உண்மையான விடுதலை
அமிஸ்டட் (Amistad) என்ற ஆங்கில படத்தில் வரும் கதையில், 1839 ஆம் ஆண்டு, மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அடிமைகளை, வேறு இடத்திற்கு கொண்டு சென்று கொண்டிருந்த படகை, அந்த அடிமைகள் மேற்கொண்டனர், அந்த படகின் கேப்டனையும் வேறு சில நபர்களையும் கொன்றனர், ஆனால் உடனடியாக அவர்கள் பிடிபட்டனர், சிறையில் அடைக்கப் பட்டனர், பின்னர், விசாரணைக்கு கொண்டு செல்லப் பட்டனர், ஒரு மறக்க முடியாத நீதிமன்ற காட்சியில், அடிமைகளின் தலைவன், எப்படியாகிலும் தனக்கு விடுதலை தரும்படி, உணர்ச்சிவசத்தோடு கெஞ்சுகின்றான். மூன்று எளிய வார்த்தைகள், சங்கிலிகளால் கட்டப்பட்ட ஒரு மனிதனின் வாயிலிருந்து, உடைபட்ட ஆங்கில வார்த்தைகளாக திரும்பத் திரும்ப, மேலும் மேலும் வலிமையோடு வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன, அந்த நீதி மன்றமே அமைதியாக இருக்கின்றது, “எங்களுக்கு விடுதலை தாருங்கள்!” என்பதே அந்த வார்த்தைகள். அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட்டது, அந்த மனிதர்கள் விடுதலைப் பெற்றார்கள்.
இன்றைக்கு நம்மில் அநேகர் உடல் ரீதியாக கட்டப்பட்டவர்களாய் இல்லையெனினும், பாவத்தின் பிடியிலிருந்து ஆவியின் உண்மையான விடுதலையை இன்னமும் பெற்றுக் கொள்ளவில்லை. யோவான் 8:36ல் கூறப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகள் உண்மையான விடுதலையைக் கொடுக்கின்றது. “ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலையாவீர்கள்” என்கின்றார். இயேசு தன்னை உண்மையான விடுதலையைக் கொடுப்பவராகச் சுட்டிக் காண்பிக்கின்றார், ஏனெனில் அவரை விசுவாசிக்கிற யாவருக்கும் அவர் உண்மையான மன்னிப்பை வழங்குகின்றார். கிறிஸ்துவின் போதனையைக் கேட்ட சிலர் விடுதலையைப் பெற விரும்பினாலும் (வச. 33), இயேசுவைக் குறித்த அவர்களின் வார்த்தையும், நடத்தையும், செயலும் அவர்களை விடுதலை பெற முடியாதவர்களாகச் செய்தது.
அந்த அடிமையின் வேண்டுதலை எதிரொலிக்கின்றவர்களின் வார்த்தையைக் கேட்க இயேசு ஆவலாய் இருக்கின்றார், நாமும் “எனக்கு விடுதலையைத் தாரும்!” என்று கேட்போமா? அவநம்பிக்கையினாலும், பயத்தினாலும் மற்றும் தோல்வியினாலும் விலங்கிடப்பட்டவர்களாய் இருக்கின்றவர்களின் கதறலை கேட்க, மனதுருக்கத்தோடு இயேசு காத்திருக்கின்றார். விடுதலை இருதயத்தில் ஏற்பட வேண்டும். நம்மை பாவத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக தேவன் தம்முடைய குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பினார் என்பதை விசுவாசிக்கிறவர்களே, அவருடைய மரணம், உயிர்த்தெழுதலின் மூலம் விடுதலையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
உதவி செய்ய வல்லவர்
ஜோ தன்னுடைய வேலையிலிருந்து எட்டு வாரம் “இடைவெளியில்”, இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் படி வந்தான், அது அவனுக்கு விடுமுறை நாட்கள் அல்ல. அவனுடைய வார்த்தையில் கூறினால், “வீடற்றவர்களோடு, அவர்களில் ஒருவராய், பசியோடு, சோர்வுற்றவர்களாய், மறக்கப் பட்டவர்களாய் வாழ்வது எப்படி இருக்கும் என்பதை உணர்வதற்கு” வந்திருந்தான். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, முதன் முறையாக தெருவில் வசித்த அநுபவம் ஜோவிற்கு ஏற்பட்டது. அப்பொழுது அவன் வேலையில்லாதவனாய், தங்குவதற்கு இடமில்லாதவனாய் அந்த பட்டணத்திற்கு வந்திருந்தான். பதின்மூன்று நாட்களாக சிறிதளவு உணவு, உறக்கத்தோடு தெருவில் வாழ்ந்தான். இப்படியாக தேவன் அவனை தயாரித்து, பல ஆண்டுகளாக தேவையிலிருப்போருக்கு உதவும் படி வைத்துள்ளார்.
