எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆர்தர் ஜாக்சன்கட்டுரைகள்

அவர் நமது கரத்தைப் பிடித்திருக்கின்றார்

ஓர் அழகிய, துடுக்கான சிறுபெண், ஒரு ஞாயிறன்று, ஆலயத்தில் தனியாகப் படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தாள். இரண்டு வயதிற்கு மிகாத அச்சிறுமி, ஒவ்வொருபடியாக இறங்கி, ஆலயத்தின் கீழ் தளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாள். கீழ் தளத்திற்குச் செல்லவேண்டுமென்பதே அவளுடைய தீர்மானம் அதை நிறைவேற்றியும் விட்டாள். நான் இக்குழந்தையின் தைரியமான செயலை நினைத்துப் பார்த்து, எனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டேன். இக்குழந்தை பயப்படவேயில்லை, ஏனெனில், அக்குழந்தையின் தாயின் கண்கள் அக்குழந்தையை கவனித்துக் கொண்டேயிருக்கின்றன என்பதும் அத்தாயின் கரங்கள் எப்பொழுதும் உதவும்படி ஆயத்தமாயிருக்கின்றன என்பதும் அக்குழந்தைக்குத் தெரியும். இந்தக் காட்சி, நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய பிள்ளைகள் இந்த நிலையற்ற உலகினை கடந்து செல்வதற்கு உதவும்படி எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறாரென்பதை எனக்கு நினைவுபடுத்தியது.

இன்றைய வேதாகமப் பகுதி இருவகையான குறிப்புகளைத் தருகிறது. ஆதிமனிதரை பயப்படவும், சோர்ந்து போகவும் வேண்டாமெனக் கூறும் தேவன் அவர்களிடம், 'என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்" (ஏசாயா 41:10) என்கின்றார். அநேக ஆர்வமும், பயமும் உள்ள குழந்தைகள், தங்கள் பெற்றோருடைய பெலத்தால் நிலைப்படுத்தப்படுகின்றனர். இங்கு தேவனுடைய வல்லமை செயல்படுவதைக் காண்கின்றோம். இரண்டாவதாக தேவன் தன்னுடைய பிள்ளைகளுக்கு பாதுகாப்பையளிக்கின்றார். 'உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலது கையைப் பிடித்து பயப்படாதே" (வச. 13) என்கின்றார். வாழ்வின் சூழ்நிலைகளும், நேரமும் மாறலாம். ஆனால், தேவன் மாறாதவர். நாம் கலங்கத் தேவையில்லை (வச. 10). ஏனெனில், தேவனுடைய வாக்குகள் நமக்கு உறுதியைத் தருகின்றது. நம்முடைய அவலநிலையில் தேவன் நமக்குத் தேவையான வார்த்தைகளைத் தருகின்றார். 'பயப்படாதே" (வச. 10,13) என்கின்றார்.

உன் வாழ்வில் விளக்கு எரிந்து கொண்டேயிருக்கட்டும்

எங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வேலை என்னையும், என்னோடு பணிபுரியும் மற்றொருவரையும் 250 மைல்களுக்கப்பால் கொண்டு சென்றது. நாங்கள் வேலையை முடித்துவிட்டுத் திரும்பிய போது மாலை அதிக நேரமாகிவிட்டது. வயது சென்றதாலும், கூரியபார்வை குறைந்து விட்டதாலும் இரவில் வாகனத்தை ஓட்டுவதில் சற்று சிரமமிருந்தது. இருந்த போதிலும் நானே முதலாவதாகச் செல்ல விரும்பினேன். என்னுடைய கரங்கள் திசை மாற்றுச் சக்கரத்தை நன்கு பற்றியிருக்க, என்னுடைய கண்கள் கவனமாக அந்த மங்கலான ஒளியில் சாலையை கவனித்தன. நான் ஓட்டிச் செல்கையில், அந்த நெடுஞ்சாலையில் எனக்குப் பின்னால் வந்த வாகனங்களிலிருந்து வந்த ஒளிக்கற்றை நான் அந்தச் சாலையை நன்கு பார்க்க உதவியது. என்னுடைய நண்பன் தன்னுடைய காரை வேகமாக ஓட்டிக் கொண்டு எனக்கு முன்னே வந்த போது நான் சற்று நிம்மதி அடைந்தேன். அவன் என்னிடம் வந்து, நான் முன் விளக்குகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக பனிப்படல விளக்குகளை பயன்படுத்தி ஓட்டிக் கொண்டிருப்பதாகச் சுட்டிக் காட்டினான்.

