தேவனின் தூதரகம்
லூத்மில்லா என்னும் 82வயது நிரம்பிய விதவை தாயார், செக் குடியரசு நாட்டிலுள்ள தன் வீட்டை, “பரலோக இராஜ்யத்தின் தூதரகம்” என்றும், “என் வீடு கிறிஸ்துவின் இராஜ்யத்தின் விரிவாக்கம்” என்றும் கூறுகிறார். தேவையோடு இருக்கிற மக்களையும், சிநேகிதர்களையும் அவர் தன் வீட்டிற்கு வரவேற்று, இரக்கத்தோடும், ஜெபஆவியோடும் அவர்களுக்கான ஆகாரத்தையும், தங்குமிடத்தையும் கொடுக்கிறார். தன் வீட்டிற்கு வருபவர்களுக்காக அவர் கரிசணையோடு செய்யும் உபகாரங்களுக்கு, அவர் பரிசுத்த ஆவியானவரின் உந்துதலை சார்ந்து, அவர்களின் ஜெபங்களுக்கு தேவன் பதிலளிக்கும் முறைகளைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்.
ஒரு ஓய்வுநாளில் இயேசுகிறிஸ்து, பரிசேயன் ஒருவன் வீட்டில் விருந்துண்ண போகிறார். அதற்கு முரணாய் தன் வீட்டையும், இருதயத்தையும் திறந்து கொடுத்து இயேசுவுக்கு லூத்மில்லா ஊழியம் செய்கிறார். இயேசு, அந்த வேதபாரகனைப் பார்த்து, “நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக” திருப்பி செலுத்துகிறவர்களை அழைக்க வேண்டாம் என்கிறார் (லூக்கா 14:13). அந்த பரிசேயன், தன்னுடைய பெருமையை வெளிக்காண்பிப்பதற்காய் இயேசுவை அழைத்திருக்கிறான் (வச.12) என்பதை இயேசுவின் பதிலிலிருந்து நாம் அறியலாம். ஆனால், “தேவனுடைய அன்பையும், ஞானத்தையும் பிரதிபலிக்கும் கருவியாய்” லூத்மில்லா, பல ஆண்டுகளாய் மக்களை தன் வீட்டிற்கு வரவேற்று உபசரிக்கிறார்.
மற்றவர்களுக்கு மனத்தாழ்மையோடு சேவை செய்வது, “தேவனுடைய இராஜ்யத்தின் தூதுவராய்” இருக்க ஒரு வழி. மற்றவர்களுக்கு தங்க வசதி செய்துகொடுக்க முடியாவிட்டாலும், அவர்களின் தேவையை முன்னிறுத்தி நமக்கேற்ற வழிகளில் அவர்களுக்கு உதவலாம். இன்று நம் உலகத்தில் தேவனுடைய இராஜ்யத்தை எவ்வாறு விரிவடையச் செய்யலாம்?
தாழ்மையான தோரணை
"உன் கைகளை பின்பாக கட்டிக் கொள். அது உனக்கு சௌகரியமாக இருக்கும்" ஜேன் ஒரு குழுவிற்கு முன்பாக பேசுவதற்கு முன், அவ ளுடைய கணவன் எப்போதும் கொடுக்கும் அன்பான அறிவுரை இதுதான். எப்போதெல்லாம் அவள் மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கவோ அல்லது ஒரு சூழ்நிலையை கட்டுப்படுத்தவோ நினைக்கும் போதெல்லாம் அவள் இந்த தோரணையில் தான் இருப்பாள். ஏனெனில் அது அவளுடைய மனதை கற்றுக்கொள்ள அல்லது கற்றுக்கொடுக்க பக்குவப்படுத்திகிறது. தனக்கு முன்பாக இருப்பவர்களை நேசிக்கவும், தாழ்மையாக இருக்கவும், பரிசுத்த ஆவியானவருக்கு தன்னை ஒப்புவிக்கவும் இந்த தோரணையை பயன்படுத்தினாள்.
தாழ்மையை குறித்ததான ஜேனின் இந்த புரிந்து கொள்ளுதல், தேவனிடமிருந்தே அனைத்தும் வருகிறது என்ற தாவீது ராஜாவின் அனுமானத்தில் வேரூன்றி உள்ளது. தாவீது தேவனை நோக்கி "தேவரீர் என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்" (சங்கீதம் 16:2) என்கிறார். அவர் தேவனை நம்பவும், அவருடைய ஆலோசனையை நாடவும் கற்றுக்கொண்டார்: "இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்". (வ.7) “அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை” (வ.8) என்பதை அறிந்திருந்தார். அவர் தன்னை தானே உயர்த்த வேண்டியிருந்ததில்லை ஏனெனில் அவர் தன்னை நேசிக்கும் வல்ல தேவனை நம்பினார்.
நாம் அனுதினமும் தேவனை நோக்கிப் பார்த்து விரக்தி அடையும் போதெல்லாம் அவருடைய உதவியை கேட்கும்போதும் அல்லது நாவு கட்டப்பட்டாற்போல போல பேச வார்த்தைகளின்றி, வார்த்தைகளுக்காக கேட்கும்போதும் அவர் நம்முடைய வாழ்வில் கிரியை செய்வதை நம்மால் பார்க்க முடியும். ஜேன் சொல்வது போல நாமும் "தேவனோடு கூட கூட்டாளி" ஆகலாம். பின்னர் நாம் சிறப்பாக செய்து முடித்ததை, நாம் உணர்ந்து கொள்வோம் ஏனெனில் தேவனே நாம் செழிக்க உதவியுள்ளார்.
நம் கைகளை நமக்கு பின்பாக தாழ்மையின் தோரணையாக கட்டிக்கொண்டு, சகலமும் தேவனிடமிருந்து நமக்கு வருகிறது என்பதை நினைவுகூர்ந்தவர்களாக, மற்றவர்களை நாமும் அன்போடு பார்க்க முடியும்.
வார்த்தையும் புத்தாண்டும்
மிச்செல்லன் பிலிப்பைன்ஸில் வளர்ந்தபோது பல சவால்களைச் அவள் சந்திக்க நேர்ந்தது. அவர் எப்போதும் வேத வார்த்தைகளை நேசித்து ஆறுதல் அடைந்துகொள்வது வழக்கம். அவர் பல்கலைக்கழகத்தில் பயிலும் போது ஒரு நாள் யோவான் சுவிசேஷத்தின் முதலாம் அதிகாரத்தைப் படிக்கையில் அவளுடைய “கடின இருதயம் கலங்கியது.” அவருடைய உள்ளுணர்வு, “ஆம்! நீ வார்த்தைகளை நேசிக்கிறாய், அதை அறிவாயா? நித்திய வார்த்தை என்று ஒன்று உண்டு. அவர் ஒருவரால் மட்டுமே எப்பொழுதும் இருளை அழிக்க முடியும். அந்த வார்த்தை மாம்சமாகியது. அந்த வார்த்தையினால் உன்னை நேசிக்க முடியும்” என்று அவளிடம் கூறியது.
அவள் வாசித்த யோவான் சுவிசேஷத்தின் துவக்க வரிகளை வாசிப்பவர்களுக்கு, ஆதியாகமத்தின் துவக்க வார்த்தைகள் நினைவுக்கு வரும்: “ஆதியிலே…” (ஆதியாகமம் 1:1). யோவான் தன் சுவிசேஷத்தில், இயேசு தேவனோடு ஆதியிலே இருந்தார் என்பதை மட்டுமல்ல; இயேசுவே தேவன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் (யோவான் 1:1). அந்த ஜீவனுள்ள வார்த்தை மாம்சமாகி, “நமக்குள்ளே வாசம்பண்ணினார்” (வச. 14). மேலும், அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்று கொண்டவர்கள் அவரின் பிள்ளைகளானார்கள் (வச. 12).
மிச்செல்லன் அன்றே தேவனுடைய அன்பைத் தழுவி “தேவனாலே மறுபடியும் பிறந்தார்” (வச. 13). அவளுடைய குடும்பத்தின் தொடர் போதைப் பழக்கத்திலிருந்து தேவனே அவளை மீட்டெடுத்தார். தற்போது ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையை பகிர்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவளாய் கிறிஸ்துவின் சுவிசேஷ வார்த்தைகளை அதிகமாய் எழுதுகிறார்.
