எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பில் கிரவுடர்கட்டுரைகள்

ஆழமான இடங்கள்

19-ஆம் நூற்றாண்டில் நடந்த அரசியல் மற்றும் சமூக எழுச்சியின் காலத்தில் வாழ்ந்த கவிஞரும் நாவலாசிரியருமான விக்டர் ஹியூகோ (1802-1885) அவர் எழுதிய “லே மிசரபிள்ஸ்” (Les Miserables) என்ற புத்தகத்திற்கு பிரசித்தி பெற்றவர். ஒரு நூற்றாண்டு கழித்து இசை தழுவிய படமாக எடுக்கப்பட்டு மிகவும் பிரபலமான திரைப்படமாக கருதப்படுகின்றது. அனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லை. ஹியூகோ கூறின படி “சொற்களால் விவரிக்க முடியாததை இசை வெளிப்படுத்துகிறது மற்றும் அதை குறித்து சொல்லாமலும் இருக்க முடியாது”.
சங்கீதக்காரர்களும் அதை ஒப்புக்கொள்வார்கள். சங்கேத புத்தகத்தில் உள்ள அணைத்து பாடல்களும் ஜெபங்களும் நம் வாழ்வில் தவிர்க்க முடியடா வலிகளையும் கஷ்டங்களையும் பிரதிபலிக்கின்றது. அதன் வார்த்தைகள் நம்மால் அணுக முடியாத இடங்களுக்குள் சென்று நம்கி ஆறுதல் அளிக்கின்றது. எடுத்துக்காட்டாக சங்கீதம் 6:6ல் தாவீது “என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்” என்றுஅழுகிறார்.

வசனமாகிய சங்கீத பாடல்களில் அத்தகைய ஆழமான நேர்மையை கவர்ந்திருப்பது நம்மை நன்றாக ஊக்குவிப்பதாக இருக்கிறது. நமக்கு உதவும் படியும் ஆறுதல் அளிக்கும்படியும் அவர் ப்ரசன்னத்திற்குள்ளாக அழைக்கும் தேவனிடம் நம் பயன்களை கொண்டு வரும்படி அழைக்கிறது.

வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை இசை வெளிப்படுத்தக்கூடும். அந்த உணர்ச்சியை நாம் பாடலாகவோ ஜெபமாகவோ அல்லது அழுகையாகவோ வெளிப்படுத்தும் போது நம்மால் அடைய முடியாத ஆழமான இடங்களில் தேவன் தம் வார்த்தைகளால் நம் இருதயத்தில் சமாதானம் தருகிறார்.

சிலுவையின் மொழி

'சொல்வதினால் மட்டும் அவர்கள் யார் என்பதை ஒருவர் அறிந்துக்கொள்ளுவதில்லை. அவைகள் காட்டப்படவேண்டும்" என்று பாஸ்டர் டிம் கெல்லர் கூறுகிறார். இது செயல்கள் சொற்களைவிட சத்தமாக பேசுகின்றன என்ற பழமொழியின் ஒரு பயன்பாடு. தங்கள் துணைகள் தங்களை கவனிப்பதும், தங்களிடம் அன்பு செலுத்துவதின் மூலமே பாராட்டப்படுகின்றனர் என்று வாழ்க்கைத்துணைகள் காண்பிக்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அன்பாக கவனிப்பதன் மூலம் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள் என்று காண்பிக்கின்றனர். பயிற்சியாளர்கள் விளையாட்டு வீரர்களை அவர்களுடைய வளர்ச்சியில் முதலீடு செய்வதன் மூலம் திறனைக் காட்டுகிறார்கள். மற்றும் அது அப்படியே நீடிக்கிறது. அதே போல வேறுபட்ட செயலானது மக்களுக்கு வலிமிகுந்த இருண்ட செய்திகளை கொடுக்கும்.

