இராணுவத்திலிருக்கும் தன்னுடைய தந்தையிடமிருந்து வ ந்த பெட்டியை, ஆர்வத்தோடு திறந்தான் அந்தச் சிறுவன். அவனுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு, அவனுடைய தந்தையால் வரமுடியாது என்பது அவனுக்குத் தெரியும். அந்தப் பெட்டிக்குள்ளே மற்றொரு பெட்டி, அதற்குள்ளே மற்றொரு பெட்டி இரு ந்தது. அதனுள்ளே ஒரு காகிதத்தில், “ஆச்சரியம்” என்றிருந்தது. குழப்பமடைந்தவனாய் அச்சிறுவன் மேலே நோக்கிப் பார்த்தான், அவனுடைய தந்தை உள்ளே நுழைகின்றார். ஆனந்தக் கண்ணீரோடு, தந்தையின் கரங்களில் பாய்ந்தான், ஆச்சரியத்தில், “அப்பா, நான் உங்களை நினைத்தேன், நான் உங்களை நேசிக்கிறேன்!” என்றான்.

அந்தக் கண்ணீரோடு கூடிய மகிழ்ச்சி நிறைந்த சந்திப்பு, வெளிப்படுத்தல் 21ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளபடி, அவருடைய பிள்ளைகள் தேவனை முகமுகமாய், புதிய வானம், புதிய பூமியில் சந்திக்கின்ற அந்த மகிமை பொருந்திய கணத்தை எனக்கு நினைவு படுத்தியது. “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்”, இனிமேல் துக்கமுமில்லை, வேதனையுமில்லை, ஏனெனில் நம்முடைய பரலோகத் தந்தை எப்பொழுதும் நம்மோடு இருப்பார். வெளிப்படுத்தல் 21ல் குறிப்பிட்டுள்ள ஒரு பெருஞ்சத்தம் தெரிவித்ததைப் போன்று, “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்” (வச. 3-4).

இயேசுவைப் பின்பற்றுபவர்கள், தேவனுடைய மென்மையான அன்பையும், அவர் தரும் மகிழ்ச்சியையும் அநுபவித்துக் கொண்டிருக்கின்றனர். 1 பேதுரு 1:8 கூறுவது போல் “அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூருங்கள்”. நம்மை நேசித்து, நம்மை வரவேற்கும்படி, ஏக்கத்தோடு தன்னுடைய கரங்களை விரித்தவராய் காத்திருக்கும் நம் தேவனை நாம் முகமுகமாய் சந்திக்கும் போது, நம் உள்ளத்தில் பொங்கி வழியும் அந்த வியத்தகு மகிழ்ச்சியை உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா!