எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆர்தர் ஜாக்சன்கட்டுரைகள்

இணைந்திருக்கும் வீடு

ஜூன் 16, 1858 அன்று, அமெரிக்காவின் மேல் சட்டசபைக்கு, குடியரசு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான, ஆபிரகாம் லிங்கன், "பிரிக்கப்பட்ட வீடு" என்ற தலைப்பில் பிரசித்திபெற்ற ஒரு உரையை நிகழ்த்தினார். அதில், அமெரிக்காவிலுள்ள, அடிமைத்தனத்தின் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டினார். அப்பொழுது லிங்கனின் நண்பர்கள், எதிரிகள் என எல்லாரிடமிருந்தும் இப்பேச்சு ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது. மத்தேயு 12:25 ல் சொல்லப்பட்டுள்ள "பிரிக்கப்பட்ட வீடு" என்ற தலைப்பில் அவர் பேசியதற்கான காரணம், இவ்வுவமை எல்லாருக்கும் அறிமுகமானதொன்றாக இருந்தாலும், அதிகமாக வலியுறுத்தப்படவில்லை என்பதேயாகும்.

 

பிரிக்கப்பட்ட வீடு நிலைநிற்காது, இணைந்திருக்கும் வீடு நிலை நிற்கும். அடிப்படையில் தேவனின் வீடும் அப்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது (எபேசியர் 2:19). பலவகையான பின்னணிகளையுடைய மக்களாய் நாம் இருந்தாலும், இயேசுவின் சிலுவை மரணத்தால் நாம் தேவனோடும் மற்றவர்களோடும் ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறோம் (வ.14–16). இந்த சத்தியத்தைக் கருத்தில்கொண்டு (எபேசியர் 3 ஐ பார்க்கவும்) விசுவாசிகளுக்கு, "சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். (4:3) என பவுல் அறிவுறுத்துகிறார்.

இன்றைக்கும் விசுவாசக் குடும்பத்தினரை, இறுக்குமான காரியங்கள் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஆவியானவரின் துணையோடு நாம் ஒருவருக்கொருவர் ஒற்றுமையைக் காத்துக்கொள்ள, தேவன் நமக்குத் தேவையான பெலத்தையும் ஞானத்தையும் அருள்வாராக. இப்படிச் செய்வதால், பிரிந்து இருண்டுபோன இவ்வுலகிற்கு நாம் வெளிச்சமாவோம்.

கேட்டுப்பாருங்கள்!

என் வீட்டின் அடித்தளத்திலிருந்து என்னுடைய மனைவி ஷர்லியின் ஆனந்த கூச்சல் சத்தம் கேட்டது. ஒரு பத்திரிக்கையில் கட்டுரை எழுத அவள் மணிக்கணக்காய் போராடி, எழுதி முடிந்திருந்தாள். அதை எப்படி தொடர்ந்து எழுதுவது என்று குழம்பியிருந்த அவள் தேவனுடைய உதவியை நாடினாள். அவளுடைய முகநூல் நண்பர்களின் உதவியையும் நாடி அந்த கட்டுரையை குழு முயற்சியாய் நிறைவுசெய்தாள்.  

பத்திரிக்கைக் கட்டுரை என்பது வாழ்க்கையில் சின்ன விஷயம். ஆனால் சிறிய விஷயங்கள் கூட வாழ்க்கையில் கவலையையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தும். ஒருவேளை, நீங்கள் பிள்ளை வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் புதிய பெற்றோராய் இருக்கலாம், ஒரு மாணவனாய் கற்பதற்கு போராடிக்கொண்டிருக்கலாம், நேசித்தவர்களை இழக்கக் கொடுத்தவராய் இருக்கலாம். அல்லது வீடு, அலுவலகம், ஊழியத்தில் பல சவால்களை சந்திக்க நேரிடலாம். சிலவேளைகளில் நாம் அவற்றோடு தனியாய் போராடிக்கொண்டிருக்கிறோம், ஏனெனில் நாம் தேவனிடத்தில் உதவி கேட்பதில்லை (யாக்கோபு4:2).