ஊலகத்தில் உள்ள அனைத்து செயல்-அடிப்படையிலான செய்திகளிலும் மிக முக்கியமானது ஒன்று உள்ளது. தேவனின் பார்வையில் நாம் யார் என்றுக் காட்ட விரும்பும்போது சிலுவையில் அவர் செய்த செயல்களைத் தவிர வேறு எதையும் பார்க்கவேண்டியதில்லை. ரோமர் 5:8ல் பவுல் இவ்வாறாக கூறுகிறார், 'நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்". நாம் யாரென்று சிலுவை நமக்கு காண்பிக்கிறது : தேன் தம்முடைய ஒரே பேரான குமாரனைத் தந்தருளி இவ்வளவாய் நம்மிடத்தில் அன்பு கூர்ந்தார் (யோவா. 3:16).

உடைந்துப்போன மக்களின் உடைந்த கலாச்சாரத்தின் கலப்பு செய்திகளுக்கும், குழப்பமான செயல்களுக்கும் எதிராக தேவனுடைய இதயத்தின் செய்தி மிகத் தெளிவாக இருக்கிறது. நீங்கள் யார்? உங்களை மீட்டெடுக்க தன்னுடைய குமாரனையே கொடுத்து, தேவனால் அதிகமாக நேசிக்கப்பட்வர்கள் நீங்களே. அவர் உங்களுக்காக செலுத்திய விலைக்கிரயத்தை கருத்தில் கொள்ளுங்கள், அற்புதமான உண்மை என்னவென்றால், அவரைப் பொறுத்தவரை, நீங்கள் எப்போதும் மதிப்புக்குரியவர்கள்.

சமாதானம் பண்ணுகிறவர்கள்

முதலாம் உலக போர் வெடித்தபோது,பிரிட்டிஷ் ஆட்சி நிபுணர் சர். எட்வர்ட் க்ரெய் கூறியது என்னவென்றால் "யுரோப்பிலே  உள்ள விளக்குகள் அனைத்தும் அணைந்து விட்டன, இனி அவை பிரகாசிப்பதில்லை". க்ரெய் சொன்னது சரிதான். கடைசி போர் முடிந்த பிறகு சுமார் இரண்டு கோடி உயிர்கள் பறிக்கப்பட்டது, அதில் ஒரு கோடி மக்கள் பொது ஜனங்கள். மீதி இருக்கும் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் காயத்துடன் உயிர் பிழைத்தார்கள்.

நம் வாழ்க்கையிலும் பேரழிவுகள் ஏற்படலாம். நம் வீடு, வேலை ஸ்தலம், சபை, நம் வசிக்கும் பகுதிகள் இதைபோல் இருள் நிறைந்து மூடப்படலாம். இதற்காகவே தேவன் உங்களையும் என்னையும் அதன் நடுவில் வைத்து மாற்றம் உண்டு பண்ணும்படி அழைக்கிறார். அவர் தரும் ஞானமானது அந்த மாற்றத்தை ஏற்படுத்த மிகவும் அவசியமானது. இதைக்குறித்து அப்போஸ்தலனாகிய யோவான் "பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமும் உள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது"

"நீதி" என்கிற வார்த்தைக்கு அர்த்தம் "நேராக நடப்பது" அல்லது "உறவுகளை சரியாக கைக்கொள்ளுவது". சமாதானம் பண்ணுகிறவர்கள் தனித்துவமானவர்கள். அவர்களுடைய அறுவடையான கனியும் சமாதானமாய் இருக்கிறது. சமாதானம் பண்ணுகிறவர்கள் உடைக்கப்பட்ட உறவுகளை மீட்டுக்  கொள்ளுகிறார்கள். இயேசு சொன்னது போல் " சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் (மத் 5:9)". அவர் ஞானத்தில் சார்ந்திருக்கும் அவர் பிள்ளைகள், அவருடைய சமாதான கருவியாக தேவைப்படும் இடத்தில் வைக்கப்படுகிறார்கள்.