நம்முடைய அனுதின வாழ்விற்குத் தேவையான வெளிச்சத்தைத் தருவது தேவனுடைய வார்த்தைகளே (வச. 105) என முற்றிலும் புரிந்து கொண்ட ஒருவருடைய மிகச்சிறந்த படைப்புதான் சங்கீதம் 119. நான் அந்த நெடுஞ்சாலையில், அந்த இரவில் சந்தித்த பிரச்சனையைப் போன்று, நம் வாழ்விலும் எத்தனை, அடிக்கடி அப்படிப்பட்ட சூழல்களைச் சந்திக்கின்றோம். நாம் தெளிவாகப் பார்க்கும்படிக்கு நம்மை வருத்திக் கொள்கின்றோம், சில வேளைகளில் நல்ல பாதையைவிட்டு விலகி விடுகின்றோம். ஏனெனில், நாம் தேவன் தரும் ஒளியாகிய தேவனுடைய வார்த்தையை மறந்து விடுகின்றோம். சங்கீதம் 119 நம்மை முன் விளக்கின் சுவிட்சை அவிழ்த்து விடும்படி நம்மைத் தூண்டுகிறது. நான் அந்த விளக்கைப் போடும் போது என்ன நடக்கின்றது? நாம் சுத்தப்படுத்தப்படும்படி ஞானத்தைக் கண்டடைகிறோம் (வச. 9-11). நாம் வீணாக அலைந்து திரிவதைத் தவிர்க்கும்படி புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கண்டு கொள்கின்றோம் (வச. 101-102). நாம் வேதத்தின் வசனமாகிய வெளிச்சத்தில் வாழும் போது சங்கீதக்காரனின் துதியும் நம்முடைய துதியாக மாறும். 'உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுவதும் அது என் தியானம்" என்போமாக.

கேள்விகளோடு ஆராதித்தல்

ஒரு நீண்ட அல்லது குறுகிய பயணம் எதுவாக இருந்தாலும், அந்தக் குழுவில் பயணம் செய்யும் யாரேனும் “இன்னும் அந்த இடம் வரவில்லையா? “அல்லது" இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும்?" போன்ற கேள்விகளைக் கேட்பது வழக்கம் தான். இத்தகைய கேள்விகள் குழந்தைகளின் உதட்டிலிருந்து வருவதை எல்லாருமே கேட்டிருப்போம். பெரியவர்களும் நம்முடைய இலக்கினை சீக்கிரம் அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில் கேள்விகளைக் கேட்கின்றனர். எல்லா வயதினரும், தாங்கள் சோர்வடையும் போது இத்தகைய கேள்விகளைக் கேட்க தூண்டப்படுவர், ஏனெனில், வாழ்க்கையில் சவால்கள் ஒருபோதும் ஓய்ந்து போவதில்லை.

