Archives: செப்டம்பர் 2021

நன்றாக ஓய்வெடுங்கள்

கடிகாரம் அதிகாலை 1.55 மணிக்கு ஒலித்தது. பின்னிரவு உரையாடலின் சுமையினால் எனக்குத் தூக்கம் வரவில்லை. சிக்கலாயிருந்த என்னுடைய படுக்கை விரிப்பை பிரித்துக்கொண்டு அமைதியாக படுத்துக்கொண்டேன். தூங்குவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கூகிளில் தேடினேன். ஆனால் மாறாக சிறுதூக்கம் தூங்காதீர்கள், காப்பி குடிக்க வேண்டாம், பகல் வேளைகளில் நாள் தாமதமாக வேலை செய்ய வேண்டாம் என்று என்ன செய்யக் கூடாது என்பதையே பார்த்தேன். இன்னும் வாசிக்கும்போது, என்னுடைய டேப்லட் கணிணியில் படிக்க தாமதமாக திரை நேரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்ற ஆலோசனை சொல்லப்பட்டிருந்தது. அச்சச்சோ! உரை அனுப்புவது ஒரு நல்ல யோசனையாக இருக்கவில்லை. நன்றாக ஓய்வெடுக்க வேண்டுமானால், செய்யக்கூடாதவைகளின் பட்டியல்களே இருக்கின்றன. 

பழைய ஏற்பாட்டில், ஓய்வைத் தழுவிக்கொள்ள, ஓய்வுநாளில் என்னென்ன செய்யக்கூடாது என்ற கட்டளைகளை தேவன் கொடுத்திருந்தார். ஆனால் இயேசு ஒரு புதிய வழியைக் காண்பித்தார். விதிமுறைகளை வலியுறுத்துவதற்கு பதிலாக, சீஷர்களை உறவுக்குள்ளாக அழைத்தார். “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” மத்தேயு 11:28. இதற்கு முந்தைய வசனத்தில், நமக்கு அவர் வெளிப்படுத்தின, தேவனோடு, அவர் வைத்திருந்த உறவை சுட்டிக்காட்டினார். பிதாவிடமிருந்து இயேசு அனுபவித்த உதவிகளை நம்மாலும் அனுபவிக்க முடியும்.

நம்முடைய தூக்கத்துக்கு இடையூறு உண்டாக்கும் சில பொழுதுபோக்குகளை நாம் தவிர்ப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்போது, கிறிஸ்துவுக்குள் ஓய்வெடுப்பது கட்டளையை விட அதிகமாக உறவோடு தொடர்புடையது. நான் வாசிப்பதை நிறுத்திவிட்டு என்னுடைய கனத்த இருதயத்தை, இயேசுவின் அழைப்பிதழான “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே…” என்ற தலையணையின் மேல் வைத்துவிட்டேன்.

நாம் உணருகிறோம் என்று தேவன் அறிவார்

சிம்ரா, தன்னுடைய மகன் அடிமைத்தனத்தோடு போராடுவதைக் கண்டு மிகவும் துக்கமடைந்தாள். “நான் மோசமாக உணர்கிறேன், நான் ஜெபிக்கும்போது என் அழுகையை நிறுத்த முடியாததால் எனக்கு விசுவாசம் இல்லையென்று தேவன் நினைக்கிறாரா?” “தேவன் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், உண்மையான உணர்ச்சிகளை தேவன் கையாளமுடியும் என்று எனக்குத் தெரியும். நாம் நினைக்கிறது அவருக்குத் தெரியாது என்பது போல அல்ல” என்று நான் கூறினேன். நான் சிம்ராவுடன் சேர்ந்து அவளுடைய மகனின் விடுதலைக்காக கண்ணீரோடு மன்றாடி ஜெபித்தோம்.

தங்கள் போராட்டங்களில் தேவனோடு மல்லுகட்டும் அநேகருடைய எடுத்துக்காட்டுகள் வேதத்தில் உள்ளது. தேவனுடைய நிலையான மற்றும் வல்லமையான பிரசன்னத்தின் சமாதானத்துக்காக தன்னுடைய ஆழ்ந்த ஏக்கத்தை சங்கீதம் 42ஐ எழுதியவர் வெளிப்படுத்துகிறார். அவர் சகித்துக்கொண்ட துயரத்தினால் ஏற்பட்ட கண்ணீரையும் மனச்சோர்வையும் ஒப்புக்கொள்ளுகிறார். தேவனுடைய உண்மைத் தன்மையை நினைக்கும்போது அவர் உள்ளத்தில் இருக்கும் குழப்பம், நம்பிக்கையின் துதியாக வெளியே ஊற்றப்படுகிறது. தன்னுடைய “ஆத்துமாவை” உற்சாகப்படுத்த சங்கீதக்காரன் “தேவனை நோக்கி காத்திரு. என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்” (வச. 11) என்று எழுதுகிறார். தேவனைப் பற்றி அவர் அறிந்துக்கொண்டது உண்மைக்கும், மறுக்கமுடியாத அவருடைய உணர்ச்சிகளின் யதார்தத்திற்கும் இடையில் முன்னும் பின்னுமாக இழுக்கப்படுகிறார். 