வாழ்க்கையின் வலுசர்ப்பங்களுடன் போராடுவது

நீங்கள் வலுசர்ப்பத்துடன் சண்டை போட்டதுண்டா?  இல்லை என்று சொன்னால் நூலாசிரியர் யூஜீன் பீட்டர்சன் உங்களுடன் ஒற்றுக்கொள்ள  மாட்டார். அவருடைய "ஒரே திசையில் நீடிய கீழ்ப்படிதல் " என்ற புத்தகத்தில் அவர் இவ்வாறு எழுதியிருக்கிறார்  "இந்த வலுசர்ப்பங்கள் நம்முடைய பயங்களே, நமக்கு வேதனை தரக்கூடியவற்றின் பயங்கரமான கட்டமைப்புக்களே.  ஒரு சாதாரண மனிதனை எதிர்கொள்ளும் அசாதரணமான வலுசர்ப்பம் நிச்சயமாக அவனை மேற்கொள்ளும்". அனால் பீட்டர்சன்-ன்  கருது? வாழ்க்கை இவ்விதமான வலுசர்ப்பங்களால் நிறைந்திருக்கிறது: சுகவீனம், வேலையின்மை, உடைந்த திருமணம், தூரம் போன பிள்ளை.  இந்த வலுசர்ப்பங்கள் நம்மால் தனித்து  சண்டை போட முடியாத அளவு பூதாகரமாக  இருக்கும் வாழ்க்கையின்  ஆபத்துகளும் ,பெலவீனங்களும்.

ஆனால் இந்த போர்க்களங்களில் நமக்கு ஒரு வீரர் இருக்கிறார். அவர் ஏதோ ஒரு கதை வீரன் அல்ல. கட்டுக்கதையில் வரும் வீரன் அல்ல - நம் சார்பில் சண்டையிட்டு நம்மை அழிக்க நினைத்த வலுசர்ப்பங்களை வென்ற நிகரற்ற வீரர். நம்முடைய சொந்த தோல்விகளின் வலுசர்ப்பமோ அல்லது நமது அழிவை விரும்பும் ஆவிக்குரிய எதிரியா, அவை எல்லாவற்றையும் விட நம்ம வீரர் பெரியவர், அதனால் பவுல் இயேசுவை பற்றி இவ்வாறு   எழுதுகிறார்  “துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்” (கொலோசெயர் 2:15). இந்த உடைந்த உலகத்தின்  எதிர்ப்புகள் அவருக்கு நிகர் அல்ல!

நம்முடைய வாழ்க்கையின் வலுசர்ப்பங்கள் மிகவும் பெரியவை  என்று நாம் உணரும்போது நாம் கிறிஸ்துவின் இளைப்பாற ஆரம்பிக்கலாம் . நாம் நம்பிக்கையுடன்     “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்”(1 கொரி. 15:57) என்று கூறலாம்.

பிரியாவிடை மற்றும் வணக்கம்

என் சகோதரன் டேவிட் திடீரென இருதய செயலிழப்பு காரணமாக இறந்த போது, என் வாழ்க்கையைப் பற்றிய  முன்னோக்கு, வியக்கத்தக்க முறையில் மாறியது. ஏழு பிள்ளைகளில் டேவ் நான்காவது பிள்ளை ஆனால் எங்களில் அவர்தான் முதலாவது மரித்தார். எதிர்பாராத விதத்தில் இறந்த அவருடைய மரணம் என்னை அதிகம் சிந்திக்க வைத்தது. எங்களுக்கு வயது செல்ல செல்ல எங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தில் ஆதாயத்திற்கு பதில் இழப்பையே நாங்கள் சந்திக்க வேண்டுமென்பது வெளிப்பட்டது. அந்த பிரியாவிடை, வணக்கத்தைப் போல பண்பு படுத்தப்படுவதாக இருக்கப் போகிறது.

