எருசலேமிலுள்ள டான் ஹோட்டல், 2020ல் ஹோட்டல் கொரோனா என்ற வேறு பெயரில் அறியப்பட்டது. கோவிட்-19 லிருந்து மீண்டுவரும் நோயாளிகளுக்கு இது சமர்ப்பிக்கப்பட்டு, இப்படி ஒரு கடினமான நேரத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொடுக்கக்கூடிய ஒரு அபூர்வ இடமாக இந்த ஹோட்டல் இருந்தது. அங்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே தொற்று இருந்ததால், அவர்கள் எல்லோரும் ஒன்றாக பாடி, நடனமாடி, மகிழ சுதந்திரமாக விடப்பட்டனர். அவர்களும் அதைச் செய்தனர்! வெவ்வேறு அரசியல் மற்றும் ஆன்மீகக் குழுக்களுக்கிடையே பதட்டங்கள் அதிகமாகக் காணப்படும் ஒரு நாட்டில், மக்கள் முதலாவதாக, ஒருவரையொருவர் மனிதனாகப் பார்த்து நண்பர்களாய் பழக கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தளமாக இப்படிப்பட்ட நெருக்கடி உருவாக்கியது. 

நம்மைப் போலவே அனுபவமும் மதிப்பும் உள்ள மக்களிடம் நாம் ஈர்க்கப்படுவது இயற்கையானது, இயல்பானதும் கூட. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் அடிக்கடி வலியுறுத்தியது போல, மனிதர்களுக்கிடையே ஏற்படும், நாம் இயல்பானது என்று பார்க்கும், ஏதாவது தடுப்புச்சுவர்களிடையே, சுவிசேஷம், ஒரு சவாலானது. 2 கொரிந்தியர் 5:15. சுவிசேஷம் என்னும் கண்ணாடி மூலம், நம்முடைய வேறுபாடுகளை விட, பகிர்ந்துக் கொள்ளப்பட்ட முறிவு மற்றும் ஏக்கம், குணமடைவதற்கு தேவனுடைய அன்பு தேவை என்ற பெரிய விஷயங்களைப் பார்க்கிறோம். 

“எல்லாருக்காகவும் ஒருவரே மரித்தார்” என்று நாம் விசுவாசித்தால், மற்றவர்களைப் பற்றிய மேலோட்டமான அனுமானங்களைக் குறித்து நாம் மனநிறைவடையவும் முடியாது. மாறாக, அவருடைய அன்பையும், அவர் மேற்கொண்ட பணியையும், நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு, தேவன் நேசிப்பவர்களுடன், (நாம் அனைவரையும்), பகிரவும், “கிறிஸ்துவின் அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறது” (வச. 14).