ஆங்கில இசையின் புகழ்பெற்ற “சிறந்த நாடகக் கலைஞன்” என்ற பாடலானது, அதின் முக்கிய கதாபாத்திரத்தினால், தன் குடும்பத்தையும் சிநேகிதர்களையும் காயப்படுத்தியதைக் குறித்து சுயஉணர்வு அடைந்து பாடப்படுகிறது. அந்த பாடல் தன் சொந்த வீட்டிற்கு திரும்புவதின் மகிழ்ச்சியையும், தன்னிடத்தில் உள்ளதே போதுமானது என்ற நிறைவையும் கண்டறிவதாக அமைந்துள்ளது. 

ஓசியா புத்தகமும் அதேபோன்று தான் முடிகிறது. அதில் தன்னிடமாய் திரும்புபவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் தருவதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார். புத்தகத்தின் பெரும்பான்மை, தேவனுக்கும் அவருடைய ஜனத்திற்குமான உறவை துரோகம் செய்யும் ஒரு மனைவியோடு ஒப்பிட்டு, தேவனை நேசிக்கவும் அவருக்காய் வாழவும் தவறின இஸ்ரவேலின் தோல்வியை முன்வைக்கிறது. 

14ஆம் அதிகாரத்தில் தேவனை ஏமாற்றியதை எண்ணி இருதயம் உடைக்கப்பட்டவர்களாய் அவரிடத்தில் திரும்புபவர்களுக்கு, தேவனுடைய அளவில்லாத அன்பு, கிருபை மற்றும் மீட்பு ஆகியவைகள் இலவசம் என்னும் நம்பிக்கையின் செய்தி முன்வைக்கப்படுகிறது (வச. 1-3). “நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்” என்றும் “அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்” என்றும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 4). தேவனுடைய கிருபை பனியைப்போல் பொழிந்து, லீலிப் புஷ்பத்தைப்போலவும் தானிய விளைச்சலைப்போலவும் செழிக்கப்பண்ணி, சீர்படுத்தமுடியாத உறவை மீண்டும் புதுப்பித்து திருப்பதியாக்குகிறது (வச. 5-7). 

நாம் யாரையாவது காயப்படுத்தினதுண்டானால், அல்லது நம்முடைய வாழ்வில் தேவனுடைய இரக்கத்தை நமக்குச் சாதகமாய் பயன்படுத்திக்கொண்டாலோ, நமக்கு அளிக்கப்பட்ட நல்ல வரங்களை காலாகாலத்திற்கும் பாழாக்குகிறோம். ஆனால் தாழ்மையோடு அவரிடத்திற்குத் திரும்பினால், அவருடைய அன்பு எப்போதும் நம்மை அரவணைத்து, நம்முடைய வாழ்க்கையை சீரமைப்பதை நாம் பார்க்கமுடியும்.