இயேசு இப்புவிக்கு வந்த போது, தான் இரட்சிக்கும்படி தேடி வந்த மக்களின் அநுபவங்களைப் பகிர்ந்து கொள்ள தெரிந்து கொண்டார். “பிள்ளைகள் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாய் இருக்க, அவரும் அவர்களைப் போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும் படிக்கு… அப்படியானார்” (எபி. 2:14). பிறப்பிலிருந்து மரணம் வரை, கிறிஸ்துவின் மனித அநுபவத்தில், பாவத்தைத் தவிர வேறு எதுவும் குறைவுபடவில்லை (4:15). அவர் பாவத்தை ஜெயித்ததினால், நாம் சோதனைக்குள்ளாகும் போது, அவர் உதவி செய்ய வல்லவராய் இருக்கின்றார்.
எனவே, இயேசு இப்புவியின் பாடுகளுக்கு புதிதானவர் அல்ல, நம்மை இரட்சிக்கும்படி வந்தவர், நம்மோடு தொடர்பில் இருக்கின்றார், அவர் நம்மீது ஆழ்ந்த அக்கரையுள்ளவராய் இருக்கின்றார், நம்முடைய வாழ்வில் எது வந்த போதும், நம்மை நம்முடைய எதிரியான பிசாசானவனிடமிருந்து மீட்டவர் (2:14), நமது மிகப் பெரிய தேவையின் போது உதவுவதற்கு நம்மருகிலே இருக்கின்றார்.
ஜீவனைப் பார்க்கிலும் நல்லது
மேரி இயேசு கிறிஸ்துவை நேசித்த போதிலும், அவளுடைய வாழ்வு மிகவும் கடினமாக இருந்தது. அவளுடைய இரண்டு மகன்கள் மரித்து விட்டனர், இரண்டு பேரன்களும் மரித்துப் போயினர், அவர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாயினர். மேரியும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டாள். ஆயினும், ஆலய ஆராதனைக்குச் செல்ல முடிந்த போது, அவள் தவறாமல் ஆராதனையில் கலந்து கொண்டு, திக்கு வாயோடு, தேவனைத் துதித்தாள், “என்னுடைய ஆன்மா தேவனை நேசிக்கிறது, அவருடைய நாமம் துதிக்கப் படுவதாக!” என்று ஆராதித்தாள்.
மேரி தேவனை ஆராதிப்பதற்கு அநேக ஆண்டுகளுக்கு முன்பே, தாவீது சங்கீதம் 63ஐ எழுதினார். இச்சங்கீதத்தினை அவர் யூதாவின் வனாந்தரங்களிலிருந்து எழுதினார் என்பதை அதன் தலைப்பிலிருந்து அறிகிறோம். அவர் விரும்பத்தகாத இடத்தில் இருந்த போதும், தனித்து விடப்பட்ட போதும் விரக்தியடையவில்லை, ஏனெனில் அவர் நம் தேவனை நம்பிக்கையாகக் கொண்டிருந்தார். “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும், தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது” (வச. 1) என்கின்றார்.
