Archives: மே 2021

தேவையான இடத்தில் தண்ணீர்

உலகின் மிக ஆழமான ஏரியான பைக்கால் ஏரி, மிகவும் பரந்து விரிந்த அற்புதமான ஏரி. 49 மைல் (79 கி.மீ.) குறுக்கே ஒரு மைல் ஆழத்தையும் கிட்டத்தட்ட 400 மைல் (636 கி.மீ) அளவையும் கொண்டு, இது உலகின் அனைத்து நண்ணீரில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த நீர் பெரும்பாலும் அணுக முடியாதது. பைக்கால் ஏரி சைபீரியாவில் அமைந்துள்ளது. இது ரஷ்யாவின் மிக தொலைதூரப் பகுதிகளில் ஒன்றாகும். நமது கிரகத்தின் பெரும்பகுதிக்கு தண்ணீர் அத்தியாவசியமான ஒரு தேவை என்றபோதில், மக்கள் யாரும் போக முடியாத இந்த இடத்தில் இவ்வளவு தண்ணீர் இருப்பது முரண்பாடான ஒரு காரியம். 

பைக்கால் ஏரி தொலைதூரத்தில் இருந்தாலும், முடிவில்லாத வாழ்வாதாரமான தண்ணீர் இங்கு கிடைக்கிறது. அதின் தேவை அதிகம் உள்ளவர்களுக்கே அது கிடைக்கிறது. சமாரியாவில் ஒரு கிணற்றினருகே இயேசு இருந்தபோது, ஒரு பெண்ணுடன் உரையாடினார். அவளுடைய ஆழ்ந்த ஆன்மீக தாகத்தின் ஓரங்களை ஆராய்ந்தார். அவளுடைய உள்ளத்தின் ஏக்கத்திற்கு தீர்வு? இயேசு மட்டுமே.

கிணற்றிலிருந்து எடுக்க வந்த தண்ணீருக்கு மாறாக, இயேசு அதைவிடச் சிறந்த ஒன்றை வழங்கினார்: “இந்த தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது, நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்” (யோவான் 4: 13-14).

பல விஷயங்கள் திருப்தியை உறுதிப்படுத்துகின்றன, ஆனால் ஒருபோதும் நம் இருதயத்தின் தாகத்தை முழுமையாகத் தணிக்காது. இயேசுவால் மட்டுமே நம்முடைய ஆன்மீக தாகத்தை உண்மையிலேயே பூர்த்தி செய்யமுடியும். அனைவரது தேவைகளையும், எல்லா இடங்களிலும் அவர் சந்திக்கிறார். 

பாதுகாப்பாய் கரைசேர்த்தல்

பப்புவா நியூ கினியாவில், கந்தாஸ் பழங்குடி மக்கள், தங்கள் மொழியில் அச்சிடப்பட்ட வேதாகம புதிய ஏற்பாட்டின் வருகைக்காக உற்சாகத்துடன் காத்திருந்தனர். இருப்பினும், புத்தகங்களுடன் கிராமத்தை அடைய, மக்கள் சிறிய படகுகளில் கடலில் பயணிக்க வேண்டியிருந்தது.

கடலைக் கடந்துவரும் தைரியத்தை அவர்களுக்கு எது கொடுத்தது? அவர்களின் நீந்தும் திறமையா, ஆம். ஆனால் சமுத்திரத்தை உருவாக்கியது யார் என்பதும் அவர்களுக்குத் தெரியும். நம் வாழ்வின் சலசலக்கும் அலைகள் மற்றும் ஆழமான நீர்நிலைகளைக் கடக்க ஒவ்வொருவருக்கும் வழிகாட்டுவதும் அவர்தான்.

தாவீது எழுதியது போல, “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்?” (சங்கீதம் 139:7). “நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்… சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்” (வச.8-10).

வெப்பமண்டல கடற்கரைகள், அடர்த்தியான மழைக்காடுகள் மற்றும் கரடுமுரடான மலைகள் “கடைசியாக அறியப்படாதவை” என்று அழைக்கப்படும் ஒரு தீவு தேசத்தில் வாழும் கந்தாஸ்களுடன் இந்த வார்த்தைகள் ஆழமாக ஒத்திருக்கும். ஆயினும்கூட அங்குள்ள விசுவாசிகள் அறிந்திருப்பதைப் போல, எந்த இடமும் தேவனுக்கு கடினமும் தூரமும் இல்லை. “உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது,” “இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி” என்று சங்கீதம் 139:12 சொல்லுகிறது. 

பலத்த சுழல்காற்றைப் பார்த்து தேவன், “இரையாதே, அமைதலாயிரு” என்று அதட்டினார். அலைகளும் காற்றும் கீழ்ப்படிகின்றன (மாற்கு 4:39). எனவே, இன்று உங்கள் வாழ்க்கையின் ஆழமான அல்லது கொந்தளிப்பான அலைகளுக்கு அஞ்ச வேண்டாம். நம் தேவன் நம்மை பாதுகாப்பாக கரைசேர்ப்பார்.

நடந்து போ, ஓடாதே!

