எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

அலிசன் கீடாகட்டுரைகள்

நம்முடைய இருதயங்களிலே

ஓர் இளைஞன் பள்ளியில் சில பிரச்சனைகளைச் சந்தித்தபோது, அவனுடைய தந்தை அவனுக்கு ஓர் உறுதி மொழியைக் கற்றுக் கொடுத்தார், அதனை அவன் ஒவ்வொரு நாள் காலையிலும் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு சொல்லுவான், “தேவனே, இன்று காலை, என்னை எழுப்பினதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். நான் கற்றுக் கொள்வதற்காகவும் பிறரை வழி நடத்துவதற்காகவும் பள்ளிக்குச் செல்கிறேன்………………. அதற்காகவே, .தேவன் என்னைத் படைத்தார்” என்று சொல்லுவான். இந்த உறுதி மொழியின் மூலம் அந்த தந்தை, அந்த இளைஞனுக்கு நம்பிக்கையைக் கொடுத்ததோடு, வாழ்க்கையில் வரும் தவிர்க்கமுடியாத சவால்களைச் சந்திக்க தைரியத்தையும் கொடுத்தார்.

 இந்த உறுதிமொழியை தன்னுடைய மகன், மனதில் வைத்துக் கொள்ள உதவிய தந்தை, வனாந்தரத்தில் பயணம் செய்த இஸ்ரவேலருக்கு தேவன் கற்பித்த கட்டளையை, ஒரு வகையில் நிறைவேற்றுபவராக காணப்படுகின்றார். “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக் கடவது, நீ அவைகளை உன் பிள்ளைகளுக்கும் கருத்தாய் போதி” (உபா.6:6-7).

இஸ்ரவேலர், நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்தில் பயணம் செய்தனர், அவர்களின் அடுத்த தலைமுறையினர் தான், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தைச் சுதந்தரிக்கப் போகின்றனர், அந்த இளைய தலைமுறையினரின் கண்களும் தேவனை நோக்கி     இருந்தாலன்றி, அவர்களாலும் வெற்றியடைய முடியாது என்பதை தேவன் அறிவார். எனவே, மோசேயின் மூலமாக தேவன் அவர்களுக்கு நினைவு படுத்துகின்றார். தேவனுக்கு கீழ்ப்படியவும், தேவனை நேசிக்கவும், தேவனுடைய வார்த்தைகளை அவர்களின் பிள்ளைகளும் அறிந்து கொள்ளும்படி செய்யவும், “நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிற போதும், படுத்துக் கொள்ளுகிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு” (வ.7) என்கின்றார்.

ஒவ்வொரு புதிய நாளிலும், தேவனுக்கு நன்றியுள்ளவர்களாய் நாம் வாழும்படி நம்மை அர்ப்பணித்து, வேத வார்த்தைகள் நம்முடைய இருதயத்தையும், மனதையும் வழி நடத்தும்படி அவரிடம் நம்மைக் கொடுப்போமாக.

ஒருவருக்காக ஒருவர் உண்டாக்கப்பட்டனர்

“நான் அவரைப் பாதுகாக்கின்றேன், அவர் மகிழ்ச்சியாக இருக்கும் போது நானும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்” என்றாள் ஸ்டெல்லா. “அவள் என்னருகில் இருக்கும் போது நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்” என்றார் பிரதீப். ஸ்டெல்லாவும் பிரதீப்பும் திருமணமாகி 79 ஆண்டுகள் ஆகின்றது. சமீபத்தில் பிரதீப் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டபோது, அவரது நிலை மிகவும் மோசமாக இருந்தது, எனவே, ஸ்டெல்லா அவரை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்தாள். அவருக்கு வயது 101, அவளுக்கு 95. அவள் ஒரு நடைகருவியை பயன்படுத்தி  நடந்தாலும்,  அவருக்குப் பிடித்தமான உணவு தயாரித்தல் போன்ற, தன்னால் இயன்ற உதவியை, தன்னுடைய கணவனுக்குச் செய்து வந்தாள், அதையும் அவளால் தனிமையாகச் செய்யமுடியவில்லை. பேரப்பிள்ளைகளும், அருகில் இருப்போரும் அவளுக்கு உதவி செய்தனர்.