பிலிப்பு பட்டணத்து விசுவாசிகளுக்கும், நமக்கும் பவுல் “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலிப்பியர் 4:6) என்று ஆலோசனை கொடுக்கிறார். வாழ்க்கையில் நம்பிக்கையிழக்கும் தருணங்களில், கீழ்க்கண்ட ஆங்கில பாடல் போன்று பாடல்களை நாம் நினைவுபடுத்திக்கொள்ளலாம்:  

இயேசுவில் நமக்கு ஒரு நண்பர் இருக்கிறார், நாம் ஏன் சமாதானத்தை  அடிக்கடி இழக்க வேண்டும், ஓ, என்ன தேவையற்ற வலியை நான் பொறுக்க வேண்டும், எல்லாவற்றையும் நான் சுமக்கத் தேவையில்லை, ஜெபத்தில் தேவனிடத்தில் ஒப்படைக்கிறேன். 

தேவனிடத்தில் நாம் உதவிக்காய் நாடும்போது, நமக்கு உதவிசெய்யும் நபர்களை தேவன் நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவருவார்.

அவர் என் இதயத்தை அறிவார்

ஒரு மளிகைக் கடையில் வாடிக்கையாளர் ஒருவர் தனது பரிவர்த்தனையை முடித்த பிறகு, நான் பில்லிங் கவுண்டருக்குச் சென்று எனது பொருட்களுக்கு பணம் செலுத்தத் தொடங்கினேன். எதிர்பாராத விதமாக, ஒரு கோபமான நபர் என்னை எதிர்கொண்டார். வரிசையில் அவள் எனக்கு பின்பாக இருந்ததை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். என் தவறை உணர்ந்து, “மன்னிக்கவும்” என்று மனப்பூர்வமாகச் சொன்னேன். அவளோ, “இல்லை” என்று கோபமாக பதிலளித்தாள். 

நீங்கள் எப்போதாவது இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் தவறுசெய்து, அதை ஒப்புக்கொண்டு, அதை சரிசெய்ய முயற்சித்து, மன்னிப்பு கேட்டு, அந்த மன்னிப்பு நிராகரிக்கப்பட்டதுண்டா? தவறாகப் புரிந்துகொள்வது அல்லது தவறாக மதிப்பிடப்படுவது நல்லதல்ல. மேலும் நாம் புண்படுத்துபவர்கள் அல்லது நம்மை புண்படுத்துபவர்களுடன் நாம் எவ்வளவு நெருக்கமாயிருக்கிறோமோ, அவ்வளவு காயப்படவேண்டியிருக்கிறது. அவர்கள் நம் இதயங்களைப் பார்க்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்!

ஏசாயா 11:1-5இல், பரிபூரண தீர்ப்புக்கான ஞானத்துடன் தேவனால் நியமிக்கப்பட்ட ஆட்சியாளரை பற்றிய செய்தியை ஏசாயா துரிதமாய் பதிவிடுகிறார். “அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்(கிறார்)" (வச. 3-4) என்று குறிப்பிடுகிறார். இது இயேசுவின் வாழ்விலும் ஊழியத்திலும் நிறைவேறியது. நம்முடைய பாவத்திலும் பலவீனத்திலும் நாம் அதை எப்போதும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், அனைத்தையும் பார்க்கும், அனைத்தையும் அறிந்த பரலோகத்தின் தேவன் நம்மை முழுமையாக அறிந்திருக்கிறார். நம்மை சரியாக நியாயந்தீர்க்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