ஒரு வேளை நீயும் கஷ்டமான சூழ்நிலைகளில், வழிதெரியாமல், வசதியற்ற இடங்களில் இருக்கலாம். வசதியற்ற சூழல் நம்மைக் குழம்பச் செய்யலாம், ஆனாலும் நம்மை மிகவும் நேசிப்பவரை பற்றிக்கொண்டோமேயானால், நாம் தடுமாறத் தேவையில்லை (வ.3), அவர் நம்மை திருப்தியாக்குபவர் (வ.5), துணையாயிருப்பவர் (வச. 7), அவருடைய வலது கரம் நம்மைத் தாங்குகிறது (வ.8). நமது ஜீவனைப் பார்க்கிலும் அவரது அன்பு பெரிதாகையால், மேரியையும், தாவீதையும் போன்று நாமும், என் ஆத்துமா திருப்தியாகும், என் வாய் ஆனந்தக் களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும் என்று அவரைக் கனப் படுத்துவோமாக (வச. 3-5).
இயேசுவால் விடுதலை
“நான் என் தாயாரோடு அதிக நாட்கள் இருந்தமையால், அவள் வெளியேறினாள்!” இவை கே.சி.யின் வார்த்தைகள், தன் வாழ்வை இயேசுவுக்கு அர்ப்பணிக்கும் முன்பு, அவருடைய வாழ்வில் சோகம் நிறைந்திருந்தது. அவர் தன் போதை பழக்கத்தைத் தொடர, தனக்கன்பானவர்களிடமிருந்தும் திருட வேண்டியதாயிற்று என்பதை ஒத்துக்கொண்டார். இது அவருடைய கடந்த கால வாழ்க்கை, இப்பொழுது, அவர் தூய்மைப் படுத்தப்பட்ட பின்பு, தான் கடந்து வந்த வருடங்கள், மாதங்கள், நாட்களை நினைத்துப் பார்க்கிறார். நானும் கே.சி.யும் அமர்ந்து, தேவனுடைய வார்த்தைகளை, கிரமமாக கற்றுக்கொண்டிருக்கிறோம், இப்பொழுது ஒரு மாற்றம் பெற்ற மனிதனை நான் காண்கின்றேன்.
முன்பு அசுத்த ஆவிகளால் பிடிக்கப் பட்டிருந்த ஒரு மனிதனின் வாழ்வு, மாற்றப் பட்டதை மாற்கு 5:15ல் காண்கின்றோம். சுகம் பெறுவதற்கு முன்பு, உதவியற்றவன், வீடற்றவன், நம்பிக்கையிழந்தவன், கைவிடப்பட்டவன் ஆகிய வார்த்தைகளே அவனை விவரித்தன (வச. 3-5). இயேசு அவனை விடுவித்த பின்பு, இவையெல்லாம் மாறிவிட்டன (வச. 13). இயேசு கிறிஸ்து வருவதற்கு முன்பு, கே.சி. யின் வாழ்வும் இயல்பு வாழ்வைவிட வெகு தூரத்தில் இருந்தது. அவனுக்குள்ளேயிருந்த குழப்பத்தை, அவன் பயங்கரமாக வெளிப்படுத்தினான். இத்தகைய, காயப்படுத்தும் மக்கள், பாழடைந்த கட்டடங்களிலும், வாகனங்களிலும் மற்றும் யாருமற்ற இடங்களிலும் வாழ்கின்றனர், சிலர் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்தாலும், உணர்வு சார்ந்து தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்கின்றனர். கண்களால் காணமுடியாத சங்கிலிகள், அவர்களின் இருதயத்தையும், மனதையும் கட்டி வைத்திருப்பதால், அவர்கள் தங்களை, மற்றவர்களிடமிருந்து தனிமைப் படுத்திக் கொள்கின்றனர்.