ஒவ்வொரு நாளின் விடியலையும் அவள் வரவேற்பதை நான் காண்கிறேன். அவள் எங்கள் உள்ளூர் பவர் வாக்கர். நான் என் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது, அவள் சாலையின் முனையில் இருப்பாள். பெரிய ஹெட்ஃபோன்களை மாட்டிக்கொண்டு, முழங்கால் உயரமான, வண்ணமயமான சாக்ஸ் போட்டுக்கொண்டு, அவளது கைகள் மற்றும் கால்களை மாறி மாறி இயக்கி நடந்து கொண்டு, எப்போதுமே ஒரு காலை தரையில் வைத்தவளாய் இருப்பாள். இந்த விளையாட்டு சாதாரணமான ஓடுகிற பயிற்சி விளையாட்டல்ல; இது வேறுபட்டது. பவர் வாக்கிங் என்பது ஒரு அவசியமான கட்டுப்பாட்டை உள்ளடக்கியது, ஓடுவதற்கான உடலின் இயற்கையான விருப்பத்தின் மறுசீரமைப்பு. இது ஓடுவது போல் தெரியவில்லை என்றாலும், ஓடுவதற்கு அல்லது ஜாகிங் செய்வதற்கு எவ்வளவு ஆற்றல், கவனம் மற்றும் சக்தி தேவையோ, இதை செய்வதற்கு அதைவிட அதிகம் தேவை. ஆனால் இது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பயிற்சி.

கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சக்தி - அதுதான் முக்கியம். பவர் வாக்கிங் போன்ற வேதாகம மனத்தாழ்மை பெரும்பாலும் பலவீனமாகக் கருதப்படுகிறது. ஆனால் உண்மை, அது இல்லை. தாழ்மை என்பது நம் பலங்களையும் திறன்களையும் குறைக்கவில்லை; மாறாக, ஒரு அதிகாலை பவர் வாக்கிங் செய்பவரை அவருடைய மனது எப்படி கைகள், கால்கள் மற்றும் பாதங்கள் என்று அனைத்தையும் கட்டுப்படுத்துகிறதோ, அதைப் போலவே மனத்தாழ்மை நம்மை கட்டுப்படுத்துகிறது.

“மனத்தாழ்மையாய் நட” என்ற மீகாவின் வார்த்தைகள் தேவனை மீறிப்போகும் நம்முடைய விருப்பத்தை கட்டுப்படுத்துகிறது. அவர் “நியாயஞ்செய்து இரக்கத்தை சிநேகி” என்று கூறுகிறார் (6:8). அத்தோடு ஏதாவது செய்ய வேண்டும், அதையும் விரைவாகச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும் கொண்டுவரக்கூடும். நம் உலகில் அன்றாட அநீதிகள் மிக அதிகமாக இருப்பதால் அது நியாயமானது. ஆனால் நாம் தேவனால் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும். பூமியில் அவருடைய ராஜ்யத்தின் விடியலில் அவருடைய விருப்பத்தையும் நோக்கங்களையும் நிறைவேற்றுவதே நம்முடைய குறிக்கோள்.

அவளால் இயன்றதைச் செய்தாள்

கப் கேக்கின் பிளாஸ்டிக் கன்டைனரை கன்வேயர் பெல்ட்டின் மூலம் காசாளரை நோக்கி அனுப்பினாள். அதைத் தொடர்ந்து, பிறந்த நாள் அட்டை மற்றும் பல்வேறு சிப்ஸ் பாக்கெட்டுகள் வந்தன. அவளது தலைமுடி, குடுமியிலிருந்து சோர்வுற்ற முன்நெற்றியில் முடிசூடியது. அவளது குறுநடை போடும் குழந்தை கவனத்தை ஈர்த்தது. எழுத்தர் மொத்த தொகையை அறிவித்தார், அம்மாவின் முகம் சோர்ந்தது. “ஓ! நான் எதையாவது திருப்பி வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இவை அனைத்தும் அவளுடைய கொண்டாடத்திற்கு தேவை,” என்று தன் குழந்தையைப் பார்த்து வருத்தத்துடன் பெருமூச்சு விட்டாள்.

வரிசையில் அவள் பின்னால் நின்று, மற்றொரு வாடிக்கையாளர் இந்த தாயின் வலியை உணர்ந்தார். பெத்தானியா மரியாளுக்கு இயேசு சொன்ன வார்த்தைகளில் இந்த காட்சி நன்கு தெரியும்: “இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்” (மாற்கு 14:8). அவரது இறப்பு மற்றும் அடக்கத்திற்கு முன்பாக விலையுயர்ந்த தைலத்தால் அவரை அபிஷேகம் செய்த பிறகு, மரியாள் சீஷர்களால் கேலி செய்யப்பட்டார். அவள் செய்ததை பாராட்டியதின் மூலம் இயேசு தமது சீஷர்களைத் திருத்தினார். அவர் “அவளால் முடிந்த அனைத்தையும் செய்தாள்” என்று கூறவில்லை மாறாக, “அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்” என்று கூறினார். வாசனை திரவியத்தின் பகட்டான செலவு அவருடைய நோக்கம் அல்ல; மரியாளின் அன்பை செயலில் முதலீடு செய்ததே முக்கியமானது. இயேசுவுடனான உறவு அதற்கான அர்த்தத்தை அளிக்கிறது.

அந்தத் தருணத்தில், அந்த தாய் மறுப்பு தெரிவிப்பதற்கு முன்பு, இரண்டாவது வாடிக்கையாளர் முன்னோக்கி சாய்ந்து தனது கிரெடிட் கார்டின் மூலம் பொருட்களை வாங்குவதற்கான அனைத்து பணத்தையும் செலுத்தினார். இது ஒரு பெரிய செலவு அல்ல; அந்த மாதத்தில் அவளின் செலவுபோக பணம் மீதமிருந்தது. ஆனால் அந்த தாய்க்கு அதுதான் எல்லாமே. அவளுடைய தேவையின் தருணத்தில் தூய அன்பின் சைகை ஊற்றப்பட்டது.