தெற்கு லண்டனின் கூட்டநெரிசலான பகுதியில் பிறந்து வளர்ந்த கிளாட், தன்னுடைய 15ஆம் வயதில் மரிஜூவானா என்னும் போதைப்பொருளையும், 25ஆம் வயதில் ஹெராயீனையும் விற்கும் அளவிற்கு வாழ்ந்தான். அவனுடைய அந்த தொழிலுக்கு ஆதரவாக, இளைஞர்களுக்கு ஆலோசனை கூறும் நபராய் சமுதாயத்திற்கு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டான். அவனுடைய மேலாளர் மூலமாய் சுவிசேஷத்தைக் கேள்விப்பட்டான். இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான். கிறிஸ்தவ விசுவாசத்தைப் போதிக்கும் வேதபாட வகுப்பைப் படித்து, கிறிஸ்து தன்னுடைய வாழ்க்கையில் வருவதைக் குறித்துப் பயந்தான். அவன் சொல்லும்போது, “அவருடைய மகிமையான பிரசன்னத்தை உணர்ந்தேன். மக்கள் என் வாழ்க்கையில் மாற்றத்தைக் கண்டனர். இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான போதைப் பொருள் தொழிலாளி நான்தான்” என்று கூறினான்.
இயேசு அத்துடன் நிறுத்தவில்லை. கிளாட், கொக்கென் என்னும் போதைப் பொருள்கள் நிரம்பிய பையை நிறுத்துப்பார்க்கும்போது, இது முட்டாள்தனம் என்பதையும் தான் மக்களுக்கு விஷத்தைக் கொடுப்பதாகவும் உணர்ந்தான். போதைப் பொருட்கள் விற்பதை நிறுத்திக் கொண்டு, வேறு வேலை தேடிப் பிழைத்துக்கொள்ளத் தீர்மானித்தான். பரிசுத்த ஆவியானவரின் துணையோடு அவனுடைய மொபைல் போனை அணைத்துவிட்டான். திரும்பவும் அந்த தொழிலுக்குப் போகவில்லை.
இந்த வகையான மாற்றத்தையே எபேசு சபைக்கு பவுல் நிருபம் எழுதும்போது குறிப்பிடுகிறார். “மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு…மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” (எபேசியர் 4:22-24) என்று ஆலோசனை கூறுகிறார். இதற்கு பவுல் பயன்படுத்தும் வினைச்சொல்லானது, நாம் புதிய சாயலை அன்றாடம் தரித்துக்கொள்ளவேண்டும் என்பதைக் குறிக்கிறது.
கிளாடுடைய வாழக்கையில் பரிசுத்த ஆவியானவர் செய்ததுபோல, நம்முடைய புதிய சாயலைத் தரித்து கிறிஸ்துவைப் போல் மாறுவதற்கு அவர் விரும்புகிறார்.