தேவன் நம்மை அவருடைய சாயலாகவும், உணர்ச்சிகளுடனும் வடிவமைத்திருக்கிறார். மற்றவர்களுக்காக நாம் சிந்தும் கண்ணீர் - நமக்கு விசுவாமில்லாததால் அல்ல; மாறாக, ஆழ்ந்த அன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. நமக்கு உணர்ச்சிகள் இருக்கிறது என்று தேவன் அறிந்திருப்பதால், நாம் மூல காயங்களுடனும், பழைய தழும்புகளுடனும் அவரை அணுகலாம். ஓவ்வொரு ஜெபமும், அமைதியானதாக இருந்தாலும், கண்ணீருடனாயிருந்தாலும், நம்பிக்கையோடு கூச்சலிட்டாலும், அவர் நம்மைக் கேட்டு, விசாரிக்கிறவர் என்ற வாக்குத்தத்தத்தை, நம்பிக்கையோடு வெளிப்படுத்துகிறது. 

எதுவாக இருந்தாலும்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையில், என் குடும்பத்தினர் பார்க்கும் தேசியச் செய்தியில், ஒரு புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய முன்னிலைப்படுத்தி ஒளிபரப்பு நிறைவு செய்யப்படுகிறது. “புனித வெள்ளி” அன்று,கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு, முற்றிலும் குணமடைந்த பிறகு, தன்னுடைய பிளாஸ்மாவை தன்னைப்போல இந்த நோய்க் கிருமிக்கு எதிராக போராடுபவர்களுக்கு தானம் கொடுக்க முடிவெடுத்த ஒரு நிருபரை மையமாகக் கொண்டு, நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. ஆனால், எதிர்பொருள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று நடுவர் குழு இன்னும் தீர்மானிக்கவில்லை. பலர் உதவியற்றவர்களாக உணர்ந்தபோது, பிளாஸ்மாவை (ஊசி வழியாக) தானம் செய்வதில் இருந்த உபாதைகளை அறிந்தபோதும், அவள் அதை “சாத்தியமான ஊதியத்தை செலுத்த ஒரு சிறிய விலை” என்று உணர்ந்தாள். 

அந்த வெள்ளிக்கிழமை ஒளிபரப்பிற்குப் பிறகு, நானும் என் குடும்பத்தினரும் ஊக்குவிக்கப்பட்டதாக உணர்ந்தோம் - சொல்லப்போனால் நம்பிக்கையினால் நிறைந்திருந்தோம். பிலிப்பியர் 4:8ல் பவுல் குறிப்பிட்டிருக்கிற “எவைகளோ” வின் வல்லமை இது தான். “உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ”, (வச. 8). பவுலின் மனதில் பிளாஸ்மா தானத்தைப் பற்றி எண்ணம் இருந்ததா? நிச்சமாக இல்லை. ஆனால் தேவையோடு இருக்கும் ஒருவருக்காக தியாகச் செயல்கள் என்பது அவரது மனதில் இருந்ததா – வேறுவிதமாகக் கூறினால், கிறிஸ்துவைப் போல நடத்தை? சந்தேகமே இல்லை – பதில் ஆம் தான்.

ஆனால் அந்த நம்பிக்கையூட்டும் செய்தி ஒளிபரப்பப்பட்டிருக்காவிட்டால் அது முழு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. நம்மைச் சுற்றி நடக்கும் “எவைகளையோ” நாம் பார்ப்பதும், கவனிப்பதும், தேவனுடைய நன்மைகளுக்கு சாட்சிகளாவதும், சுவிசேஷத்தை மற்றவர்களோடு பகிர்ந்துக் கொண்டு அவர்களை ஊக்கப்படுத்துவதும் நமக்கு சிறப்புரிமையாகும்.

சுதந்திரத்தோடு அலைவது

மூன்றாம் தலைமுறை விவசாயியான பாலா, “என் நாமத்துக்கு பயந்திருக்கும்... நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய் கொழுத்த கன்றுகளைப் போல் வளருவீர்கள்” (மல்கியா 4:2), என்பதை வாசிக்கும்போது மிகவும் உற்சாகமடைந்து, தேவன் அளிக்கும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள ஜெபித்தார். தொழுவத்திலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட கன்றுகள் துள்ளி குதித்து அதி வேகமாக, உற்சாகத்தோடு வெளியேறுவதை தெளிவாக நினைவுக்கூர்ந்த பாலா தேவன் வாக்குப் பண்ணின உண்மையான சுதந்திரத்தைக் குறித்து புரிந்துகொண்டார். 