இதேப்போன்ற நிலையில்தான் தாவீதும் இருந்தார் என்பதை சங்கீதம் 13ல் காண்கின்றோம். இதிலுள்ள இரு வசனங்களில் நான்கு முறை (வச. 1-2) தாவீது தான் மறக்கப்பட்டவனாகவும், கைவிடப்பட்டவனாகவும், தோற்;கப்பட்டவனாகவும், இவையெல்லாம் எவ்வளவு காலத்திற்கு? எனப் புலம்புகிறான். இரண்டாவது வசனத்தில் அவன் எதுவரைக்கும் என் எண்ணங்களோடு போராடிக் கொண்டிருப்பேன்? எனக் கேட்கின்றான். இவ்வாறு புலம்பலை கொண்ட சங்கீதங்கள் மறைமுகமாக, நம்முடைய கேள்விகளோடு தேவனை ஆராதிக்க வருமாறு அனுமதிக்கின்றன. இத்தகைய கவலையும், வேதனையும் நிறைந்த நீண்ட காலங்களில் நாம் பேசுவதற்கு தேவனைத் தவிர வேறு சிறந்த நபர் யார் இருக்க முடியும்? நம்முடைய வியாதியின் போராட்டங்களையும், துயரங்களையும், நாம் விரும்பும் மனிதர்களின் தன்னிஷ்டப் போக்கினையும், உறவினரிடையேயுள்ள கஷ்டங்களையும் நாம் தேவனிடம் கொண்டு வரலாம்.

நமக்குக் கேள்விகளிருந்தாலும் நாம் தேவனை ஆராதிப்பதை விட்டுவிடத் தேவையில்லை. சர்வவல்ல, பரலோக தேவன் நம்முடைய கவலை நிரம்பிய கேள்விகளை அவரிடம் கொண்டு வரும்படி அழைக்கின்றார். ஒருவேளை தாவீதைப் போன்று, சரியான வேளையில் நம்முடைய கேள்விகள் வேண்டுதல்களாகவும், நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், தேவனைப் போற்றும் துதிகளாகவும் மாறிவிடும் (வச. 3).

கர்த்தருடையவன்

தங்கள் உடல்மீது எழுதிக் கொள்ளல் அல்லது வரைந்து கொள்ளல் என்பது தற்காலத்தில் மிகவும் பிரபலமாகி வருகின்றது. இந்தப் பச்சைக் குத்திக் கொள்ளலில் சில சிறியதாகவும் யார் கவனத்தையும் ஈர்ப்பதாகவும் இருப்பதில்லை. ஆனால், தற்பொழுது விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் முதல் சாதாரண மக்கள் வரை தங்கள் உடலின் பெரும்பகுதியை வண்ணங்களாலான படங்கள், எழுத்துக்கள், கோலங்களால் மூடிவிடுகின்றனர். 2014 ஆம் ஆண்டு பச்சைக் குத்தல் மூலம் மூன்று பில்லியன் டாலர் வருவாய் கிடைத்ததெனவும், பச்சைக் குத்தியதை அழிப்பதன் மூலம் அறுபத்தாறு மில்லியன் டாலர் வருவாய் கிடைத்தாகவும் வலைதளங்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் இவ்வாறு பச்சைக் குத்திக் கொள்வதைக் குறித்து என்ன எண்ணினாலும் சரி, ஏசாயா 44, ஜனங்கள் தங்கள் கரங்களில் எதையாகிலும் எழுதிக் கொள்வதைப் பற்றி குறிப்பிடுகின்றது. “நான் கர்த்தருடையவன்” (வச. 5) என்று தனக்கு ஒரு நாமத்தைத் தரித்துக்கொள்வது, தேவன் தாம் தெரிந்துகொண்ட ஜனத்தின் மீது கொண்டுள்ள கரிசனையை விளக்கும் அந்தப் பகுதியின் உச்சக்கட்டத்தைக் காட்டுகின்றது (வச. 1). கர்த்தர் அவர்களுக்குத் துணை செய்கிறவர் (வச. 2) அவர்களுடைய நிலமும் அவர்களுடைய சந்ததியும் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெறும்படி முன் குறிக்கப்பட்டது (வச. 3). இரண்டு வல்லமையான வார்த்தைகள் “நான் கர்த்தருடையவன்” என்பன அவர்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள் என்பதையும், தேவன் அவர்களைப் பாதுகாக்கின்றார் என்பதையும் உறுதியாக வெளிப்படுத்துகின்றன.

இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையினால் தேவனிடத்தில் வருகின்றவர்கள் தங்களைக் குறித்து உறுதியான நம்பிக்கையோடு தங்களைக் குறித்து, “நான் கர்த்தருடையவர்” என்று சொல்லலாம். நாம் அவருடைய ஜனங்கள், அவருடைய ஆடுகள், அவருடைய பிள்ளைகள், அவருடைய பின் சந்ததியினர் அவரோடு குடியிருப்பவர்கள். இவை நம் வாழ்வின் எல்லாக் காலங்களிலும் நாம் பற்றிக்கொள்ள வேண்டியவை. நமக்கு வெளிப்பிரகாரமான எந்த அடையாளமோ, பச்சைக் குத்தலோ தேவையில்லை. நம் இருதயங்களில் இருக்கிறார் என்பதை நம் சிந்தனையில் பதித்துக் கொள்வோம். நாம் கர்த்தருடையவர்கள் (ரோம. 8:16-17).

பாதுகாப்பாக இயேசுவின் கரங்களில்

வெளியே வானம் இருண்டு, வானிலை அச்சுறுத்தியது. எனது அலைபேசியில் வந்த எச்சரிப்பு செய்தி திடீரென்று வெள்ளம் வரலாம் என்று அறிவித்தது. வழக்கத்தை விட அதிகமான வாகனங்கள் எங்கள் வீட்டருகில் நிறுத்தப்பட்டிருந்தன. பள்ளிப் பேருந்து அந்த இடத்தில் பிள்ளைகளை இறக்கி விடுவதால், தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் காத்திருந்தனர். பேருந்து வருவதற்குள் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. ஒரு பெண் தன் காரில் இருந்து இறங்கி, பின்புறமிருந்து ஒரு குடையை எடுத்தார். தன் சிறு பிள்ளையை அழைத்துக்கொண்டு, அவள் காரில் ஏறும்வரை, மழையில் நனையாதபடி குடையைப் பிடித்து வந்தாள். ஒரு நல்ல தாயாக, தன் பிள்ளையை பாதுகாப்புடன் நடத்திய அந்த அழகிய தருணம், நமது பரம தந்தையின் அக்கறையை எனக்கு நினைவுபடுத்தியது.

ஏசாயா தீர்க்கதரிசி கீழ்ப்படியாமைக்குரிய தண்டனையையும், கடவுளின் ஜனங்களுக்கு அதன் பின்னான பிரகாசமான நாட்களையும் முன் அறிவித்தார் (ஏசாயா 40:1-8). பர்வதத்தில் இருந்து வரும் பரலோக அறிவிப்பு கடவுளின் வல்லமையான பிரசன்னத்தையும், அக்கறையையும் இஸ்ரவேலர்களுக்கு உறுதிப்படுத்தியது. கடவுளின் அதிகாரம் அப்போது இருந்ததுபோல இப்போதும் இருப்பதால், கவலைப்படுபவர்கள் பயப்படாமல் இருக்கலாம் (வச. 9-10). மேய்ப்பர்கள் அளிக்கும் பாதுகாப்பைப் போன்ற கடவுளின் பாதுகாப்பு குறித்த செய்தியும் அந்த அறிவிப்பில் இருந்தது (வச. 11): ஆட்டுக்குட்டிகள் மேய்ப்பரின் கரங்களில் பாதுகாப்பாக இருக்கும். கறவலாடுகள் மெதுவாக நடத்தப்படும்.

கடினமான சூழ்நிலைகள் கொண்ட உலகில், பாதுகாப்பு, அக்கறை குறித்த இதுபோன்ற வர்ணனைகள், நாம் தன்னம்பிக்கையுடன் கடவுளை நோக்கிப்பார்க்க உதவுகின்றன. கர்த்தரை முழுமையாக நம்புபவர்கள், அவரில் பாதுகாப்பையும், புது பெலனையும் பெற்றுக்கொள்வார்கள் (வச. 31).