ஸ்டெல்லா, பிரதீப் ஆகியோரின் இணைந்த வாழ்க்கை, ஆதியாகமம் 2 ல் கூறப்பட்டுள்ள “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” (வ.18) என்று தேவன் கூறியதற்கு ஏற்ப அமைந்துள்ளது. ஆதாமுக்கு முன்பாக தேவன் கொண்டு வந்த அவருடைய படைப்புகளில் எந்த உயிரினமும் இந்த வார்த்தைக்கு ஏற்ப அமையவில்லை. ஆனால், அவனுடைய விலா எலும்பிலிருந்து உண்டாக்கப்பட்ட ஏவாளைத் தனக்கு ஏற்ற துணையாகவும் உதவியாளருமாகக் கண்டான் (வ.19-24).

ஆதாமுக்கு ஏற்ற துணையாக ஏவாள் அமைந்தாள், இவர்கள் மூலமாக தேவன் திருமணத்தை ஏற்படுத்தினார். இது, ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதற்காக மட்டுமல்ல, ஒரு குடும்பத்தை தொடங்கவும், அவருடைய படைப்புகளைப் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டது. இதில், மற்ற மக்களும் அடங்குவர் (1:28). அந்த முதல் குடும்பத்திலிருந்து சமுதாயம் உருவானது, திருமணம் ஆனவர்கள், தனியாக இருப்பவர், வயதானவர், இளைஞர் யாருமே தனியாக இல்லை. நாம் அனைவரும் ஒரு சமுதாயத்தினர், “ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமக்கத்தக்க” வாய்ப்பை தேவன் நமக்குத் தந்துள்ளார் (கலா. 6:2).

நினைவு கூர்ந்து

ஒரு நினைவு நாள் அன்று, இராணுவத்தில் பணிபுரிந்த அநேகரை நினைவுகூர்       ந்தேன், அதில் என்னுடைய தந்தையும் மாமாவும் அடங்குவர். இவர்கள் இரண்டாம் உலகப் போரின் போது, இராணுவத்தில் சேவை புரிந்தார்கள். இவர்கள் வீட்டிற்குத் திரும்பியவர்கள். ஆனால் இந்த யுத்தத்தில், தங்களின் தேசத்திற்காக, ஆயிரக் கணக்கானோர் தங்கள் அன்பிற்குரியவர்களைப் பரிதாபமாக இழந்தனர். என்னுடைய தந்தையும், அந்த நாட்களில் இருந்த அநேக இராணுவ வீரர்களும், தாங்கள் நேசிப்பவர்களைப் பாதுகாக்கவும், தாங்கள் சரியென நினைக்கும் காரியத்தில் உறுதியாக நிற்பதற்காகவும் தங்கள் உயிரையும் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

தங்களின் நாட்டைப் பாதுகாப்பதற்காக யாரேனும் மரித்தால், அவருடைய தியாகத்தைக் கனப்படுத்துபடி, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை” (யோவான்15:13) என்ற வாசகம், அவருடைய அடக்க ஆராதனையின் போது வாசிக்கப் படும். ஆனால் இந்த வாசகத்தின் பின்னணி என்ன?

இயேசு மரிப்பதற்கு முன்பாக, கடைசி இராப் போஜனத்தின் போது, தன்னுடைய சீஷர்களிடம் இந்த வார்த்தைகளைக் கூறினார். இவர்கள் ஒரு சிறிய கூட்டமான சீஷர்கள், அதிலும் யூதாஸ், நம்பிக்கை துரோகம் செய்யும் படி, அவ்விடத்தை விட்டு வெளியேறிவிட்டான் (13:18-30). எல்லாவற்றையும் தேவன் அறிவார், ஆயினும், தன் நண்பர்களுக்காகவும், துரோகிகளுக்காகவும் கிறிஸ்து தன்னுடைய ஜீவனை தியாகம் பண்ணும்படி தெரிந்து கொண்டார்.

