என் வீட்டின் அடித்தளத்திலிருந்து என்னுடைய மனைவி ஷர்லியின் ஆனந்த கூச்சல் சத்தம் கேட்டது. ஒரு பத்திரிக்கையில் கட்டுரை எழுத அவள் மணிக்கணக்காய் போராடி, எழுதி முடிந்திருந்தாள். அதை எப்படி தொடர்ந்து எழுதுவது என்று குழம்பியிருந்த அவள் தேவனுடைய உதவியை நாடினாள். அவளுடைய முகநூல் நண்பர்களின் உதவியையும் நாடி அந்த கட்டுரையை குழு முயற்சியாய் நிறைவுசெய்தாள்.  

பத்திரிக்கைக் கட்டுரை என்பது வாழ்க்கையில் சின்ன விஷயம். ஆனால் சிறிய விஷயங்கள் கூட வாழ்க்கையில் கவலையையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தும். ஒருவேளை, நீங்கள் பிள்ளை வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் புதிய பெற்றோராய் இருக்கலாம், ஒரு மாணவனாய் கற்பதற்கு போராடிக்கொண்டிருக்கலாம், நேசித்தவர்களை இழக்கக் கொடுத்தவராய் இருக்கலாம். அல்லது வீடு, அலுவலகம், ஊழியத்தில் பல சவால்களை சந்திக்க நேரிடலாம். சிலவேளைகளில் நாம் அவற்றோடு தனியாய் போராடிக்கொண்டிருக்கிறோம், ஏனெனில் நாம் தேவனிடத்தில் உதவி கேட்பதில்லை (யாக்கோபு4:2).

பிலிப்பு பட்டணத்து விசுவாசிகளுக்கும், நமக்கும் பவுல் “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலிப்பியர் 4:6) என்று ஆலோசனை கொடுக்கிறார். வாழ்க்கையில் நம்பிக்கையிழக்கும் தருணங்களில், கீழ்க்கண்ட ஆங்கில பாடல் போன்று பாடல்களை நாம் நினைவுபடுத்திக்கொள்ளலாம்:  

இயேசுவில் நமக்கு ஒரு நண்பர் இருக்கிறார், நாம் ஏன் சமாதானத்தை  அடிக்கடி இழக்க வேண்டும், ஓ, என்ன தேவையற்ற வலியை நான் பொறுக்க வேண்டும், எல்லாவற்றையும் நான் சுமக்கத் தேவையில்லை, ஜெபத்தில் தேவனிடத்தில் ஒப்படைக்கிறேன். 

தேவனிடத்தில் நாம் உதவிக்காய் நாடும்போது, நமக்கு உதவிசெய்யும் நபர்களை தேவன் நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவருவார்.