கடந்த காலம், நிகழ்காலத்தில் ஏற்பட்ட காயங்கள், அவமானங்களின் மத்தியில் நம்முடைய நம்பிக்கைக்குரியவர் இயேசு ஒருவரே. இரக்கத்தின் கரங்களை விரித்தவராய், நமக்காகக் காத்திருக்கும் நம் தேவனிடம் லேகியோனோடும், கே.சி.யோடும் நாமும் ஓடிச் சென்று அவர் தரும் விடுதலையைப் பெற்றுக்கொள்வோம் (வச. 19).
அதில் அவர்களுடனே
1994 ஆம் ஆண்டு, ருவாண்டா தேசத்தில், இரண்டு மாதங்களாக நடைபெற்ற இனப்படுகொலையின் போது, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் துட்சி இன மக்கள் கொல்லப்பட்டனர். அதே நாட்டிலுள்ள பழங்குடி மக்களான ஹூடுக்கள், இந்த படுகொலையைச் செய்தனர். இந்த படுகொலை நடந்து முடிந்த போது, பேராயர் ஜியோஃப்ரே ருவுபுஸிஸி தன்னுடைய மனைவியை அணுகி, தங்களுக்கு அருமையானவர்களை இழந்து தவிக்கும் பெண்களைச் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு மேரியின் பதில், “நான் விரும்புவதெல்லாம் அழுவதொன்றைத்தான்” என்றாள். அவளும் தன்னுடைய குடும்பத்தினரை இழந்திருக்கிறாள். அந்த ஞானமுள்ள வழிகாட்டியும், கரிசனையுள்ள கணவனுமான அந்தப் பேராயர் தன் மனைவியிடம், “மேரி, அந்தப் பெண்களையெல்லாம் ஒன்றாகத் திரட்டி, அவர்களோடு அழு” என்றார். அவர் தன்னுடைய மனைவியின் வேதனையை அறிவார், அவளை மற்றவர்களின் வேதனையையும் பகிர்ந்துகொள்ளுமாறு வித்தியாசமான முறையில், அவளைத் தயாரித்தார்.
சபையாகிய தேவனுடைய குடும்பத்தில் வாழ்கின்ற அனைவரும் நல்லவற்றையும், நல்லதல்லாததையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். புதிய ஏற்பாட்டில் வரும் “ஒருவரையொருவர்” என்ற வார்த்தை, நாம் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதைக் காட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. “சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். ஒருவரோடொருவர் ஏக சிந்தையுள்ளவர்களாயிருங்கள்” (ரோம. 12:10,16). நாம் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டுள்ளோம் என்பதை வசனம் 15 வெளிப்படுத்துகின்றது. “சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்”.
இனபடுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தைக் காணும் போது, எங்களுடைய துன்பங்களின் ஆழமும், தாக்கமும் மிகவும் லேசானது, மேரியின் வேதனையும் கூட, ஏனெனில் தேவன் நமக்குச் செய்துள்ளவற்றை நினைவுகூர்ந்து, அவற்றை அணைத்துக்கொண்டு, மற்றவர்களைத் தேற்றவும் அவர்களின் நன்மைக்காகவும் பயன் படுத்துவோம்.
கடைசி வேளையில் கிருபை
டக் மெர்க்கி என்ற சிற்ப கலைஞரின் சிறந்த வடிவமைப்பான ஒரு சிற்பம் நம்பிக்கையற்ற நிலையிலும் விசுவாசத்தோடிருப்பதை காட்டும்படியாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மனிதன், வால்நட் மரத்தால் செய்யப்பட்ட ஒரு சிலுவையை, நம்பிக்கையை இழந்த நிலையில் கட்டிப் பிடித்து, பற்றிக் கொண்டிருப்பது போன்று அமைந்துள்ளது. அதனைக் குறித்து அவர் எழுதும் போது,” இது, நம் வாழ்வில், நாம் சந்திக்கின்ற ஒரு நிலையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. எந்த தடங்கலும் இன்றி, கிறிஸ்துவையும், சுவிசேஷத்தையும் ஆத்மீகமாக சார்ந்திருத்தலை அது காண்பிக்கின்றது.” என்றார்.