உன் சகோதரனுக்குச் செவிகொடுப்பது

தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். யாக்கோபு 5:20

 

“நான் சொல்வதைக் கேள், நான் உன் அண்ணன்”. எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு சிறுவன், தன்னைவிட்டு தூரமாக விலகிச் செல்லவிருந்த தன் தங்கையிடம் அக்கறையுடன் கூறினான். அந்தச் சூழ்நிலையில் எது சிறந்தது என்று அந்தச் சிறுவனால் அனுமானிக்க முடிந்தது.

 

நம்மில் எத்தனை பேர் நம் சகோதரன் அல்லது சகோதரியின் ஞானமான அறிவுரைகளை ஏற்க மறுத்திருக்கிறோம்? நல்ல அறிவுரையை ஏற்காததின் பின்விளைவுகளை நீங்கள் ஒருவேளை சந்தித்திருந்தால், உங்களைப்போல் நிறையபேர் இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.

 

கிறிஸ்தவ விசுவாசிகளாக, நமக்குக் கிடைத்திருக்கும் பெரிய கொடைகளில் ஒன்றுதான் குடும்பம் – கர்த்தரில் நாம் அனைவரும் கொண்டிருக்கும் விசுவாசத்தினால் ஆவியில் இணைக்கப்பட்ட விசுவாசம், குடும்பம். கர்த்தரையும், ஒருவரை ஒருவர் நேசிக்கும் பண்பட்ட சகோதர சகோதரிகள் இந்தக் குடும்பத்தில் உண்டு. எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த அந்தச் சிறுவனைப்போல, ஒரு எச்சரிக்கும் வார்த்தை அல்லது திருத்துதல் நமக்கும் சில சமயங்களில் தேவைப்படுகிறது. நம்மை யாரோ புண்படுத்தும்போது அல்லது நாம் யாரையோ புண்படுத்தும்போது இது மிகவும் பொருந்தும். சரியான காரியத்தைச் செய்வது கடினம்தான். ஆனால் மத்தேயு 18:15-20ல் இயேசுவின் வார்த்தைகள் இதுபோன்ற ஆவிக்குள்ளான குடும்பங்களில் மனஸ்தாபம் ஏற்படும்போது என்ன செய்யவேண்டும் என்று எடுத்துக்கூறுகிறது.

 

அதிர்ஷ்டவசமாக, கிருபையின் பரம பிதா, கர்த்தரையும், மற்றவர்களையும் கனம்பண்ணுவதற்கு நமக்கு உதவி செய்ய நம் வாழ்க்கையில் சில மக்களை வைத்திருக்கிறார். அவர்கள் சொல்வதை நாம் கேட்கும்போது, குடும்பத்தில் எல்லாம் சுமூகமாக இருக்கும் (வச. 15).

உறுதியாய் நிற்பது எப்படி?

பனிக்காலத்தின் கடுங்குளிர் நாள் அது. கதகதப்பான என் வாகனத்தில் இருந்து, ஒரு கதகதப்பான கட்டடத்துக்குள் எப்படிச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அடுத்த நிமிடம், என் முழங்கால்கள் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டு, பாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கமாக நகர்ந்துதரையில் விழுந்தேன். எலும்பு முறிவு எதுவும் இல்லை என்றாலும், அதிக வலியை உணர்ந்தேன். நேரம் ஆக ஆக வலி அதிகரித்தது. நான் முற்றிலும் குணம்பெற பல வாரங்கள் ஆனது.
 
இதுவரை கீழே விழுந்ததில்லை என்று யாராலும் சொல்லமுடியாது. யாரோ அல்லது ஏதோ ஒன்று  நாம் கீழே விழாமல் பார்த்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? சரீரப் பிரகாரமாக, நாம் விழாமல் இருக்க எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும், நம் வாழ்க்கையில் கிறிஸ்துவை கனப்படுத்த நாம் எடுக்கும் முயற்சியில் நமக்கு உதவ தயாராகக் காத்திருப்பதோடு, நமது மறுமை வாழ்வில் அவரது பிரசன்னத்தில் சந்தோஷமாக நிற்க தயார்படுத்தவும் ஒருவர் இருக்கிறார்.
 
