சமீப காலத்தில் ஒரு புகைப்படக்காரர், இருதயத்தை பிழியச்செய்யும் ஒரு படத்தை எடுத்தார், அந்தப் படத்தில் ஒரு விவசாயி, மனமுடைந்தவராய் தன்னுடைய வறண்டு, வெடித்துக் காணப்படும் வயலில் தனிமையில் உட்கார்ந்திருக்கின்றார். இந்தப் புகைப் படம், அநேகப் பத்திரிகைகளின் முகப்புப் படமாக வெளி வந்தது. வறட்சியினால், பயிர்கள் காய்ந்து போன நிலையில், விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் அவல நிலையைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ளும்படி இப்படம் வெளியிடப்பட்டது.

விரக்தியின் மற்றொரு காட்சியை, புலம்பலின் புத்தகம் நமக்குக் காட்டுகின்றது. எருசலேம் நகரம் அழிக்கப்பட்ட போது, யூதாவின் நிலையை நமக்குக் காட்டுகின்றது. நேபுகாத்நேச்சாரின் படைகள் இந்தப் பட்டணத்தை அழிப்பதற்கு முன்பு, முற்றிக்கை போட்டிருந்ததால், மக்கள் பட்டினியால் அவதியுற்றனர் (2 இரா. 24:10-11). பல ஆண்டுகளாக இந்த மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்ததே இந்த உபத்திரவத்திற்கெல்லாம் காரணம். புலம்பல் புத்தகத்தை எழுதியவர், தன்னுடைய ஜனங்களுக்காக தேவனை நோக்கிக் கதறுகின்றார் (புல. 2:11-12).

சங்கீதம் 107ஐ எழுதியவரும் இஸ்ரவேலரின் சரித்திரத்தில் வந்த ஒரு நம்பிக்கையற்ற நேரத்தைப் பற்றி குறிப்பிடுகின்றார் (இஸ்ரவேலர் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த போது, (வச. 4-5), கடினமான வேளைகளில் ஏறெடுக்கப்படும் ஒரு செயலுக்கு நேராக அவர்களின் கவனம் திருப்பப் படுகின்றது. அவர்கள் “தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்” (வச. 6), என்ன ஆச்சரியமான பதில், தேவன் “அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்”.

நம்பிக்கையிழந்த நிலையா? அமைதியாக இராதே. தேவனை நோக்கிக் கதறு, தேவன் கேட்கின்றார், உனக்கு நம்பிக்கையைத் தரும்படி அவர் காத்திருக்கின்றார். அவர் நம்முடைய கடின சூழலை விட்டு நம்மை ஒவ்வொரு முறையும் விடுவியாமல் போனாலும், அவருடைய பிரசன்னம் எப்பொழுதும் நம்மோடிருக்கும்.