நாம் கிறிஸ்துவின் விசுவாசிகளாயிருந்தால் நாமும் தேவனுடைய நற்செய்தியையும் அவருடைய அன்பையும் பகிரலாமே. இந்த 2022 ஆம் ஆண்டு துவக்கத்தில், எப்படிப்பட்ட கிருபை நிறைந்த வார்த்தைகளை நாம் பேசப்போகிறோம்?
சமாதானக் காரணர்
ஜானின் சளி இறுமல், நிமோனியா காய்ச்சலாக மாறியது. அதினால் அவர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்ட அந்த மருத்துவமனையின் ஒருசில தளங்களுக்கு மேலே அவருடைய தாயார் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். தன் தாயின் உடல்நிலையையும் தன்னுடைய உடல் நிலையையும் குறித்து அவர் அதிக கவலைப்பட்டார். ஒரு கிறிஸ்மல் இரவின்போது, “ஓ புனித இரவே” என்று வானொலியில் ஒலித்த அந்த பாடலைக் கேட்ட ஜான், தேவனுடைய சமாதானத்தினால் ஆட்கொள்ளப்பட்டார். இரட்சகரின் பிறப்பைக் குறித்த அந்த பாடலின் வரிகளை அவர் கேட்டார்: “சோர்வுற்ற ஆத்துமாவுக்கு ஒரு நம்பிக்கையாய் அங்ஙனம் ஒரு புதிய மகிமையான காலை உதயமாகிறது.” அதைக் கேட்ட தருணத்தில், அவரைக் குறித்தும் அவருடைய தாயாரைக் குறித்தும் இருந்த கவலை மறைந்தது.
ஏசாயா தீர்க்கதரிசனத்தின் படி, நமக்கு கொடுக்கப்பட்ட அன்பான இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவே சமாதான காரணர் (ஏசாயா 9:6). “மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல்” (மத்தேயு 4:15; ஏசாயா 9:2) வெளிச்சமாகவும் இரட்சிப்பாகவும் உதிக்க, இந்த உலகத்தில் குழந்தையாய் பிறந்த இயேசுவில் இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறியது. அவரால் நேசிக்கப்படுகிறவர்கள் கடினமான வாழ்க்கைப் பாதையில் பயணித்தாலும், அவர் அவர்களை சேர்த்துக்கொண்டு சமாதானத்தை அருளுகிறார்.
ஜான்; அந்த மருத்துவமனையில் இயேசுகிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து சிந்தித்து, அவை அனைத்தையும் மேற்கொள்ளும் சமாதானத்தைப் பெற்றுக்கொண்டார் (பிலிப்பியர் 4:7). கிறிஸ்மஸ் நாட்களில் தன் குடும்பத்தை விட்டு தள்ளியிருந்த அவருடைய விசுவாசத்தையும் நன்றியுணர்வையும் அந்த அனுபவம் அவருக்கு உறுதிப்படுத்தியது. தேவனுடைய பரிசான சமாதானத்தையும் நம்பிக்கையையும் நாமும் பெற்றுக்கொள்வோமாக.
திரளான ஜனங்கள்
ஞாயிறு காலை ஆராதனைக்கு நாங்கள் மகிழ்ச்சியோடும் எதிர்பார்போடும் ஒன்றுதிரண்டோம். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நாங்கள் இடைவெளியோடு அமர்ந்திருந்தாலும், ஒரு இளம் ஜோடியின் திருமண நிகழ்வை பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. தொழில்நுட்ப அறிவில் தேறிய எனது திருச்சபை நண்பர்கள் அந்த ஆராதனையை, ஸ்பெயின், போலந்து மற்றும் செர்பியா ஆகிய நாடுகளிலிருந்து தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நேரடியாய் ஒளிபரப்பினர். இந்த ஆக்கப்பூர்வமான அணுகுமுறை திருமண உடன்படிக்கையில் மகிழ்ச்சியடைய உதவியது. தேவனுடைய ஆவி எங்களை ஒன்றிணைத்து எங்களை மகிழ்ச்சியடையச் செய்தது.
“சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” (வெளி. 7:9) வந்தவர் பரலோகத்தில் தேவனுக்கு முன்பாக நின்றிருந்த அதே மகிமையை, எங்களுடைய அந்த ஞாயிறு ஆராதனையில் பலதரப்பட்ட மக்கள் மத்தியில் நின்று நாங்களும் சிறிதளவு ருசிக்க நேர்ந்தது. அன்பான சீஷனாகிய யோவான் தன் தரிசனத்தில் கண்ட இந்த திரளான ஜனக்கூட்டத்தை வெளிப்படுத்தல் புத்தகத்தில் நினைவுகூருகிறார். அதில் கூடியிருக்கிறவர்கள் தூதர்களோடும் மூப்பர்களோடும் இணைந்து தேவனை துதிக்கின்றனர்: “ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக. ஆமென்” (வச. 12).
இயேசுவின் இந்த கலியாணத்தில் சர்வதேச மனையாட்டி இணையும் இந்த ஆட்டுக்குட்டியானவரின் கலியாணவிருந்தில் (19:9) ஆராதனையும் கொண்டாட்டமும் இடம்பெறும். பலதேசங்களைச் சேர்ந்த மக்கள் கூடி ஆராதித்த அந்த ஞாயிறு ஆராதனையானது, ஒரு நாள் நாம் பரலோகத்தில் இப்படியாய் கூடி ஆராதிப்போம் என்பதைப் பிரதிபலித்தது.
அந்த மகிழ்ச்சியான அனுபவத்திற்காக காத்திருக்கிற இந்த நாட்களில், நாம் தேவ ஜனத்தோடு கூடி விருந்தை ஆசரித்து மகிழ்ந்திருப்போம்.
தேவனை துதித்து பாடு
சீஷத்துவ கருத்தரங்கின் வார முழுமையும் கோடையின் உஷ்ணம் எங்களை தகனித்தது. ஆனால் கடைசி நாளில் மென்மையான குளிர் காற்று வீசியது. சீதோஷண நிலையில் ஒரு மாற்றத்தை தேவன் கொண்டுவந்து ஆச்சரியத்தை நடப்பித்ததற்காக நூற்றுக்கணக்கானோர் அன்றைய ஆராதனையில் இணைந்து தேவனை மகிழ்ச்சியோடு ஆராதித்தனர். தங்கள் இருதயத்தையும், ஆத்துமாவையும், சரீரத்தையும், சிந்தையையும் முழுவதுமாய் அர்ப்பணித்து, அநேகர் விடுதலையோடு தேவனை ஆராதித்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பதாய் நடந்த அந்த சம்பவத்தை நினைவுகூரும்போது, தேவனை ஆராதிப்பதில் ஏற்படும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் உணர்ந்தேன்.
தேவனை முழுமனதுடன் ஆராதிப்பதைக் குறித்து தாவீது ராஜா அறிந்திருந்தார். கர்த்தருடைய பெட்டி எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டபோது இவர் ஆடிப்பாடி, ஆர்ப்பரித்து கொண்டாடினார் (1 நாளாகமம் 15:29). அவருடைய மனைவி மீகாள் அதைப் பார்த்து “அவரைத் தன் இருதயத்திலே அவமதித்தாள்” (வச. 29). ஆனால் அவளுடைய அந்த அவமதிப்பை பொருட்படுத்தாமல் தாவீது ஒன்றான மெய்தேவனை ஆராதித்தார். ஆடுவது மற்றவர்களின் பார்வைக்கு கனவீனமாய் தெரிந்தாலும், அவரைத் தேர்ந்தெடுத்து ராஜாவாக்கிய தேவனுக்கு முழுமனதோடு நன்றி சொன்னார் (2 சாமுவேல் 6:21-22ஐ காண்க).
“அப்படி ஆரம்பித்த அந்நாளிலேதானே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்திலும் அவன் சகோதரரிடத்திலும் கொடுத்த சங்கீதமாவது: கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்” (1 நாளாகமம் 16:7-9). நம்முடைய துதியையும் பாடலையும் அவருக்கு செலுத்தி, முழுமையாய் அவரை ஆராதிப்போம்.