நம்மை திசைதிருப்பும், குழப்பும், சிக்கவைக்கும் பல சபலங்களை (தவறான போதனைகளையும்கூட) நாம் தினமும் எதிர்கொள்ளுகிறோம். ஆனால் இந்த உலகத்தில் நாம் நம் வழிகளில் உறுதியாக இருப்பதற்கு நம் சொந்த முயற்சிகள் மட்டும் காரணம் கிடையாது. நாம் கோபமாகப் பேசக்கூடிய சந்தர்ப்பங்களில் அமைதி காக்கவும், ஏமாற்றக்கூடிய சந்தர்ப்பங்களில் நேர்மையாக நடக்கவும், வெறுப்புக்குப் பதிலாக அன்பைத் தேர்ந்தெடுக்கவும், தவறுக்குப் பதிலாக உண்மையைத் தேர்ந்தெடுக்கவும் கர்த்தரின் வல்லமையே நம்மைத் தாங்குகிறது என்பது எவ்வளவு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது (யூதா 1:24). கிறிஸ்து மீண்டும் வரும்போது, கர்த்தரின்அங்கீகரிப்பைப் பெற்று அவர்முன் நாம் நிற்கும்போது, அவரது நிலையான கிருபைக்காக நாம் இப்போது ஏறெடுக்கும் ஸ்தோத்திரம், நித்திய காலமாக எதிரொலிக்கும் (வச. 25).
 

என் ஆத்துமாவே, அமர்ந்திரு!

ஒரு குழந்தையை அன்போடு அனைத்துக்கொண்டு, தாய் தன் விரலை அக்குழந்தையின் உதடுகளின் முன் வைத்து - ஷ்ஷ்… என்ற வார்த்தையைச் சொல்வது போன்று கற்பனை செய்துபார். இந்த செயலில், எளிய வார்த்தையின் அர்த்தம் என்னவெனில், ஏமாற்றங்களின் மத்தியில் எதிர்பார்ப்போடுள்ள குழந்தையின் வலி அல்லது அசௌகரியத்தை அமைதிப்படுத்துவதாகும். இப்படிப்பட்ட காட்சிகள் எல்லாவிடத்திற்கும், எக்காலத்திற்கும் உரியவை. நாம் அனைவருமே இத்தகைய அன்பின் வெளிப்பாடுகளைப் பெற்றிருக்கவும் முடியும், கொடுத்திருக்கவும் முடியும். நான் சங்கீதம் 131:2 ஐ தியானித்த போது இந்த காட்சிதான் என் கண் முன்னே வந்தது.

இந்த சங்கீதத்தின் வார்த்தைகளும் போக்கும் சங்கீதக்காரன் தாவீதின் தீவிரமான அநுபவத்திலிருந்து வெளிவந்த வார்த்தைகள் எனத் தெரிகின்றது. நீ ஏமாற்றத்தையோ, தோல்வியையோ சந்திக்கும் போது, அது உன்னை ஜெபத்திற்கு நேராக வழிநடத்தினதுண்டா? உன்னுடைய வாழ்வின் சூழ்நிலைகளால் நீ தாழ்த்தப்படும்போது நீ என்ன செய்வாய்? ஒரு தேர்வில் தோற்கும் போது, ஒரு வேலையை இழந்த போது அல்லது ஓர் உறவின் முடிவைச் சந்தித்தபோது என்ன செய்வாய்? தாவீது தன்னுடைய இருதயத்தை கர்த்தரிடத்தில் ஊற்றி, அத்தோடு தன் ஆன்மாவை உண்மையாய் ஆராய்ந்து அறிந்து ஒரு பட்டியலை தயாரித்தான் (சங். 131:1) அவனுடைய சுற்றுச் சுழலோடு சமாதானம் செய்து கொண்டபின், ஒரு குழந்தை தன் தாயின் அரவணைப்பிலிருக்கும் போது அமைதியாயிருப்பது போல, தாவீதும் மன நிறைவைப் பெற்றுக்கொண்டான் (வச. 2).