இத்தகைய ஒரு நம்பிக்கையை, தன் வார்த்தையாலும், செயலாலும் காண்பித்த, பெயர் குறிப்பிடப்படாத, ஒரு பெண்ணை மாற்கு 5:25-34 ல் காண்கின்றோம். பன்னிரண்டு ஆண்டுகளாக, அவளுடைய வாழ்வு குழப்பம் நிறைந்ததாகவுள்ளது.(வ.25) அவள்,” அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப் படுகிறபொழுது,” இயேசுவைக் குறித்து கேள்விப் படுகின்றாள், இயேசுவை நோக்கிச் செல்கின்றாள், அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள், “அவளுடைய வேதனை நீங்கி, ஆரோக்கியமடைந்தாள்.” (வச. 27-29)
நீயும் உன்னுடைய நம்பிக்கையின் கடைசி எல்லைக்கு வந்து விட்டாயா ? உன்னுடைய ஆதாரங்கள் எல்லாம் செலவழிந்து விட்டனவா? எதிர்பார்ப்பு, நம்பிக்கையின்மை, இழப்பு, மற்றும் துயரத்தில் இருக்கும் மக்கள் பதட்டம் அடைய வேண்டாம். வேதனையிலிருந்த இந்த பெண்ணுக்கு இரங்கியதைப் போன்றும், மெர்க்கியின் சிற்பம் வெளிப்படுத்துவதையும் போன்றும், பதட்டமிகுந்த விசுவாசத்தையும் தேவன் கனப்படுத்துகின்றார். சார்ல்ஸ் வெஸ்லியின் பாடல் கூறுவதைப் போன்று, ”அப்பா, நான் என் கரங்களை உமக்கு நேராக நீட்டுகின்றேன், வேறே எந்த உதவியும் எனக்குத் தெரியவில்லை,” என்பதான விசுவாசம் நம்மிடம் உள்ளதா? இத்தகைய விசுவாசத்தைத் தரும் படி தேவனிடம் கேள். வெஸ்லி தன் பாடலை ,”விசுவாசத்தின் காரணரே, என்னுடைய சோர்ந்து போன, ஏக்கம் நிறைந்த கண்களை உமக்கு நேராக உயர்த்துகிறேன்; ஓ, நான் இப்பொழுதே இந்த ஈவைப் பெற்றுக்கொள்வேனாக. இல்லையென்றால், என் ஆத்துமா மரித்துப் போகுமே.” என்ற ஜெபத்தோடு முடிகின்றார்.
கடைசி மட்டும் கனி கொடுத்தல்
லெனோர் டன்லப், தனது தொண்ணூற்று நான்கு வயதிலும், இளமையோடு இருந்தார், அவள் கூர்மையான சிந்தனையும், பிரகாசமான சிரிப்பும் கொண்டிருந்தாள். அவள் இயேசுவின் மீது கொண்டிருந்த அன்பை அநேகர் உணர்ந்தனர். அவள், எங்களுடைய ஆலயத்தின் வாலிபர்களோடு கொண்டிருந்த தொடர்பை யாவரும் அறிவர். வாலிபர்களோடு, அவள் பங்கு பெற்று வந்தது, மிக்க மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுத்தது. லெனோரின் வாழ்க்கை யாவரையும் அசைக்கிறதாக இருந்ததால், அவளுடைய மறைவு, எங்களை மிகவும் பாதித்தது. ஒரு வலிமையான ஓட்டக்காரனைப் போன்று, அவள் தன்னுடைய வாழ்க்கை ஓட்டத்தை முடித்தாள். அவளுடைய மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு வரை, தன்னுடைய ஆற்றலும், ஆர்வமும் குறையாமல், பதினாறு வாரங்கள் இயேசுவைக் குறித்த செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்வதில் முனைந்திருந்தாள்.