இன்னும் அவருக்கு எதிரிகளாக இருக்கின்றவர்களும் (ரோமர் 5:10), ஒரு நாள் அவர் பேரில் விசுவாசம் வைப்பார்கள், என்பதால் அவர்களுக்காகவும் மனப்பூர்வமாக தன் ஜீவனைக் கொடுக்க ஆயத்தமாக இருந்தார். அதற்குப் பதிலாக, அவர் எல்லாரையும் நேசித்தது போல “ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள்” என்று அவர் தன் சீஷர்களிடம் (அப்பொழுதும், இப்பொழுதும்) கேட்கின்றார் (யோவா.15:12). அவருடைய மிகப் பெரிய அன்பு, நம்மையும் நம்முடைய நண்பர்களையும், எதிரிகளையும், தியாகத்தோடு அன்பு கூர கட்டாயப் படுத்துகின்றது.

உபத்திரவத்தில் பெலன்

1948 ஆம் ஆண்டு, ரஷ்யாவிலுள்ள ஓர் இரகசிய ஆலயத்தின் போதகராக இருந்த, பல்கேரியா நாட்டைச் சேர்ந்த கார்லன் பாப்பவ் என்பவரை “விசாரணைக்காக,” அவருடைய வீட்டிலிருந்து அழைத்துச் சென்றனர். இரண்டு வாரங்கள் கழித்து, அவர் ஒரு நாள் முழுவதும் விசாரணை செய்யப் பட்டார், பத்து நாட்கள் அவருக்கு எந்த உணவும் வழங்கப் படவில்லை. ஒவ்வொரு முறையும், தான் ஒரு ஒற்றன் அல்ல என்பதையே தெரிவித்த போது அவரை அதிகமாக அடித்தனர், பாப்பவ் இந்த கடினமான நடத்துதலை தாங்கிக் கொண்டதோடு, தன்னோடுள்ள மற்ற கைதிகளையும் இயேசுவுக்குள் நடத்தினார். கடைசியாக பதினோரு ஆண்டுகள் கழித்து, அவர் விடுதலை பெற்றார். அவர் தொடர்ந்து தன்னுடைய விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அந்த நாட்டை விட்டு வெளியேறி, தன்னுடைய குடும்பத்தோடு சேர்ந்தார். அவர் தொடர்ந்து போதனை செய்வதிலும், அடைபட்ட நாடுகளுக்கு வேதாகமத்தைக் கொடுப்பதற்காக பணம் திரட்டுவதிலும் தன் நாட்களைச் செலவிட்டு வருகின்றார்.

கடந்த காலங்களில் கொலைசெய்யப்பட்ட அநேக இயேசுவின் விசுவாசிகளைப் போன்று, பாப்பவும் அவருடைய விசுவாசத்தின் நிமித்தம் உபத்திரவப்பட்டார். சிறையிலிரு ந்து விடுவிக்கப்பட்ட அவர் தன்னுடைய தேசத்திற்கு அனுப்பபட்டார், ஒரு மாதம் கழித்து அவர் மரித்துப் போனார். கிறிஸ்து பாடு பட்டு, மரணம் அடைந்த பின், அதனைத் தொடர்ந்து, அவரைப் பின்பற்றிய அநேகர் கொலைசெய்யப் பட்டனர். இவை நடைபெறுவதற்கு, அநேக நாட்களுக்கு முன்பே, “நீதியின் நிமித்தம் துன்பப் படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது” (மத்.5:10) என்று இயேசு கூறினார். இன்னும், “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்” (வ.11) என்றும் கூறினார்.