இருண்ட தருணங்கள், ஆழ்ந்த ஜெபங்கள்

“எனக்கு ஒரு இருண்ட தருணம் இருந்தது.” இந்த ஐந்து வார்த்தைகள் கோவிட்-19 தொற்று பரவிய நேரத்தில், ஒரு பெண் பிரபலத்தின் உள் வேதனையைப் படம்பிடிக்கின்றது. இந்த புதிய வாழ்க்கை முறையை தழுவுவது அவளுக்கு சவாலாய் அமைந்தது. அவள் தற்கொலை எண்ணங்களோடு போராடினாள் என்று அவரே சொன்னார். இந்த இக்கட்டான மனநிலையிலிருந்து வெளிவருவதற்கு, தன் மீது அக்கறைகொண்ட ஒரு நண்பரிடம் தன்னுடைய நிலையை மனம்விட்டு பகிர்ந்துகொண்டதை அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாம் அனைவரும் இதுபோன்ற பரபரப்பான தருணங்கள், நாட்கள் மற்றும் பருவங்களை சந்திக்க நேரிடுகிறது. பள்ளத்தாக்குகள் மற்றும் கடினமான இடங்கள் நமக்கு புதிதல்ல, ஆனால் அதை மேற்கொண்டு வெளிவருவது சவாலான ஒன்றாகவே இருக்கிறது. சில வேளைகளில் மனநல நிபுணர்களின் உதவியை நாடுவதும் அவசியப்படுகிறது.

சங்கீதம் 143 இல், தாவீது தன்னுடைய வாழ்வின் ஒரு இருண்ட தருணத்தின் ஜெபத்தைக் கேட்டு அதின் மூலம் நாம் அறிவுறுத்தப்படுகிறோம். சரியான சூழ்நிலை எதுவென தெரியவில்லை. ஆனால் தேவனிடம் அவர் ஏறெடுத்த ஜெபங்கள் அனைத்தும் நேர்மையானவை, நம்பிக்கையானவைகள். “சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான். என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது” (வச. 3-4). விசுவாசிகளுக்கு, நமக்குள் என்ன நடக்கிறது என்பதை நமக்குள்ளேயோ, அல்லது நண்பர்களிடமோ அல்லது மருத்துவ நிபுணர்களிடமோ பகிர்ந்துகொள்வது மட்டும் போதாது. சங்கீதம் 143:7-10-ல் காணப்படும் விண்ணப்பங்களை உள்ளடக்கிய ஜெபங்களுடனும் முழு சிந்தையுடனும் நாம் தேவனிடம் வர வேண்டும். நமது இருண்ட தருணங்கள், தேவனால் மட்டுமே கொடுக்கக்கூடிய ஒளியை எதிர்நோக்கும் ஆழமான ஜெப நேரங்களாகவும் இருக்கலாம்.

சைமன் வீட்டில் புத்துணர்வு

சைமன் வீட்டிற்கு போனதை என்னால் மறக்கமுடியாது. கென்யாவிலுள்ள நியாஹூருருவின் நட்சத்திரங்கள் ஜொலிக்கும் நீலவானின் கீழிருந்த அவனுடைய எளிமையான வீட்டிற்குச் சென்றோம். அழுக்கான தரையும், விளக்கு வெளிச்சமும் அவன் ஏழ்மையை பிரதிபலித்தன. என்ன சாப்பாடு என்பதையும் என்னால் நினைவுகூர முடியவில்லை. ஆனால், எங்களை விருந்தாளிகளாய் வரவேற்ற சைமனின் முகத்திலிருந்த மகிழ்ச்சியை என்னால் மறக்கமுடியாது. அவனுடைய சுயநலமில்லா, மனதைத் தொட்டு, புத்துணர்வாக்கும் அந்த விருந்தோம்பல், இயேசுவையே எங்களுக்கு ஞாபகப்படுத்தியது. 

1 கொரிந்தியர் 16:15-18ல், பவுல் அப்போஸ்தலன் பரிசுத்தவான்களைப் பராமரிக்கும் ஸ்தேவானுடைய குடும்பத்தைக் குறித்துக் கூறுகிறார் (வச.15). அவர்கள் “பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்று” (வச.15) குறிப்பிடுகிறார். அவர்கள் பொருள் உதவிகளை அவருக்கு செய்திருந்தாலும் (வச.17), “அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்” (வச.18) என்றதின் தாக்கத்தை பவுல் விவரிக்கிறார்.. 

