Archives: டிசம்பர் 2021

தேவனுடைய வலதுகரம்

நான் எனது முதிர்ந்த நாய் வில்சனை புல்வெளியில் நடக்க அழைத்துச்சென்றேன். அந்த வேளையில் என்னுடைய கோச் எனப்பட்ட என்னுடைய சிறிய நாயைப் பிடித்திருந்த கயிற்றை ஒருநிமிடம் தவறவிட்டேன். கீழே குனிந்து அதை எடுக்க முயற்சித்த இடைவெளியில், கோச் ஒரு முயலைப் பார்த்துவிட்டது. அதை விரட்டிக்கொண்ட வெறித்தனமாய் ஓட முயற்சித்தவேளையில், அதின் கயிறு என் மோதிரவிரலில் சிக்கி காயம் ஏற்படுத்தியது. நான் அந்த புல்தரையில் விழுந்து வலியில் கத்தினேன். 

முதலுதவியை பெற்று திரும்பும்போது, என் விரலில் அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்று தெரியவந்தது. நான் தேவனிடத்தில் மன்றாடினேன். நான் ஒரு எழுத்தாளன், எப்படி டைப் செய்வது? என்னுடைய அன்றாட பணிகளை எப்படி செய்வது? தேவன் அன்றைய வேத தியானத்தில் என்னோடு பேசினார். “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்” (ஏசாயா 41:13). தேவனுடைய உறவில் இருந்த யூதேயாவிலுள்ள தேவ ஜனத்திற்கே ஏசாயா இதை எழுதுகிறார் என்று அதன் பின்னணியத்தைக் கண்டுபிடித்தேன். தன்னுடைய வலது கரத்தை உருவகப்படுத்தி, அவர்களுக்கு தன்னுடைய பிரசன்னத்தையும், பெலத்தையும், உதவியையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 10). வேதாகமமெங்கிலும் தேவனுடைய வலதுகரமானது, தேவ ஜனத்திற்கு அவர் கொடுக்கும் வெற்றியை உருவகப்படுத்தவே பயன்படுத்தப்பட்டுள்ளது (சங்கீதம் 17:7; 98:1). 

என் விரல் குணமாகும்வரையிலும், என் கம்யூட்டரில் நான் பேசுவதை அதுவே டைப் செய்யும் யுக்தியை பயன்படுத்தியும், என் வீட்டு அலுவல்களை என்னுடைய இடது கையின் துணைகொண்டும் செய்துகொண்டேன். தேவனுடைய நீதியின் வலதுகரத்திலிருந்து நம்முடைய உடைந்த வலக்கரம் வரையிலும் அனைத்திலும் தேவன் நம்மோடிருந்து நமக்கு உதவிசெய்வேன் என்று வாக்களித்துள்ளார். 

காலத்திற்கேற்ற தீர்வு

சைமனுக்கும் ஜெஃப்ரிக்குமான பகை ஆண்டுகளாய் நீடித்தது. அந்த உறவை சரிசெய்ய சைமன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தடைசெய்யப்பட்டது. ஜெஃப்ரியின் தாயாரின் மரணத்தைக் கேள்விப்பட்ட சைமன், கென்யாவிலுள்ள மேல் நாட்டிற்கு பயணம்செய்து அந்த மரண ஊர்வலத்தில் பங்கெடுத்தான். அதற்கு பின்பு அவர்கள் இருவருக்கும் இடையில் நேரிட்டதைக் குறித்து சைமன்,  “அந்த மரண ஊர்வலத்திற்கு பின்பு அனைத்து சூழ்நிலையும் எப்படி தலைகீழாய் மாறும் என்பதை நான் சற்றும் ஊகிக்கவில்லை. நாங்கள் இருவரும் மனம் திறந்து பேசினோம். நாங்கள் கட்டிப்பிடித்து, அந்த தருணத்தை அனுபவித்து, ஒன்றாய் ஜெபித்து, மீண்டும் சந்திக்கவும் திட்டமிட்டோம்” என்று கூறினான். சைமனும் ஜெஃப்ரியும் ஏற்கனவே ஒன்று சேர்ந்திருந்தனர் என்றால், பல மனவேதனைகளை அவர்கள் தவிர்த்திருக்கக்கூடும். 

மத்தேயு 5:21-26ல் தீர்வுகாணப்படாத பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இயேசு உதவிசெய்கிறார். கோபம் பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிவுறுத்துகிறார் (வச. 22). மேலும் உறவுரீதியாய் சரிசெய்யப்படாத பிரச்சனைகளை தேவனை ஆராதிப்பதற்கு முன்பு சரிசெய்யப்படவேண்டும் (வச. 23-24). ‘நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து” என்னும் இயேசுவின் ஞானமான போதனை, எவ்வளவு சீக்கிரத்தில் நாம் ஒப்புரவாகிறோமோ அது நமக்கும் மற்றுவர்களுக்கும் நல்லது என்பதை வலியுறுத்துகிறது. 

உறவுகள் சவாலானது; அது நம் குடும்பத்திலோ, அலுவலகத்திலோ, கல்விக்கூடங்களிலோ, அல்லது சகவிசுவாசிகளிடத்திலோ, நம்முடைய கிரியையை எதிர்பார்க்க வைக்கிறது. ஆனால் நம்முடைய சமாதானக் காரணரை (ஏசாயா 9:6) பிரதிபலிக்கிறவர்களாய் நம்முடைய இருதயத்தையும் கரங்களையும் அகல விரித்து, தீர்வுகாணமுடியாத பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண பிரயாசப்படுவோம்.    