“பாக்கியவான்கள்” என்பதன் மூலம் இயேசு கருதியதென்ன? அவரோடு நாம் கொண்டுள்ள உறவின் முழுமையையும், மகிழ்ச்சியையும், ஆறுதலையும் குறிப்பிடுகின்றார் (வ.4, 8-10). துயரத்தின் மத்தியிலும் தேவனுடைய பிரசன்னம் அவரோடிருந்து அவரை பெலப் படுத்தியதால், பாப்பவ் உறுதியாயிருக்க முடிந்தது. நாம் எத்தகைய சூழலில் இருந்தாலும், நாம் தேவனோடு நடக்கும் போது அவருடைய சமாதானத்தை அநுபவிக்க முடியும். அவர் நம்மோடிருக்கின்றார்.

மீண்டும் இணைதல்

இராணுவத்திலிருக்கும் தன்னுடைய தந்தையிடமிருந்து வ ந்த பெட்டியை, ஆர்வத்தோடு திறந்தான் அந்தச் சிறுவன். அவனுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு, அவனுடைய தந்தையால் வரமுடியாது என்பது அவனுக்குத் தெரியும். அந்தப் பெட்டிக்குள்ளே மற்றொரு பெட்டி, அதற்குள்ளே மற்றொரு பெட்டி இரு ந்தது. அதனுள்ளே ஒரு காகிதத்தில், “ஆச்சரியம்” என்றிருந்தது. குழப்பமடைந்தவனாய் அச்சிறுவன் மேலே நோக்கிப் பார்த்தான், அவனுடைய தந்தை உள்ளே நுழைகின்றார். ஆனந்தக் கண்ணீரோடு, தந்தையின் கரங்களில் பாய்ந்தான், ஆச்சரியத்தில், “அப்பா, நான் உங்களை நினைத்தேன், நான் உங்களை நேசிக்கிறேன்!” என்றான்.

அந்தக் கண்ணீரோடு கூடிய மகிழ்ச்சி நிறைந்த சந்திப்பு, வெளிப்படுத்தல் 21ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளபடி, அவருடைய பிள்ளைகள் தேவனை முகமுகமாய், புதிய வானம், புதிய பூமியில் சந்திக்கின்ற அந்த மகிமை பொருந்திய கணத்தை எனக்கு நினைவு படுத்தியது. “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்”, இனிமேல் துக்கமுமில்லை, வேதனையுமில்லை, ஏனெனில் நம்முடைய பரலோகத் தந்தை எப்பொழுதும் நம்மோடு இருப்பார். வெளிப்படுத்தல் 21ல் குறிப்பிட்டுள்ள ஒரு பெருஞ்சத்தம் தெரிவித்ததைப் போன்று, “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்” (வச. 3-4).

இயேசுவைப் பின்பற்றுபவர்கள், தேவனுடைய மென்மையான அன்பையும், அவர் தரும் மகிழ்ச்சியையும் அநுபவித்துக் கொண்டிருக்கின்றனர். 1 பேதுரு 1:8 கூறுவது போல் “அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூருங்கள்”. நம்மை நேசித்து, நம்மை வரவேற்கும்படி, ஏக்கத்தோடு தன்னுடைய கரங்களை விரித்தவராய் காத்திருக்கும் நம் தேவனை நாம் முகமுகமாய் சந்திக்கும் போது, நம் உள்ளத்தில் பொங்கி வழியும் அந்த வியத்தகு மகிழ்ச்சியை உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா!

அனைவருக்கும் தேவையானது இரக்கம்

இயேசு கிறிஸ்துவின் புதிய விசுவாசியான ஜீவன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, வெளியே வந்து, ஒரு பெரிய எண்ணெய் தொழிற்சாலையில், வேலைக்குச் சேர்ந்தார். அந்த தொழிற்சாலையின் விற்பனையாளரான அவர், அநேக நாட்கள் பிரயாணம் செய்தார், அவருடைய பிரயாணங்களின் போது, அநேகருடைய கதைகளைக் கேட்க முடிந்தது, அவற்றில் பெரும்பாலானவை, உள்ளத்தை உடையச் செய்வதாக இருந்தது. அவருடைய வாடிக்கையாளர்களுக்குத் தேவை, எண்ணெய் அல்ல, இரக்கம் என்பதைத் தெரிந்து கொண்டார். அவர்கள் தேவனை அறிய வேண்டும். இந்த அநுபவம் ஜீவனை ஒரு வேதாகம கல்லூரிக்குச் சென்று, தேவனுடைய இருதயத்தைப் பற்றி கற்றுக்கொள்ளச் செய்தது. பின்னர், அவர் ஒரு போதகரானார்.

இயேசு கிறிஸ்து காட்டிய இரக்கத்தை ஜீவனும் காட்டினார். மத்தேயு 9:27-33 ல் கிறிஸ்து காட்டிய இரக்கத்தை, இரண்டு குருடர்களை அற்புதமாக சுகப்படுத்தியதிலும், பிசாசு பிடித்த மனிதனைக் குணப்படுத்தியதிலும் காண்கின்றோம். அவருடைய ஆரம்ப கால ஊழியத்தில், அவர் சகல பட்டணங்கள், மற்றும் கிராமங்களுக்கு சென்று, சுவிசேஷத்தை பிரசங்கித்ததோடு, சகல வியாதிகளையும் குணப்படுத்தினார் (வ.35). ஏன்? “அவர் திரளான ஜனங்களைக் கண்ட பொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்து  போனவர்களும்,சிதறப்பட்டவர்களுமாய் இரு ந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகினார்” (வ.36)

இன்றைய உலகம் பிரச்சனைகளாலும், காயப்படுத்தும் மக்களாலும் நிறைந்து காணப்படுகின்றது. அவர்களுக்கு இரட்சகரின் கனிவான கவனம் தேவை. மேய்ப்பன் தன் ஆடுகளைப் பாதுகாத்து, பராமரித்து, வழிநடத்துவது போல, இயேசுவும் அவரிடம் வரும் யாவரிடமும் இரக்கத்தைக் காட்டுகிறார் (11:28). நாம் வாழ்க்கையில் எந்த இடத்தில் இருந்தாலும், எந்த பிரச்சனைகளைச் சந்தித்தாலும் சரி, நாம் அவரிடத்தில் வரும் போது, அவருடைய உள்ளம் நம்மீது கரிசனையினாலும், இரக்கத்தினாலும் பொங்கி வழிகிறது.  அவருடைய அன்பின் இரக்கத்தை, நாம் பெற்றுக் கொண்டிருப்போமாயின், அதனைப் பிறருக்கும் தவறாது கொடுப்போம்.

தண்ணீர் மூலம் நம்பிக்கை

டாம், மாற்கு ஆகிய இருவரும் செய்யும் ஊழியம் வாழ்விற்கு புத்துணர்ச்சியைத் தருவதாகவுள்ளது. அவர்கள் காண்பித்த ஒரு வீடியோ படக்காட்சி, இதைத் தெளிவுப் படுத்துகின்றது. திறந்த வெளியில் அமைக்கப் பட்ட ஒரு தூவாலைக் குழாயில் (shower bath tube) வரும், புத்துணர்ச்சிதரும் நீரில், ஏழ்மையில் வாழும் சில குழந்தைகள் முதல் முறையாகக் குளித்து,  ஆடிப் பாடி, சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். ஹைட்டியிலுள்ள ஆலயங்களின் கிணற்று நீரைச் சுத்திகரிப்பதற்கு, வடிப்பான் அமைப்புகளை ஆண்கள் பொருத்திக் கொண்டிருந்தனர். அசுத்தமான நீரைப் பருகுவதன் மூலம் வரும் வியாதிகளிலிருந்து அம்மக்களைக் காப்பற்றி, அவர்களின் வாழ்நாளை நீடிக்கச் செய்தனர். சுத்தமான நீரை, அவர்களுக்கு கிடைக்கச் செய்வதன் மூலம், அவர்களுக்கு எதிர் காலத்தின் மீது ஒரு நம்பிக்கையை கொடுத்தனர்.

