவள் செய்து கொண்டிருந்த கேக்கில் வனிலா எசன்ஸ் சேர்ப்பதற்குப் பதிலாக தோலில் போடும் மருந்தை போட்டு விட்டாள். பின்பு கோபத்துடன் இருந்த அவளது காப்பாளரிடம் “இன்னமும் எந்த தவறுதல்களும் நடந்திராத நாளையதினத்தை எண்ணிப்பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறதல்லவா?” என்று நம்பிக்கையுடன் அறிவித்தாள்.

நானும் கூட அவ்வாறுதான் எண்ணினேன். நாளையதினம் ஒரு புதிய…

நம்மை நாமே கவனித்துக் கொள்ளல்

எனது கணவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்த அன்று, அவரது படுக்கையண்டை இருந்து அந்த இரவை மிகக் கவலையுடன் கழித்தேன். நடுப்பகலில் வழக்கமாக நான் அன்று செய்ய வேண்டிய சிகை திருத்தத்தைப் பற்றி நினைவு கூர்ந்து, சிக்குப் பிடித்த என் தலைமுடியை விரல்களால் போதிவிட்டுக் கொண்டு “நான் அதை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறினேன்.

“அம்மா, உங்கள் முகத்தைக் கழுவிக் கொண்டு ஏற்கனவே திட்டமிட்டபடி சிகை திருத்தத்திற்கு செல்லுங்கள்” என்று என் மகள் கூறினாள்.
“வேண்டாம், வேண்டாம் பரவாயில்லை, நான் இங்கே இருக்க…

மறைந்திருக்கும் பொக்கிஷம்

நானும், என் கணவரும் வெவ்வேறு முறைகளில் வேதத்தை வாசிப்போம். ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக டாம் கற்றிருந்தான். ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி மெதுவாக வாசிக்கும் பழக்கமுடையவர். நான் மேலோட்டமாக, மிகவேகமாக வாசித்து விடுவேன். ஆனால் என் கணவர் என்னை விட வசனங்களை மிக ஆழமாக வாசித்து, வாசிப்பதைத் தன் மனதில் ஞாபகம் வைத்துக் கொள்வார். ஒரு வாரத்திற்கு முன்னால் வாசித்ததைக் கூட ஞாபகப்படுத்தி மேற்கோள் காட்டுவார். நான் ஓர் புத்தகத்தை அல்லது திரையில் சிலவற்றை வாசித்து முடித்த அந்த நிமிடமே வாசித்தது என் ஞாபகத்திற்கு வராமல்…