அறிவுப்பூர்வமாக இவை எதுவுமே ஆச்சர்யமாக இல்லை - இது தான் வாழ்க்கை. ஆனால் இதை உணர்ந்துக்கொள்ளுதல், மூளைக்கு ஒரு மின்னல் ஒளி போன்ற உணர்வாயிருந்தது. இது வாழ்க்கை நமக்கு கொடுக்கும் ஒவ்வொரு கணமும்,  நேரம் அனுமதிக்கும் எல்லா வாய்ப்புகளுக்கும் ஒரு புதிய, முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது. பிரியாவிடையே தேவைப்படாத நாம் மறுபடியும் சந்திக்கும் உண்மைக்கு ஒரு பெரிய மதிப்பு கொடுத்தது.

இந்த உண்மை வெளிப்படுத்தல் 21:3-4 வசனங்களின் மையமாக காண்கிறோம். “தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். தேவன் தாமே அவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார். இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துப்போயின”.

இன்றைக்கு நாம் ஒருவேளை நீண்ட பிரியாவிடைகளை அனுபவித்துக்கொண்டிருக்கலாம், ஆனால் கிறிஸ்துவின் மரணத்திலும் அவருடைய உயிர்த்தெழுதலிலும் இருக்கிற நம்முடைய நம்பிக்கை, நமக்கு நித்திய வணக்கங்களை வாக்களிக்கிறது.

கிறிஸ்துவின் மரணம் நமக்கு வாழ்வைக் கொடுக்கின்றது

தெற்கு அமெரிக்காவில் வாழ்ந்த ஜோனா என்ற பெண், சிறைச்சாலையில் வாழும் கைதிகளுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கொடுப்பதன் மூலம், அவர்களுக்கு நம்பிக்கையை வழங்குவதில் கருத்தாயிருந்தார். ஜோனா அனுதினமும், மன்னிப்பையும், மனம் பொருந்துதலையும் பற்றிய ஒரு சிறிய சுவிசேஷ செய்தியுடன் சிறைக்கைதிகளைச் சந்தித்து வந்தாள். அவள் அந்த கைதிகளின் நம்பிக்கையைச் சம்பாதித்தாள், அவர்களும் தங்களின் குழந்தைப் பருவத்தில் தங்களுக்கு இழைக்கப் பட்ட    அநீதிகளைப் பகிர்ந்து கொண்டனர். அவளும், முரண்பாடுகளை எப்படி தீர்த்துக் கொள்வது என்பதைப் பற்றி அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தாள். அவள் அங்கு செல்வதற்கு முந்தின ஆண்டு, அந்த சிறைச் சாலையில், 279 வன்முறைச் செயல்கள், கைதிகளுக்கிடையேயும், காவலர் மீதும் நடத்தப்பட்டதாகவும், அடுத்த ஆண்டு, இரண்டு வன்முறைச் செயல்கள் மட்டுமே       நடந்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின” (2 கொரி.5:17) என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகின்றார். புதிதாக்கப்படுதலை ஃப்ளான்டர்- தாமஸ் கண்டது போல நாம் காணாவிட்டாலும், சுவிசேஷத்தின் வல்லமையே உலகிற்கு பெரும் நம்பிக்கையூட்டும் வல்லமை. புதிய படைப்புகள் என்பது எத்தனை ஆச்சரியமான      சிந்தனை! இயேசு கிறிஸ்துவின் மரணம், நம்மை அவரைப் போல மாற்றும் ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்கின்றது. நாம் அவரை முகமுகமாய் சந்திக்கும் போது, இந்த பயணம் முடிவடைகின்றது (1 யோவா. 3:1-3).

இயேசுவின் விசுவாசிகளாகிய நாம் புதிதாக்கப்பட்ட நம் வாழ்வைக் கொண்டாடுகின்றோம். ஆயினும் கிறிஸ்து அதற்காகச் செலுத்தின கிரயத்தை மறந்து விடக் கூடாது. அவருடைய மரணம் நமக்கு வாழ்வைக் கொடுக்கின்றது. “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2 கொரி .5:21).