யோவான் 4 ஆம் அதிகாரத்தில், நம் வாழ்விற்கு, தொடர்ந்து புத்துணர்ச்சியைத் தரக்கூடிய “ஜீவத் தண்ணீரைப்” பற்றி குறிப்பிடுகின்றார். களைப்பாகவும், தாகமாகவும்  இருந்த இயேசு, சமாரியா பெண்ணிடம் தண்ணீர் கேட்கின்றார், (வ.4-8). இந்த  வேண்டல்  ஓர்  உரையாடலுக்கு வழி வகுக்கின்றது. அப்பொழுது  இயேசு அவளுக்கு “ஜீவத்தண்ணீரைத்” தருவதாக வாக்களிக்கின்றார் (வச. 9-15). “ நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் “ என்றார் (வச. 14). 

இந்த ஜீவத்தண்ணீரைப் பற்றி யோவான் பின்னால் விளக்குகின்றார். “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து  ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஓடும்”, என்று இயேசு கூறுகின்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப் போகும் ஆவியைக் குறித்து இப்படிச் சொன்னார் என்று யோவான் விளக்குகின்றார் (7:37-39).

பரிசுத்த ஆவியின் மூலம், நாம் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு, தேவனுடைய அளவில்லாத வல்லமையையும், நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்ள முடிகிறது. ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும் ஆவியானவர், ஜீவ தண்ணீராக வாழ்ந்து , நம்மை புதுப்பித்து, புத்துணர்ச்சியைத் தருகிறார்.

உண்மை நண்பர்கள்

நான் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் போது, “சந்தர்ப்பவாத சிநேகிதி” ஒருத்தி இருந்தாள். எங்களுடைய சிறிய ஆலயத்தில், (என்னுடைய வயதில், நாங்கள் இருவர் மட்டுமே இருந்ததால்) நாங்கள் இருவரும் சிநேகிதிகள். பள்ளிக்கூடத்திற்கு வெளியே எப்போதாவது நாங்கள் இருவரும் சேர்ந்து கொள்வோம், ஆனால் பள்ளிக் கூடத்தில், அது வேறு கதை. அவள் எப்போதவது என்னைப் பார்த்தால், அவளுக்கு அருகில் யாருமே இல்லையென்றால், ஒரு ஹலோ சொல்வாள். இதனை உணர்ந்து கொண்ட நான், பள்ளி வளாகத்தினுள் அவளுடைய கண்களில் படுவதேயில்லை. எங்களுடைய நட்பின் எல்லையை நான் அறிவேன்.

நாம் அனைவருமே ஒருபக்க நட்பு அல்லது மேலோட்டமான நட்பின் வேதனையை அநுபவித்திருப்போம். மற்றொரு வகை நட்பு உள்ளது. அந்த நட்பிற்கு வரம்பு கிடையாது. இவ்வகை நட்புடையவர்கள், ஒருமனமுடையவர்களாய், வாழ்க்கைப் பயணத்தை அர்ப்பணத்தோடு பகிர்ந்து கொள்வர்.

தாவீதும், யோனத்தானும் இத்தகைய சிநேகிதர்கள். யோனத்தான் தாவீதோடு ஒரு மனமுடையவனாய், அவனை “தன்னைப் போல சிநேகித்தான்” (1 சாமு. 18:1-3). சவுலின் மரணத்திற்குப் பின், யோனத்தான் அரசாட்சிக்கு வருவதற்கு உரிமையிருந்தும், அரசனாக, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட தாவீதிடம் உண்மையுள்ளவனாயிருந்தான். சவுல், தாவீதைக் கொல்வதற்கு திட்டமிட்டிருந்தை அறிந்த யோனத்தான், தாவீதை இருமுறை காப்பாற்றினான் (19:1-6, 20:1-42).