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுகிற வாய்ப்புகள் கிட்டும்போது ஆகாரம், தங்குமிடம் ஆகியவற்றிற்கு சூழலுக்கேற்ப முக்கியத்துவம் தருகிறோம். நல்லது. என்றாலும், அவை அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்பதையும் மறந்துவிடக்கூடாது. மறக்கமுடியாத விருந்தோம்பல் மிகவும் முக்கியமான ஒன்று என்றாலும், ஒருவரை முழுவதுமாய் போஷிக்க மற்றும் உற்சாகப்படுத்த உணவோ, பொருட்களோ போதுமானதல்ல. மெய்யான உற்சாகம் என்பது இருதயத்திலிருந்து வழிந்தோடும் தெய்வீகத்திற்குரியது. அது மற்றவர்களுடைய இருதயத்தை சென்றடைகிறது. சாப்பிட்டு பல காலங்கள் கடந்த பின்பும் அது ஆத்துமாவை போஷித்துக்கொண்டேயிருக்கிறது. 

மண்ணென்று உணர்தல்

எங்கள் வாராந்திர ஊழிய கூடுகையின்போது, ரவி தான் “மண்ணென்று உணர்வதாக” குறிப்பிடுகையில், அவர் தன் முதுமை மற்றும் ஆரோக்கிய குறைபாடினிமித்தம் உண்டாகும் சரீர பெலவீனங்களைக் குறிப்பிடுவதை புரிந்துகொண்டேன். ஏனெனில் ரவியும், அவர் மனைவியும், அறுபது வயதை கடந்திருந்தனர். அவர்களின் 2020ஆம் வருடம், மருத்துவர்கள் ஆலோசனை, அறுவைசிகிச்சை முறைகள், வீட்டிலிருந்தே மருத்துவம் பார்க்க வீட்டை மாற்றி அமைத்தல் போன்றவைகளால் நிறைந்திருந்தது. அவர்கள் தங்கள் வாழ்வின் முடிவிலிருந்தார்கள். அதை நன்கு உணரவும் செய்தார்கள்.

சரீரப்பிரகாரமான, மனோரீதியான, உணர்வுரீதியான மற்றும் ஆவிக்குரிய ரீதியான பெலவீனங்கள், இயலாமைகள், குறைபாடுகள் ஆகியற்றை உணர ஒருவர் வயது சென்றவராய் இருக்க வேண்டுமென்றில்லை. தேவன், தம் குமாரன் இயேசுவின் மனுஉருவில், வீழிச்சியடைந்த இவ்வுலகத்திற்கு வந்து, மனித பிறவியின் சுமைகளை அனுபவிப்பவர்கள் மேல் கரிசனைகொள்கிறார் (சங்கீதம் 103:13). மேலும் தாவீது, “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்” (வச. 14) என்றெழுதினார். “மண்” என்ற பதம் நம்மை ஆதியாகமத்திற்கு பின்னோக்கி கொண்டுசெல்கிறது. “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்; மனுஷன் ஜீவாத்துமாவானான்” (2:7).

நீங்கள் மண்ணென்று இந்நாட்களில் உணர்கிறீர்களா? பூமிக்குரிய வாழ்க்கையின் எதார்த்தங்களுக்கு உங்களை வரவேற்கிறோம். நாம் பெலவீனமானவர்கள் என்று உணரும்போது நாம் தனித்திருப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனதுருக்கம் நிறைந்த நம் தேவன் அறிந்திருக்கிறார், நினைவுகூருகிறார். பூமிக்குரிய மனிதர்களான நம்மைப் போன்றவர்களுக்கு மன்னிப்பை அருள தன் குமாரனையே நமக்காக அனுப்பி தம் அன்பை நிரூபித்துள்ளார். வாழ்க்கை நமக்கு எதையளித்தாலும், நாம் அவரை நம்புவோமாக.