கிறிஸ்மஸ் குழந்தை

ஒரு உயிரணுவிலிருந்து உயிர் தோன்றுவதுபோல, ஒரு விதையிலிருந்த கேதுருக்களை ஓங்கி வளரச்செய்யும் ஒருவர், கருவிலிருந்துகொண்டே நட்சத்திரங்களை தனக்கு அடிபணியச்செய்த ஒருவர், வானத்தை ஒளிக்கற்றைகளால் நிரப்பிய ஒருவரை சற்று கற்பனை செய்துபாருங்கள். தேவனாயிருந்த இயேசு தன்னை வெறுமையாக்குகிறார் (பிலிப்பியர் 2:6-7). என்னே ஆச்சரியமான சிந்தனை!

மேய்ப்பர்கள் மற்றும் தேவதூதர்கள் முன்னிலையில், வானத்து நட்சத்திரங்கள் ஒளிர, சுற்றியிருந்த விலங்கினங்கள் முதல் தாலாட்டைப் பாட, ஒரு விவசாய கிராமத்தில் இயேசுவின் பிறப்பை கற்பனை செய்யுங்கள். அவர் தேவ கிருபையிலும் மனிதர் தயவிலும் விருந்தியடைந்ததையும், கல்விமான்களின் கடினமான கேள்விகளுக்கு பதிலளித்ததையும், யோர்தான் நதியில் தன்னுடைய பிதாவின் ஒப்புதலைப் பெற்றதையும், பசியோடும் ஜெபத்தோடும் வனாந்திரத்திலே சோதிக்கப்பட்டதையும் பாருங்கள்.  

அதன் பின்பு அவருடைய உலகத்தை மறுரூபமாக்கும் ஊழியத்தையும், வியாதியஸ்தர்களை குணமாக்கியதையும், குஷ்டரோகிகளை தொட்டதையும், அசுத்தமானவர்களை மன்னித்ததையும் பாருங்கள். அவர் தோட்டத்தில் வியாகுலப்பட்டதையும், அவருடைய உற்ற நண்பர்கள் ஓடிவிட அவர் கைதுசெய்யப்பட்டதையும் பாருங்கள். அவர் துப்பப்பட்டு. இரண்டு மரக்கட்டைகளின் நடுவில் ஆணியடிக்கப்பட்டு.  உலகத்தின் பாவத்தை தன் தோள்களில் சுமந்தவராய்  தொங்கவிடப்பட்டவரை பாருங்கள். கல் நகர, வெறுமையான கல்லறையின் அந்த சத்தத்தை. கவனியுங்கள்,  ஏனென்றால், அவர் உயிரோடிக்கிறார்!

அவர் உன்னதங்களில் உயர்த்தப்பட்டதைப் பாருங்கள் (வச. 9). வானத்தையும் பூமியையும் அவருடைய நாமம் நிரப்பியதைப் பாருங்கள் (வச. 10-11). 

அண்டசராசரங்களில் நட்சத்திரங்களை உருவாக்கி, அவற்றை சிறு புள்ளியாய் காணச்செய்தவர் அவரே. அதுவே நம் கிறிஸ்மஸ் குழந்தை. 

சமாதானக் காரணர்

ஜானின் சளி இறுமல், நிமோனியா காய்ச்சலாக மாறியது. அதினால் அவர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்ட அந்த மருத்துவமனையின் ஒருசில தளங்களுக்கு மேலே அவருடைய தாயார் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். தன் தாயின் உடல்நிலையையும் தன்னுடைய உடல் நிலையையும் குறித்து அவர் அதிக கவலைப்பட்டார். ஒரு கிறிஸ்மல் இரவின்போது, “ஓ புனித இரவே” என்று வானொலியில் ஒலித்த அந்த பாடலைக் கேட்ட ஜான், தேவனுடைய சமாதானத்தினால் ஆட்கொள்ளப்பட்டார். இரட்சகரின் பிறப்பைக் குறித்த அந்த பாடலின் வரிகளை அவர் கேட்டார்: “சோர்வுற்ற ஆத்துமாவுக்கு ஒரு நம்பிக்கையாய் அங்ஙனம் ஒரு புதிய மகிமையான காலை உதயமாகிறது.” அதைக் கேட்ட தருணத்தில், அவரைக் குறித்தும் அவருடைய தாயாரைக் குறித்தும் இருந்த கவலை மறைந்தது. 

ஏசாயா தீர்க்கதரிசனத்தின் படி, நமக்கு கொடுக்கப்பட்ட அன்பான இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவே சமாதான காரணர் (ஏசாயா 9:6). “மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல்” (மத்தேயு 4:15; ஏசாயா 9:2) வெளிச்சமாகவும் இரட்சிப்பாகவும் உதிக்க, இந்த உலகத்தில் குழந்தையாய் பிறந்த இயேசுவில் இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறியது. அவரால் நேசிக்கப்படுகிறவர்கள் கடினமான வாழ்க்கைப் பாதையில் பயணித்தாலும், அவர் அவர்களை சேர்த்துக்கொண்டு சமாதானத்தை அருளுகிறார். 

ஜான்; அந்த மருத்துவமனையில் இயேசுகிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து சிந்தித்து, அவை அனைத்தையும் மேற்கொள்ளும் சமாதானத்தைப் பெற்றுக்கொண்டார் (பிலிப்பியர் 4:7). கிறிஸ்மஸ் நாட்களில் தன் குடும்பத்தை விட்டு தள்ளியிருந்த அவருடைய விசுவாசத்தையும் நன்றியுணர்வையும் அந்த அனுபவம் அவருக்கு உறுதிப்படுத்தியது. தேவனுடைய பரிசான சமாதானத்தையும் நம்பிக்கையையும் நாமும் பெற்றுக்கொள்வோமாக.