வண்ணங்களின் அணிவகுப்பு

அநேக ஆண்டுகளாக, பல்வேறு தரப்பட்ட மக்களைக் கொண்ட, உலகிலேயே மிகப் பெரிய பட்டணமாக லண்டன் பட்டணம் கருதப்பட்டு வருகின்றது. 1933 ஆம் ஆண்டு, ஒரு பத்திரிக்கையாளர், இங்கிலாந்தின் மிகப் பெரிய தலை நகரமான லண்டனைக் குறித்து, “வெவ்வேறு வகையான நிறமும், மொழியும் கொண்ட ஜனங்களின் அணிவகுப்பு தான் லண்டன் பட்டணத்தின் சிறந்த அம்சமாகும்” என்றார். உலகெங்கும் உள்ள மணமும், ஓசையும், காட்சிகளும் கொண்ட மக்களின் அணிவகுப்பை இன்றும் காணலாம். உலகத்திலேயே மிகப்பெரிய பட்டணங்களுள் ஒன்றில் காணப்படும் மிகப் பெரிய வேறுபாடுகள் தான், அதனுடைய பிரம்மிக்கச் செய்யும் தோற்றத்திற்குக் காரணம் எனலாம்.

மனிதர்களால் நிரம்பிய எந்தப் பட்டணத்திலும் இருக்கின்ற பிரச்சனைகள் லண்டன் பட்டணத்திலும் இருக்கின்றது. மாற்றங்கள் சவால்களைக் கொண்டு வருகின்றது. சில வேளைகளில் கலாச்சாரங்கள் மோதுகின்றன. இதனாலேயே மனிதர்களால் கட்டப்பட்ட எந்த ஒரு பட்டணமும், நமது நித்திய வீட்டின் அதிசயத்தோடு ஒப்பிடத்தகுந்ததல்ல என்று கூறமுடியும்.

அப்போஸ்தலனாகிய யோவான், தேவனுடைய பிரசன்னத்துக்குள் பிரவேசித்த போது, வேறுபாடுகள் தான் பரலோக ஆராதனையின் முக்கிய அம்சமாக இருந்தது. அங்கு மீட்கப்பட்டவர்கள், “தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக் கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதியப் பாட்டைப் பாடினார்கள் (வெளி. 5:9-10).

பரலோகத்தை கற்பனை செய்து பார். உலகெங்கிலிருந்தும் வந்த வெவ்வேறு ஜனக் கூட்டத்தின் மக்கள், அனைவரும் இணைந்து, ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்ற அதிசயத்தைக் கொண்டாடுகின்றார்கள்! இயேசுவின் விசுவாசிகளாகிய நாம், அந்த வேறுபாட்டை இப்பொழுதே கொண்டாடுவோம்.

தேவனுடைய வழிநடத்துதலின் தேவை

அறிஞர் கென்னெத் பெய்லி, சாக்கி மாமாவை ஒரு நண்பனையும் விட மேலாகக் கருதினார். மிகப் பரந்த சகாரா பாலைவனத்துக்குள் சவாலான சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் போது, சாக்கி மாமாவைத் தான், அவருடைய நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகக் கருதினார். சாக்கி மாமாவைப் பின் தொடரும் பெய்லியும், அவருடைய குழுவினரும் தங்களுடைய முழு நம்பிக்கையையும் அவர் மீது வைத்தனர். மொத்தத்தில், “நாங்கள் செல்கின்ற இடத்தின் வழியை நாங்கள் அறியோம், எங்களை வழிதவறச் செய்தால், நாங்கள் அனைவரும் மரித்துப் போவோம். நாங்கள் எங்களது முழு நம்பிக்கையையும் உங்களின் தலைமையில் வைத்துள்ளோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறினர்.

சோர்ந்து, இருதய வேதனையோடு இருந்த ஒரு வேளையில், தாவீது மனித வழி நடத்துதலையெல்லாம் தாண்டி, தான் பணிசெய்கின்ற தேவனுடைய வழி நடத்துதலைத் தேடுகின்றார். சங்கீதம் 61:2 ல், “என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்” என்கின்றார். தேவனுடைய பிரசன்னத்தின் மறைவில் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி அவர் ஏங்குகின்றார் (வ.2-4).