பாதுகாப்பான கரங்கள்

ஒரு கயிறு அறுபடுவது போல, டக் மெர்க்கியின் வாழ்க்கைக் கயிறு ஒன்றன்பின் ஒன்றாக அறுபட்டுக் கொண்டிருந்தது. “புற்றுநோயுடன் போராடி என் தாயார் தோற்றுப் போனார்; வெகுநாளாய் இருந்த என்னுடைய காதல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது; என் வருமானம் தடைபட்டது; என் வேலை மந்தமாக சென்றது... என்னைச் சுற்றியிருந்த இந்த பிரச்சனைகளினால் என்னுடைய ஆவிக்குரிய இருள் மிகவும் ஆழமாயிருந்தது” என்று போதகரும், சிற்பியுமான டக் மெர்க்கி எழுதுகிறார். இந்த கூட்டுநிகழ்வுகளும் அவருடைய இறுக்கமான வாழ்க்கையும் இணைந்து, “மறைவிடம்” என்ற ஒரு சிற்பத்தை அவர் செதுக்க நேர்ந்தது. கிறிஸ்துவின் ஆணியடிக்கப்பட்ட கரங்கள் இரண்டும் அதற்குள் ஏதோ ஒன்றை பாதுகாப்பதுபோல மூடியிருக்கும்படி அந்த சிற்பத்தை வடித்திருந்தார். 

அந்த சிற்பம் “தனக்குள் வந்து ஒளிந்துகொள்ளும்படிக்கு கிறிஸ்து கொடுக்கும் அறைக்கூவல்” என்று டக் தன்னுடைய சிற்பத்திற்கு விளக்கமளிக்கிறார். சங்கீதம் 32ல், தாவீது தேவனையே தன்னுடைய சிறந்த புகலிடமாய் கண்டுபிடித்ததாக பாடுகிறார். அவர் நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு அருளுகிறார் (வச. 1-5). குழப்பங்களின் மத்தியில் ஜெபிக்கும்படிக்கு நம்மை ஊக்குவிக்கிறார் (வச. 6). 7ஆம் வசனத்தில், சங்கீதக்காரன் தேவன் மீதான தன்னுடைய நம்பிக்கையை பிரதிபலிக்கிறார்: “நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர்.”

பிரச்சனைகள் வரும்போது நீங்கள் யாரிடமாய் திரும்புகிறீர்கள்? நம்முடைய பூமிக்குரிய வாழ்க்கை உடைந்து கேள்விக்குள்ளாகும் போது, இயேசுவின் மன்னிப்பின் மூலம் நித்தியப் பாதுகாப்பை அருளும் தேவனிடத்தில் நாம் மறைந்துகொள்ளலாம். 

காலத்திற்கேற்ற தீர்வு

சைமனுக்கும் ஜெஃப்ரிக்குமான பகை ஆண்டுகளாய் நீடித்தது. அந்த உறவை சரிசெய்ய சைமன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தடைசெய்யப்பட்டது. ஜெஃப்ரியின் தாயாரின் மரணத்தைக் கேள்விப்பட்ட சைமன், கென்யாவிலுள்ள மேல் நாட்டிற்கு பயணம்செய்து அந்த மரண ஊர்வலத்தில் பங்கெடுத்தான். அதற்கு பின்பு அவர்கள் இருவருக்கும் இடையில் நேரிட்டதைக் குறித்து சைமன்,  “அந்த மரண ஊர்வலத்திற்கு பின்பு அனைத்து சூழ்நிலையும் எப்படி தலைகீழாய் மாறும் என்பதை நான் சற்றும் ஊகிக்கவில்லை. நாங்கள் இருவரும் மனம் திறந்து பேசினோம். நாங்கள் கட்டிப்பிடித்து, அந்த தருணத்தை அனுபவித்து, ஒன்றாய் ஜெபித்து, மீண்டும் சந்திக்கவும் திட்டமிட்டோம்” என்று கூறினான். சைமனும் ஜெஃப்ரியும் ஏற்கனவே ஒன்று சேர்ந்திருந்தனர் என்றால், பல மனவேதனைகளை அவர்கள் தவிர்த்திருக்கக்கூடும். 

