அமெரிக்காவில் மேற்கத்திய மாநிலமான நான்  வசிக்கும் கொலராடோ பாறைகளால் ஆன மலைகளுக்கும் வருடாந்திர பனிப்பொழிவுக்கும் பிரசித்தி பெற்றது. எனினும் எங்கள் மாநிலத்தில் ஏற்படும் மோசமான இயற்கை பேரழிவு பணியினால் அல்ல, மழையினால் ஏற்படுவது. ஜூலை31, 1976ல் அன்று உல்லாசபோக்கிடமான எஸ்டஸ் பார்க்கில் பெரிய தோம்ப்ஸன் (Big Thompson) என்ற வெள்ளம் வந்தது. கால்நடைகளை சேர்க்காமல் 144 உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தது.  இந்த பேரழிவை தொடர்ந்து சாலைகளும் நெடுஞ்சாலைகளின் அடித்தளங்களை பற்றிய ஆய்வுகள் நடைபெற்றன. பாதிக்கப்படாத இடங்களின் சுவர்கள் கான்கிரீட்டினால் கட்டப்பட்டிருந்தது. அதாவது உறுதியான வலிமையான அடித்தளம் இருந்தது.

நம்  வாழ்வின் முக்கியமான கேள்வி வெள்ளம் வருமா என்பதல்ல, எப்பொழுது வரும் என்பது தான். சிலசமயங்களில் நாம்முன்னெச்சரிக்கை பண்ணபடுகிறோம். ஆனால் அநேக நேரத்தில் நாம் அறியாமல் இருக்கும்போது நாம் தாக்கப்படுகிறோம். இயேசு இதை குறித்து ஒருவன்  தன்  வார்த்தைகளை கேட்பதினால் மாத்திரமல்ல  சுவிசேஷத்தின்படி வாழ்வதினாலும்  நம் அடித்தளமானது உறுதியாக்கப்படுகிறது (லூக்கா 6:47). அந்த  பயிற்சி முறையானது  ஒரு விதத்தில் கான்க்ரீடை நம்  வாழ்வில் ஊற்றுவதை போன்றது. நாம்  உறுதியாக கட்டப்பட்டிருப்பதால் வெள்ளம் வரும்போது நாம் அசைக்கப்படுவதில்லை. இந்த பயிற்சி இல்லை என்றால் நம் வாழ்க்கை சரிவுக்கும் அழிவுக்கும் சுலபமாக பாதிக்கக் கூடியதாக மாறிவிடும். முட்டாளாக செயல்படுவதற்கும் ஞானமாக செயல்படுவதற்கும் இதுவே வித்தியாசம். அவ்வப்போது நம்மை நாம் நிதானித்து அஸ்திபாரத்தை ஸ்திரப்படுத்துவது நல்லது. இயேசு நம் பலவீனமான பகுதிகளை ஸ்திரப்படுத்தி நம்மை வெள்ளம் மேற்கொள்ளாத படி நம்மை பலப்படுத்துவாராக.