வேதாகமம் விளக்குவது போல, “வழிதப்பிப் போன” ஆடுகளைப் போல காணப்படும் மக்களின் வாழ்க்கையில் தேவனுடைய வழி நடத்துதல் மிக அவசியம் (ஏசா.53:6). நாம் நம்முடைய சொந்த வழியில் நடந்தால், உடைந்து போன உலகமாகிய இந்த வனாந்தரத்தில் நம்பிக்கையை இழந்து தொலைந்து போவோம்.

ஆனால், நாம் தனித்து விடப்படவில்லை! நம்மை வழி நடத்த ஒரு மேய்ப்பன் உள்ளார், அவர் நம்மை “அமர்ந்த தண்ணீர்கள்” அண்டையில் கொண்டு போய், ஆத்துமாவைத் தேற்றி, நீதியின் பாதையில் வழி நடத்துகின்றார் (சங்.23:2-3).

தேவனுடைய வழி நடத்துதல் உனக்கு எங்கு தேவைப் படுகின்றது?  அவரை நோக்கிக் கூப்பிடு, அவர் உன்னை ஒரு போதும் விட்டு விலக மாட்டார்.

சமுதாய நினைவுகள்

அமைதியற்ற விசுவாசம் (Restless Faith) என்ற புத்தகத்தில், வேத அறிஞர் ரிச்சர்ட் மாவ் என்பவர் கடந்த காலத்தில் கற்றுக் கொண்டவற்றை நினைவில் வைத்திருப்பதின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறுகின்றார். சமூகவியலாளர் ராபர்ட் பெல்லா கூறிய, “சுகாதாரமான தேசங்கள் என்று கூறப்படுபவை, சமுதாய நினைவுகளைக் கொண்டுள்ளவை” என்ற கூற்றைக் குறிப்பிட்டார்.  இந்தக் கொள்கை மற்ற சமுதாய உறவுகளான குடும்பங்களுக்கும் பொருந்தும் என்கின்றார், பெல்லா. நினைவுகூருதல் என்பது சமுதாய உறவுகளில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது.

வேதாகமம் சமுதாய நினைவுகளைப் பற்றி கற்றுத் தருகின்றது. எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலரை மீட்பதற்கு தேவன் செய்த செயல்களை இஸ்ரவேலர் நினைவு கூருவதற்காக பஸ்கா விருந்து ஆசரிக்கும் படி அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது (யாத். 12:1-30). இன்றுவரை, உலகெங்கிலும் உள்ள இஸ்ரவேலர், ஒவ்வொரு வசந்த காலத்திலும் இந்த முக்கியமான சமுதாய நினைவைக் கொண்டாடி வருகின்றனர்.

கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு பஸ்கா மிகப் பெரிய அர்த்தத்தைக் கொடுக்கின்றது, ஏனெனில் பஸ்கா, மேசியா சிலுவையில் நிறைவேற்றின வேலையைக் சுட்டிக் காட்டுகின்றது. பஸ்கா ஆசரிப்பின் நாட்களில், இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முந்தின நாள் இரவில், அவர் தன்னுடைய நினைவாகக் கைக்கொள்ள வேண்டிய இராப்போஜனத்தை நிர்ணயித்தார். “அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து; இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார் என லூக்கா 22:19ல் காண்கின்றோம்.

ஒவ்வொரு முறையும் நாம் தேவனுடைய ராப்போஜனப் பந்தியைக் கொண்டாடும்படி சேரும் போது, தேவன் நம்மை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து இரட்சித்தார், நமக்கு நித்திய வாழ்வையும் கொடுத்தார் என்பதை நினைவு கூருகின்றோம். நாம் அனைவரும் சேர்ந்து நினைவுகூரத் தகுந்தது அவருடைய சிலுவை என்பதை இயேசுவின் மீட்கும் அன்பு நமக்கு நினைவுபடுத்துவாராக.