மத்தேயு 5:21-26ல் தீர்வுகாணப்படாத பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இயேசு உதவிசெய்கிறார். கோபம் பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிவுறுத்துகிறார் (வச. 22). மேலும் உறவுரீதியாய் சரிசெய்யப்படாத பிரச்சனைகளை தேவனை ஆராதிப்பதற்கு முன்பு சரிசெய்யப்படவேண்டும் (வச. 23-24). ‘நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து” என்னும் இயேசுவின் ஞானமான போதனை, எவ்வளவு சீக்கிரத்தில் நாம் ஒப்புரவாகிறோமோ அது நமக்கும் மற்றுவர்களுக்கும் நல்லது என்பதை வலியுறுத்துகிறது. 

உறவுகள் சவாலானது; அது நம் குடும்பத்திலோ, அலுவலகத்திலோ, கல்விக்கூடங்களிலோ, அல்லது சகவிசுவாசிகளிடத்திலோ, நம்முடைய கிரியையை எதிர்பார்க்க வைக்கிறது. ஆனால் நம்முடைய சமாதானக் காரணரை (ஏசாயா 9:6) பிரதிபலிக்கிறவர்களாய் நம்முடைய இருதயத்தையும் கரங்களையும் அகல விரித்து, தீர்வுகாணமுடியாத பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண பிரயாசப்படுவோம்.    

துணிச்சலான விசுவாசம்

இரண்டாம் உலகப்போரில் பிரேம் பிரதாமின் (1924-1998) விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது, அவர் காயங்களோடு பாராசூட்டின் உதவியுடன் தப்பித்தார். ஆனால் அவர் தன் வாழ்நாள் முழுவதும் நொண்டியே நடக்கவேண்டியதாயிருந்தது. அவர் சொல்லும்போது, “எனக்கு ஒரு கால் நொண்டி. இமயமலைக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு என்னை அழைத்தது வியப்பல்லவா?” அவர் நேபாளத்திலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அதினிமித்தம் கைதிகளை தண்டிக்கும் கொடிய “மரண நிலைவறைகளில்” அடைக்கப்பட்டு, கொடுந்துன்பத்தை அனுபவித்துள்ளார். பத்து ஆண்டுகளில் ஏறத்தாழ பதினான்கு வித்தியாசமான சிறைச்சாலைகளில் பிரேம் அடைக்கப்பட்டார். அவருடைய துணிச்சலான சாட்சி, சிறைச்சாலை பாதுகாவலர்கள் மற்றும் அதிகாரிகள் என்று பலருடைய வாழ்க்கையைத் தொட்டு, அவர்கள் இயேசுவின் சுவிசேஷத்தைக் கொண்டுசெல்லும் அளவிற்கு கனியுள்ளதாய் இருந்தது. 

இயேசுவின் மீதான தன்னுடைய விசுவாசத்தினிமித்தமும், முடவனை சொஸ்தமாக்கியதற்காகவும் (அப். 4:9), அப்போஸ்தலனாகிய பவுல் பெரிய எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது. ஆனால் அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி கிறிஸ்துவை துணிச்சலாய் பிரசங்கித்தார் (வச. 8-13).

பேதுருவைப்போல இன்று நாமும் உபத்திரவத்தை சந்திக்கலாம் ஆனால் நம்முடைய பாவங்களுக்காக மரித்து, மன்னிக்கிற அதிகாரத்திற்கு ஆதாரமாக உயிர்த்தெழுந்து (வச. 4:10), இரட்சிப்பின் காரணராய் (வச. 12) இருக்கிறவர், நம்முடைய குடும்பத்தினருக்கும், உடன் வேளையாட்களுக்கும், சக மாணவர்களுக்கும்  மிகவும் அத்தியாவசியமான தேவை. இயேசு கொடுக்கும் இந்த இரட்சிப்பை மற்றவர்கள் கேட்கும்பொருட்டு, ஜெபத்தோடும் துணிச்சலோடும் நற்செய்தியை நாம் பிரசங்கிப்போம்.