தேவனை கனப்படுத்திய, கனி நிறைந்த அவளுடைய வாழ்வு, சங்கீதம் 92:12-15ல் கூறப்பட்டுள்ளது போன்று உள்ளது. தேவனோடுள்ள உறவில் ஆழ்ந்து வேர் விட்டு வளர்ந்தவர்களின் வாழ்க்கை மொட்டுக்களும், மலர்களும், கனிகளும் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும் என இந்த சங்கீதம் விளக்குகிறது (வச. 12-13) இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இரு மரங்களும், (பனை, கேதுரு) அதன் கனிக்கும், உறுதியான மரத்திற்கும் பேர் பெற்றவை. இவற்றின் மூலம் சங்கீதக்காரன் நீண்ட ஆயுளையும், செழிப்பையும், பயனையும் குறிப்பிடுகின்றார். நம்முடைய வாழ்வில் அன்பும், பகிர்தலும், உதவுதலும், மற்றவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தலும் காணப்படும் போது, நம் வாழ்வும் மொட்டுக்களையும், மலர்களையும், கனிகளையும் கொண்டுள்ளது என்பதை நினைத்து மகிழ்வோம்.
“மூத்தவர்கள்”, “பண்பட்டவர்கள்” என்று பெயர் பெற்றவர்களும் , வேர் விடவும், கனி கொடுக்கவும் முடியாதபடி, முதிர்வடைந்து விடவில்லை, லெனோரேயின் வாழ்க்கை இயேசுவின் மூலம், தேவனுக்குள் ஆழ்ந்து வேர் விட்டு, இதற்கும், தேவனுடைய நன்மைக்கும் சாட்சியாகவுள்ளது (வச. 15). நாமும் கூட இதேப் போன்று வளர முடியும்.
நிலைத்திருக்கும் ஜெபங்கள்
“ஜெபங்கள் சாவில்லாதவை” என்பவை இ.எம். பவுண்ட்ஸ் (1835-1913) என்பவர் ஜெபத்தை குறித்து எழுதிய தனிச்சிறப்பு வாய்ந்த, பல தலைமுறையினரின் கவனத்தையீர்த்த வார்த்தைகள். என்றும் நிலைத்திருக்கும் வல்லமை பெற்ற நம்முடைய ஜெபங்களைப் பற்றி அவர், “ ஜெபத்தை உச்சரித்த உதடுகளும் சாவில் மூடப்பட்டு விடலாம், ஜெபத்தை உணர்ந்த இருதயமும் துடிப்பை நிறுத்தி விடலாம், ஆனால், ஜெபங்கள் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளவைகளாய் நிற்கின்றன. அவை தேவனுடைய இருதயத்தில் இடம் பெறுகின்றன. ஜெபங்கள் அவற்றை உச்சரித்தவர்களின் வாழ் நாட்களையும், அவர்களின் தலைமுறையையும், ஒரு யுகத்தையும், இந்த உலகையும் விட தாண்டி வாழ்பவை” என்று எழுதியுள்ளார்.
உன்னுடைய துன்பங்கள், வேதனைகள், துயரங்களின் மத்தியில் நீ ஏறெடுத்த ஜெபங்கள் தேவனை அடைந்தனவா என்று எப்பொழுதாகிலும் நினைத்ததுண்டா? பவுண்ட்ஸ்ஸின் வார்த்தைகளின் உட்கருத்தும், வெளிப்படுத்தல் 8:1-5ல் கூறப்பட்டுள்ள வார்த்தைகளும் நம்முடைய ஜெபங்களின் முக்கியத்துவத்தை நினைப்பூட்டுகின்றன. பரலோகத்தில் தேவன் வீற்றிருக்கும் சிங்காசனம், (7:17) உள்ளது, அந்த இடம் தான் இவ்வுலகத்தை கட்டுப்படுத்தும் அறை. தேவனுக்கு முன்பாக அவருக்கு பணி செய்யும் தூதர்கள் நிற்கின்றார்கள் (வச. 2) ஒரு தூதன் பழைய ஏற்பாட்டு ஆசாரியரைப் போன்று, தூபம் காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துக்கொண்டு, சகல பரிசுத்தவான்களின் ஜெபங்களோடு தூபவர்க்கத்தை செலுத்துகின்றான்.(வச. 3,4) புவியில் நாம் ஏறெடுக்கும் ஜெபங்கள் பரலோகத்தின் தேவனிடம் கொடுக்கப்படுகின்ற இக்காட்சி, நம் கண்களைத் திறந்து, நமக்கு ஊக்கத்தை தருகிறதல்லவா? நம்முடைய ஜெபங்கள் வழியில் தொலைந்திருக்கலாம் அல்லது மறக்கப்பட்டிருக்கலாம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் நாம் இங்கே பார்க்கும் காட்சி நமக்கு ஆறுதலாகவும், நாம் ஜெபத்தில் உறுதியாய் இருக்கவும் நம்மை கட்டாயப்படுத்துகின்றது. நம்முடைய ஜெபங்கள் தேவனுக்கு விலையேறப் பெற்றவை!