உன்னைக் குறித்த தேவதிட்டம்
ஆறு ஆண்டுகளாய் ஏக்னஸ் தன்னை ஒரு நேர்த்தியான ஊழியரின் மனைவியாய் மாற்றிக்கொள்வதற்கு பிரயாசப்பட்டார். அவருடைய மாமியாரைப்போன்று (அவரும் போதகரின் மனைவி) தன்னை மாற்றிக்கொள்ள முயன்றாள். ஆனால் ஒரு ஊழியரின் மனைவியாய் தன்னுடைய எழுத்து திறமையையும் ஓவியத் திறமையையும் வெளிக்காட்ட முடியாது என்று எண்ணி அதை தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு, மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டாள். அது அவளை தற்கொலைக்குத் தூண்டியது. ஒரு போதகரின் ஜெபத்தினால் அந்த இருளான சூழ்நிலையிலிருந்து அவள் விடுபட்டாள். அவர் அவளுக்கு ஒவ்வொரு நாள் காலையிலும் 2 மணி நேரம் எழுதக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார். அதினால் அவள் விழிப்படைந்து, தேவன் அவளுக்குக் கொடுத்த அழைப்பை “முத்திரையிடப்பட்ட நியமனம்” என்று அழைக்கிறாள். அவள் இப்படியாக எழுதுகிறாள், “நான் நானாகவே இருப்பது என்பது – தேவன் எனக்குக் கொடுத்த திறமைகளை சரியாய் செயல்படுத்தும் வழியை கண்டறிவதாகும்.”
அவள் தன்னுடைய அழைப்பை எவ்வாறு தெரிந்துகொண்டாள் என்பதை தாவீதின் பாடல் வரிகள் மூலம் தெரிவிக்கிறாள்: “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங்கீதம் 37:4). அவள் தன் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து, தன்னை தேவன் வழிநடத்துவார் என்று அவர் மீது நம்பிக்கையாயிருந்தாள் (வச. 5). அவளுக்கு எழுதுவதற்கும் ஓவியம் வரைவதற்கும் மாத்திரமல்லாது, மற்றவர்களை தேவனிடத்தில் உறவாடச் செய்வதற்கும் தேவன் வழி செய்தார்.
நாம் அவருடைய பிரியமான பிள்ளைகள் என்பதை மட்டுமல்லாது, நம்முடைய தாலந்துகள் மற்றும் திறமைகள் மூலம் அவருக்கு இன்றும் நேர்த்தியாய் எப்படி ஊழியம் செய்வது என்பதைக் குறித்த “முத்திரையிடப்பட்ட நியமனங்களை” தேவன் வைத்துள்ளார். அவரை நம்பி, அவரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது அவர் நம்மை வழிநடத்துவார்.
தேவனிடத்தில் பாதுகாப்பாக இருப்பது
நான் வாலிப வயதானபோது என்னைக் குறித்து நிச்சயம் இல்லாதிருந்ததையும் மற்றும் தன்னம்பிக்கை அற்ற நிலையையும் நினைவு கூர்ந்தேன். என் பிள்ளைகள் வாலிப வயதை அடைந்ததால், நம்முடைய அடையாளத்தை குறித்து அவர்களுக்கு கடிதம் எழுதினேன். “நீங்கள் யார் என்பதை அறிந்துக்கொள்ளும்போது நீங்கள் யாருக்குரியவர்” என்பதை அறிந்துக்கொள்ள வழிநடத்தும் என்று கூறினேன். தேவன் நம்மை உருவாக்கினார் என்று நாம் புரிந்துக்கொண்டு, அவரைப் பின்பற்ற ஒப்புக்கொள்ளும்போது, நாம் யாராயிருக்க நம்மைப் படைத்தாரோ அதிலே நாம் சமாதானமாய் இருக்க முடியும். நாம் அதிகமாய் அவரைப்போல மாற அவர் ஒவ்வொரு நாளும் நம்மில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார்.
நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதை அடையாளப்படுத்த வேதத்தில் அடித்தளமான பகுதி உபாகமம் 33:12. “கர்த்தருக்குப் பிரியமானவன் அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்;. அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார்.” தேவனுடைய பிள்ளைகள் தங்களுக்கு தேவன் வாக்களித்த தேசத்தை சுதந்தரித்துக் கொள்ள ஆயத்தமாயிருந்தபோது, மோசே தன்னுடைய மரணத்திற்கு முன் இந்த ஆசீர்வாதத்தை பென்யமீன் கோத்திரத்தாருக்கு அறிவித்தான். அவர்கள் தேவனுக்குப் பிரியமானவர்கள் என்றும் அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் என்றும் அடையாளத்தினால் பாதுகாப்பாய் இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் எப்போதும் நினைவுகூர வேண்டும் என்று தேவன் விரும்பினார்.
நாம் தேவனுடைய பிள்ளைகள் என்ற அடையாளத்தை அறிந்துகொள்வது எல்லோருக்கும் - பதின்மை பருவத்தினர், வாழ்க்கையில் நடுத்தர வயதுள்ளவர்கள் மற்றும் நீண்ட வருடங்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறவர்கள் - மிக முக்கியமானது. தேவன் நம்மை உருவாக்கினார் என்றும் அவர் நம்மை கவனித்துக்கொண்டிருக்கிறார் என்றும் நாம் புரிந்துக்கொள்ளும்போது நாம் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் அன்பைக் கண்டுக்கொள்ள முடியும்.
இயேசுவை பகிர்தல்
டுவைட் மூடி (1837-99) என்னும் சுவிசேஷகர் இரட்சிக்கபட்ட பின்னர், ஒரு நாளைக்கு ஒருவரிடத்திலாவது சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதில்லை என்று தீர்மானித்தார். வேலைப்பளுவின் நிமித்தம் சில வேளைகளில் அவருடைய தீர்மானத்தை வெகு தாமதமாய் நினைவுகூருவதுண்டு. அப்படித்தான் ஒரு நாள் அவர் படுக்கையிலிருக்கும்போது அவருடைய தீர்மானம் அவருக்கு நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து வெளியே போனார். மழை பெய்யும் இந்த நள்ளிரவில் யாரும் இருக்கமாட்டார்களே என்று எண்ணினார். அங்கே சாலையில் குடையோடு நடந்துபோய்க் கொண்டிருந்த ஒரு மனிதனைப் பார்த்தார். வேகமாய் ஓடி, அவருடைய குடையில் தனக்கு அடைக்கலம் கேட்டார். அனுமதி கிடைத்ததும், “புயலின் நடுவில் தங்குவதற்கு உங்களுக்கு இடமிருக்கிறதா? நான் இயேசுவைக் குறித்து உங்களுக்கு சொல்லவா? என்று சுவிசேஷத்தை பகிரத் துவங்கினாராம்.
பாவத்தின் விளைவுகளிலிருந்து தேவன் நம்மை எப்படி இரட்சிக்கிறார் என்றும் சத்தியத்தை பகிர்ந்துகொள்ள மூடி எப்போதும் ஆயத்தமாயிருந்தார். அவருடைய நாமத்தையும், “அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்” (ஏசாயா 12:4) என்று இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைக்கு மூடி கீழ்ப்படிந்தார். இஸ்ரவேலர்கள் அழைக்கப்பட்டது “அவருடைய நாமம் உயர்ந்ததென்று” பிரஸ்தாபம்பண்ணுவதற்கு மாத்திரம் இல்லை, அத்துடன் சேர்த்து தேவன் எப்படி அவர்களின் இரட்சிப்பாய் மாறினார் (வச. 2) என்பதை அறிவிக்கவும் அழைக்கப்பட்டனர். நூற்றாண்டுகள் கழித்து, இன்று நாம் இயேசு மனிதனான ஆச்சரியத்தையும், சிலுவையில் மரித்து, உயிர்தெழுந்த சத்தியத்தையும் அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.
மூடி செய்தது போல, யாரோ ஒருவர் துணிந்து நம்மிடத்தில் வந்து இயேசுவைக் குறித்து அறிவித்ததினாலேயே நாம் அவரின் அன்பைக் குறித்து கேள்விப்பட்டோம். நாமும் நம்மை இரட்சித்தவரைக் குறித்து நமக்குகந்த வழியில் மற்றவர்களுக்கு அறிவிக்கலாமே.