தேவனுடைய நமத்துக்குப் பயந்தவர்கள் மற்றும் அவருக்கு உண்மையாயிருக்கிறவர்களுக்கும், தங்களை மட்டுமே நம்பியிருக்கிறவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி தீர்க்கதரிசி, மல்கியா 4ல் கொடுக்கப்பட்டுள்ள கற்பனைகளைப் பற்றி நானும் பாலாவின் மகளும் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கும்போது, அவள் இந்தக் கதையைப் பற்றி என்னிடம் கூறினாள் (4:1-2). மத போதகர்கள் உட்பட பலர் தேவனையும் அவருடைய நம்பிக்கையுள்ள வாழ்க்கைத் தரங்களையும் புறக்கணித்த நேரத்தில், இந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலர்களை தேவனைப் பின்பற்றுமாறு ஊக்குவித்தார் (1:12-14; 3:5-9). இந்த இரண்டு விதமான மக்களிடையே தேவன் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் நாள் வருமென்று சொல்லி மக்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாய் வாழ மல்கியா அழைத்தார். சுதந்திரமான கன்றைப் போல, விசுவாசமுள்ளவர்கள் “நீதியின் சூரியன், செட்டைகளின் கீழ் ஆரோக்கியத்தோடு உதிக்கும்போது” அனுபவிக்கும் சொல்லிமுடியாத மகிழ்ச்சியை எதிர்பாராத விதத்தில் இந்தப் பகுதியில் மல்கியா ஒப்பிட்டுக் காட்டுகிறார் (4:2).

உண்மையுள்ள சுதந்திரம் எல்லா மக்களுக்கும் கிடைக்கப்பெறும் நல்லச் செய்தியைக் கொண்டுவரும் இயேசுவே இந்த வாக்குத்தத்தத்தை இறுதியாக நிறைவேற்றுபவர் (லூக்கா 4:16-21). ஒரு நாள் தேவனுடைய புதுப்பிக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட கிரியைகளாய், இந்த சுதந்திரத்தை நாம் முழுமையாக அனுபவிக்க முடியும். அங்கே சுதந்திரமாய் இருப்பது விவரிக்கமுடியாத மகிழ்ச்சியாய் இருக்கும்!

தவறான புரிந்துகொள்ளுதல் இல்லை

நம்முடைய வீடுகளில் உள்ள ஸ்மார்ட் சாதனங்களில் பதிக்கப்பட்டிருக்கும் அலெக்ஸா மற்றும் சிரி போன்ற குரல் உதவி கருவிகள் சில நேரங்களில் நாம் சொல்வதை தவறாக புரிந்துக்கொள்ளுகிறது. ஒரு ஆறு வயதுக் குழந்தை தன் குடும்பத்தில் புதிதாக வாங்கப்பட்ட இந்தக் கருவியிடம் குக்கிஸ்களைப் பற்றியும் பொம்மை வீட்டைப் பற்றியும் பேசினாள். சற்று நேரத்திற்குப் பிறகு, ஏழு பவுண்ட் குக்கிஸ்களும், 170 டாலர் மதிப்புக்கொண்ட பொம்மை வீடும் தங்கள் வீடு நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக அவள் தாய்க்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. லண்டனில் ஒரு பேசும் கிளி, தன்னுடைய உரிமையாளர் ஆன்லைனில் எதுவும் வாங்கவில்லை என்றாலும், அவருக்குத் தெரியாமல், தங்கப்பரிசுகள் உள்ள டப்பாக்களின் ஒரு பொட்டலத்தை ஆர்டர் செய்திருந்தது. ஒரு நபர் இந்தக் கருவியிடம் “வாழும் அரையின் விளக்குகளை இயக்க” சொன்னபோது “புட்டிங் அரை இங்கு இல்லை” என்று பதிலளித்தது.

தேவனிடம் நாம் பேசும்போது அத்தகைய தவறான புரிதல் அவரிடமில்லை. நாம் செய்யும் செயலைவிட நம்முடைய இருதயத்தை அவர் நன்கு அறிந்தபடியால் அவர் ஒருபோதும் குழப்பமடைவதில்லை. ஆவியானவர் நம்முடைய இருதயங்களை ஆராய்ந்துப்பார்த்து, தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளுகிறார். தேவன் நம்மை முதிர்ச்சியுள்ளவர்களாக்குவதற்கும், அவருடைய குமாரனைப் போல நாம் மாறுவதற்கும், தமது நல்ல நோக்கத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கிறார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாவிலுள்ள தேவாலயங்களுக்கு கூறினார் (ரோமர் 8:28). ஆவியானவரும் நம்முடைய பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றப்படி வேண்டிக்கொள்வது இன்னதென்று அறியாதிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் (வச. 26-27).

உங்களை தேவனிடம் வெளிப்படுத்துவதற்கு சங்கடமாக இருக்கிறதா? என்ன, எப்படி ஜெபிக்க வேண்டும் என்று புரியவில்லையா? இருதயத்தில் இருந்து முடிந்ததைச் சொல்லுங்கள். ஆவியானவர் உங்களைப் புரிந்துக்கொண்டு தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவார்.