எத்தனையோ இடர் வந்த போதும், தாவீதும், யோனத்தானும் “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்” என்ற நீதிமொழிகள் 17:17 வார்த்தைக்கேற்ப உண்மையான நண்பர்களாக இருந்தனர். இந்த உண்மையான நட்பு, தேவன் நம் மீது வைத்துள்ள அன்பின் ஆழத்தின் ஒரு பகுதியைக் காட்டுகின்றது (யோவா. 3:16; 15:15). இவர்களின் நட்பின் மூலம், தேவன் நம் மேல் வைத்துள்ள அன்பும் எத்தனை ஆழமானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

திரும்பி ஓடு

அலி ஓர் அழகிய, புத்திசாலியான, திறமைகள் வாய்ந்த வாலிபப் பெண். அன்பான பெற்றோரைக் கொண்டவள். அவளுடைய உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும் அவளுக்குள் ஏதோவொன்று, ஹெராயின் என்ற போதைப் பொருளை எடுத்துக் கொள்ளுமாறு தூண்டிக் கொண்டேயிருந்தது. அவளுக்குள் ஏற்பட்ட மாற்றத்தை அவளுடைய பெற்றோரும் கவனித்தனர். அவளை ஒரு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அந்த போதை வஸ்து அவளுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை, அவள் ஒத்துக் கொண்டாள். அங்கு அவள் சிகிச்சையை முடித்த பின்னர், அவளுடைய சிநேகிதிகளுக்கு போதைப் பொருளைக் குறித்து என்ன செய்தியைக் கொடுக்கப் போகின்றாளெனக் கேட்டபோது, அவள், “உடனே திரும்பி ஓடு, என்பதே” என்றாள். வெறுமனே “இல்லை” எனக் கூறுவது போதாது, திரும்பி ஓடிவிட வேண்டுமென்றாள்.

ஆனால் அலி மீண்டும் தன் பழைய போதைப் பழக்கத்திற்குத் திரும்பினாள். அதிகப் படியான போதைப் பொருட்களை எடுத்ததால், தனது இருபத்திரண்டாம் வயதில் மரித்துப் போனாள். மனமுடைந்த அவளுடைய பெற்றோர், இத்தகைய முடிவுக்குள்ளாக மற்றவர்களும் போய் விடாதபடி முயற்சி எடுத்து, ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு, அங்கு வந்திருந்தவர்களுக்கு அவர்கள் கொடுத்த செய்தி, “அலிக்காக ஓடுங்கள்”, போதை வஸ்துக்கள் போன்ற அபாயங்களிலிருந்து வெகு தூரம் விலகி ஓடுங்கள் என்று தெரிவித்தனர்.

ஆவிக்குரிய மகனாகிய தீமோத்தேயுவிடம் அப்போஸ்தலனாகிய பவுல் தீமையை விட்டு விலகி ஓடும்படி கூறுகின்றார்  (2 தீமோ.த்தேயு 2::22). அப்போஸ்தலனாகிய பேதுருவும் இதனையே, “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்” (1 பேது. 5:8-9) என்று கூறுகின்றார்.

நம்மில் ஒருவருமே சோதனைகளுக்கு விலக்கப் பட்டவர்களல்ல. ஆனால் அதனை மேற் கொள்ளும் சிறந்த வழி – அப்படிப் பட்ட சூழ்நிலைகளைத் தவிர்த்து விடுதலேயாகும். ஒரு வேளை அதனை எப்பொழுதும் தவிர்க்கக் கூடாததாகயிருப்பின் தேவன் மீதுள்ள ஆழ்ந்த நம்பிக்கையோடு வேதத்தில் கூறப் பட்டுள்ளபடி ஜெபத்தின் மூலம் பெலன் பெற்றுக் கொள்வோம். “நாம் விசுவாசத்தில் உறுதியாயிருந்தால், எப்பொழுது திரும்பி அவரிடம் ஓடி வர வேண்டுமெனத் தெரிந்து கொள்வோம்.”