வாழ்க்கையின் சூழல் மாறலாம். சிலவேளைகளில் நாம் தாழ்த்தப்படலாம். ஆனாலும் நாம் நம்பிக்கையோடும் மன நிறைவோடும், நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை என்று வாக்களித்துள்ள தேவன் நம்மோடிருக்கிறார் என அவரை முற்றிலுமாக நம்புவோமாக.

வேத வார்த்தைகளை நாம் புரிந்துகொள்ளும்படிச் செய்ய தேவனாலேயே முடியும்.

சில  வருடங்களுக்கு முன் என்னோடு பயணம் செய்த ஒருவர், நான் தூரத்துப் பொருட்களைப் பார்க்கச் சிரமப்படுவதைக் கவனித்து ஒன்று செய்தார். அவர் செய்தது ஒரு சிறிய காரியமாயினும் அது என் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் தன்னுடைய கண்ணாடியை கழற்றி அதை என்னைப் போட்டுப் பார்க்கும்படி கூறினார். நான் அவற்றை பயன்படுத்திய போது, என்ன ஆச்சரியம்! என்னுடைய மங்கலான பார்வை மறைந்து தெளிவாகப் பார்க்க முடிந்தது. உடனடியாக நான் ஒரு கண் மருத்துவரை அணுகினேன். அவர் என் பார்வையை சரிசெய்யக் கூடிய ஒரு கண்ணாடியை எனக்குப் பரிந்துரைத்தார்.

இன்றைய வேதாகமம் பகுதி லூக்கா 18, முற்றிலும் பார்வையிழந்த ஒரு மனிதனைப் பற்றி குறிப்பிடுகிறது. முழுவதும் இருளிலேயே வாழ்ந்து வருகின்ற அவன் தன்னுடைய வாழ்வுக்காக வேண்டும்படி தூண்டப்படுகின்றான். பிரசித்திப் பெற்ற போதகர், அற்புதம் நிகழ்த்துபவர் என்று இயேசுவைக் குறித்த செய்தி அந்த குருட்டுப் பிச்சைக்காரனின் செவிகளை அடைகிறது. அந்த குருடன் அமர்ந்திருக்கின்ற வழியே இயேசு வந்தபோது, அவனுடைய இருதயத்தினுள் நம்பிக்கை எரியத் துவங்குகிறது. “இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்!” (வச. 37) எனக் கூப்பிடுகின்றான். அவன் வெளியுலகைப் பார்க்கக்கூடாதிருந்தும், அவனுடைய ஆவியின் கண்கள் இயேசுவின் உண்மையான அடையாளத்தை கண்டு கொண்டன. அவனுக்குள்ளிருந்த நம்பிக்கை அவனுடைய தேவையைச் இயேசு சந்திப்பார் என்றது. அவனுடைய நம்பிக்கையின் தூண்டுதலால், இன்னும் சத்தமாக கூப்பிடுகின்றான். “தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்!” (வச. 38) விளைவு என்ன? அவனுடைய குருட்டுத் தன்மை மாறியது. தன்னுடைய வாழ்விற்காகப் பிச்சையெடுத்தலை விட்டுவிட்டு, தேவனை மகிமைப்படுத்திக் கொண்டே அவருக்குப் பின் சென்றான் (வச. 43), ஏனெனில், இப்பொழுது அவனால் பார்க்க முடிகிறது.

உன் வாழ்வின் இருண்ட காலங்களில் நீ எங்கே செல்கின்றாய்? எதை நோக்கி அல்லது யாரைக் கூப்பிடுகின்றாய்? கண் கண்ணாடிக்கான பரிந்துரை ஒருவரின் பார்வையை மேம்படுத்திக்கொள்ள உதவலாம். ஆனால், இயேசுவின், தேவனுடைய குமாரனின் கிருபை நிறைந்த தொடுதல் மக்களை ஆவியின் இருளிலிருந்து வெளிச்சத்திற்குள் கொண்டு வருகிறது.