அதில் கூறியுள்ளபடி செய்
பிரையன், தன்னுடைய சகோதரனின் திருமண நிகழ்ச்சியில் வரவேற்பாளராக நியமிக்கப்பட்டான். அவன் அதைச் சரியாக செய்யவில்லை. எனவே, அவனுடைய குடும்பத்தினர் யாவரும் அவனைக் குறித்து அதிருப்தியடைந்தனர். அவனுடைய சகோதரி ஜாஸ்மின்னும் கூட. அவள் தான் அன்றைய வைபவத்தில் வேதாகமப் பகுதியை வாசிக்கும் படி நியமிக்கப் பட்டிருந்தாள். அந்த நிகழ்ச்சியில், அவள் 1 கொரிந்தியர் 13 ஆம் அதிகாரத்தை தவறில்லாமல், அழகாக வாசித்தாள். திருமணம் முடிந்த பின்னர், அவளுடைய தந்தை அவளை, அவளுடைய சகோதரனுக்கு ஒரு பிறந்தநாள் பரிசு வழங்குமாறு கூறினார். அவள் தயங்கினாள். அவளால் தான் வாசித்த வேத பகுதியிலுள்ளபடி அன்பு செய்வது கடினமாயிருந்தது. அன்று மாலை முடியுமுன் அவள் தன் மனதை மாற்றிக் கொண்டாள். “நான் அன்பைக் குறித்த வேத வாக்கியங்களை வாசித்து விட்டு, அதன்படி செயல் படாமல் இருக்க முடியாது” என்றாள்.
எப்பொழுதாகிலும் நீ வாசித்த அல்லது கேட்ட வேத வார்த்தையின் படி செயல் படவில்லையே யென்று குத்தப்பட்டதுண்டா? இதில் நீ தனிப்பட்டவனல்ல தேவனுடைய வார்த்தையை கேட்பதும், வாசிப்பதும் எளிது. ஆனால் அதின் படி நடக்க வேண்டுமே! எனவே, தான் யாக்கோபு “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின் படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (யாக். 1:22) எனக் குறிப்பிடுகின்றார். அவர் தரும் கண்ணாடி பிம்பத்தின் எடுத்துக்காட்டு நம்மைச் சிரிக்க செய்கின்றது. அதின் மூலம் நம்மில் காணப்படும் குறைகளை நாம் உணர்ந்து அதில் கவனம் செலுத்தும் படி அவர் சொல்கின்றார். ஆனால், குறைகளை உணர்வது மட்டும் போதும் என்றிருப்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். மேலும் வேத வார்த்தைகளை “உற்றுப்பார்த்து” அதில் “நிலைத்திரு” (வச. 25) என யாக்கோபு நம்மைத் தூண்டுகிறார். ஜாஸ்மின் எதைக் கட்டாயமாகச் செய்யும்படித் தூண்டப்பட்டாளோ அதை நாமும் செய்யும்படி அவர் நம்மை ஊக்கப்படுத்துகின்றார். வேத வார்த்தைகளின் படி வாழ்ந்து காட்டு. இதை விட வேறொன்றையும் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை