Archives: செப்டம்பர் 2020

சிக்கலுடன் சமாதானம் செய்தல்

நாங்கள் அதை கவனித்தப்போது கிட்டத்தட்ட வீட்டில் இருந்தோம் - எங்கள் காரின் வெப்பநிலை அளவின் ஊசி உயர்ந்துக்கொண்டிருந்தது. நாங்கள் உள்ளே வந்த பிறகு என்ஜினை நிறுத்திவிட்டு வெளியே குதித்தேன். முன்பக்கத்திலிருந்து புகை எழும்பிக்கொண்டிருந்தது. ஒரு பொரித்த முட்டையைப்போல என்ஜின் வெப்பத்தினால் ‘ஸ்’ என்ற ஒலி உண்டாக்கிக்கொண்டிருந்தது. நான் காரை சில அடிகள் உயர்த்தி பார்த்த போது அடியில் குட்டை (சகதி) இருந்ததைக் கண்டேன். உடனடியாக என்ன நடந்தது என்பதை அறிந்துக் கொண்டேன். அங்கிருந்த கேஸ்கெட் தூக்கி வீசப்பட்டிருந்தது.

நான் புலம்பினேன். நாங்கள் மற்ற விலையுயர்ந்த பழுதுபார்ப்புகளுக்கு பணத்தை செலவு செய்துள்ளோம்.

ஏன் காரியங்கள் சரியாக வேலை செய்வதில்லை?  நான் மிகவும் கசப்புடன் முணுமுணுத்தேன். பொருட்கள் உடைவது  ஏன் நிறுத்தப்படவில்லை?

நீங்கள் தொடர்புபடுத்த முடியுமா? சில நேரங்களில் நாம் ஒரு  நெருக்கடியைத்  தவிர்க்கிறோம், ஒரு பிரச்சனையைத் தீர்க்கிறோம், ஒரு பெரிய ரசீதுக்காக பணம் செலுத்துகிறோம் - ஆனால் இன்னொரு பிரச்சனையை சந்திக்கிறோம். சில நேரங்களில் சிக்கல்கள் இயந்திரத்தை அழிப்பதை விட மிகப் பெரியவை : எதிர்பாராத நோயறிதல், அகால மரணம், ஒரு பயங்கரமான இழப்பு.

அப்படிப்பட்;ட தருணங்களில், நாம் குறைவாய் உடைக்கப்பட்ட மற்றும் குறைந்த சிக்கலான உலகத்திற்காக ஏங்குகிறோம். இயேசு வாக்குப்பண்ணின உலகம் வருகிறது.  ஆனால் இன்னும் இல்லை : “உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு” யோவான் 16ம் அதிகாரத்திலே இயேசு தம்முடைய சீ ஷர்களுக்கு ஞாபகப்படுத்தினார். “ஆனாலும் திடன் கொள்ளுங்கள்! நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) விசுவாசத்திற்காக துன்புறுத்தப்படுதல் போன்ற கடுமையான பிரச்சனைகளைக் குறித்து இந்த அதிகாரத்தில் இயேசு பேசியிருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட பிரச்சனை அவரை நம்புகிறவர்களுக்கு ஒருபோதும் கடைசியானதாயிருக்காது என்று அவர் கற்பித்தார்.

சிக்கல்கள் சிறிதாயிருந்தாலும், பெரிதாயிருந்தாலும் நம்மை சோர்வில் கொண்டு செல்லும். ஆனால், அவருடன்  இருக்கும்போது ஓர நல்ல நாளையை நமக்கு கொடுக்கும் இயேசுவின் வாக்கால், நம்முடைய சிக்கல்கள் நம்மை ஒருபோதும் கீழே தள்ளிவிடாது என்று ஊக்குவிக்கப்படுகிறோம்.

வதந்திகளை நிறுத்துதல்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள புனித திருத்துவ தேவாலயத்தில் ஊழியராக சார்ல்ஸ் சிமியோன் நியமிக்கப்பட்ட போது அநேக ஆண்டுகள் அவர் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. சிமியோனுக்கு பதிலாக இணை ஊழியர் நியமிக்கப்பட வேண்டும் என்று பெரும்பாலான சபையினர் விரும்பியதால் அவரைக் குறித்து வதந்திகளைப் பரப்பி அவருடைய ஊழியத்தை நிராகரித்தனர் - மட்டுமல்லாமல் சில நேரங்களில் அவதை ஆலயத்திற்கு வெளியே விட்டு பூட்டினர். ஆனால் தேவனின் ஆவியால் நிரம்பப்பட விரும்பிய சிமியோன், வாழ்வதற்கு சில கொள்கைகளை உருவாக்கி கொண்டு வதந்திகளை சமாளிக்க முயன்றார். “ஒருவர், வதந்திகள் முற்றிலும் உண்மையாக இல்லாவிட்டால், நம்பக்கூடாது. மறுபக்கத்தை கேட்டால் வதந்திகளின் வித்தியாசமான விஷயங்களை கேட்க நேரிடும்”.

இந்தச் சூழ்நிலையில், சிமியோன் “வதந்திகளும், தீங்கிழைக்கும் பேச்சுக்களும் ஒருவரோடொருவர் அன்பு செலுத்த முடியாது. இப்படிப்பட்டவைகளை பேசக்கூடாது” என்று தேவன் தம்முடைய மக்களுக்கு கொடுத்த கட்டளையைப் பின்பற்றினார். தேவனின் பத்துக் கட்டளைகளில் ஒன்று மக்கள் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாக வாழவேண்டும் என்பதை பிரதிபலிக்கிறது : “பிறனுக்கு விரோதமாக பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக” (யாத்திராகமம் 20:16). “அபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாயாக (யாத். 23:1) என்று  யத்திராகமத்தில் மற்றொரு கட்டளை இதை வலுப்படுத்துகிறது.

நாம் ஒவ்வொருவரும் வதந்திகளையும் தவறான அறிக்கைகளையும் பரப்பாவிட்டாலும், அவைகளைக் கேட்ட அந்த கணத்திலே அவைகளை நிறுத்தியிருந்தால் இந்த உலகம் எப்படி வித்தியாசமாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். நாம் அன்பினால் உண்மையைப் பேசி தேவனுக்கு மகிமையுண்டாக நம்முடைய வார்த்தைகளை உபயோகிக்க பரிசுத்த ஆவியின் உதவியை நாடுவோமாக.

கவனத்துடன்.

எழுத்தாளரான மார்க் ட்வைன் நம் வாழ்க்கையில் எதைப் பார்க்கிறோம் – எப்படி பார்க்கிறோம் - என்பது நம்முடைய அடுத்த அடியில் செய்வதில் மட்டுமல்ல நம்முடைய விதியைக் கூட பாதிக்கும் என்று பரிந்துரைக்கிறார். “உங்களுடைய கற்பனை உங்கள் கவனத்திற்கு அப்பாற்பட்டிருந்தால், நீங்கள் உங்கள் கண்களை சார்ந்திருக்க முடியாது” என்று ட்வைன் கூறுகிறார்.

பேதுருவும், யோவானும், நாடோறும் அலங்கார வாசலில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்த சப்பாணியை சந்தித்த போது பார்வையைக் குறித்து பேதுரு பேசினார் (அப். 3:2). அந்த மனிதன் அவர்களிடம் பிச்சை கேட்டபோது பேதுருவும் யோவானும் அந்த மனிதனை உற்றுப்பார்த்து “எங்களை நோக்கிப்பார்” (வச. 4)என்றார்கள். 

அவர் ஏன் அதைச் சொன்னார்? கிறிஸ்துவின் ஸ்தானாதிபதியாய் பேதுரு அந்தப் பிச்சைக்காரன் தன்னுடைய சொந்த வரம்புகளையும், அவனுடைய பணத்தேவைகளையும் பார்ப்பதை நிறுத்த வேண்டுமென்று விரும்பினார். அந்தப் பிச்சைக்காரன் அப்போஸ்தலரைப் பார்த்தபோது தேவனிடத்தில் விசுவாசம் வைப்பதின் உண்மையைக் கண்டார்.

பேதுரு அவனைப் பார்த்து “வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை. என்னிடத்தில் உள்ளதை உனக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீ எழுந்து நட” என்று சொல்லி “வலது கையினால் அவனைப் பிடித்து தூக்கி விட்டான். உடனே அவனுடைய கால்களும், கரடுகளும் பெலன் கொண்டது. அவன் குதித்தெழுந்து நின்று நடந்து தேவனைத் துதித்தான்” (வச. 7-8).

என்ன நடந்தது ? அந்த மனிதன் தேவனிடத்தில் விசுவாசம் வைத்தான் (வச. 16).  சுவிசேஷகர் சார்ல்ஸ் ஸ்பர்ஜன் “உங்களுடைய கண்கள் அவரை நோக்கிக்கொண்டிருக்கட்டும்” என்று வலியுறுத்தினார். இப்படி செய்யும் போது நாம் தடைகளைப் பார்ப்பதில்லை. நம்முடைய வழிகளைச் செவ்வைப்படுத்தும் தேவனையே நாம் பார்க்கிறோம்.

மின்தூக்கியை சரிசெய்தல்

சாராவுக்கு அவளுடைய மூட்டுக்கள் இடம்பெயறும் ஒரு அரிய நிலை உள்ளது. இதனால் அவள் நகர்வதற்கு மின்சார சக்கர நாற்காலியை சார்ந்திருக்க வேண்டியிருந்தது.

சமீபத்தில் ஒரு கூட்டத்திறுகு செல்லும் வழியில், சாரா தன்னுடைய சக்கர நாற்காலியினால் ரயில் நிலையத்திறுகுச் சென்றாள். ஆனால் அங்கு லிஃப்ட் (மின்தூக்கி) உடைந்திருப்பதைக் கண்டாள். மீண்டும், நடைமேடைக்குச் செல்ல வழியில்லாததால், நாற்பது நிமிடங்கள் பிரயாண தூரத்தில் இருக்கும் மற்றொரு ரயில் நிலையத்திற்கு டாக்ஸியில் செல்ல அவளுக்கு கூறப்பட்டது. டாக்ஸி அழைக்கப்பட்டது ஆனால் வரவில்லை. சாரா பிரயாணப்படுவதை விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றாள்.

துரதிர்ஷ்டவசமாக, சாராவுக்கு இது வழக்கமாக நிகழக்கூடியதொன்றாக இருந்தது. உடைந்த லிஃப்டுகள் அவள் ரயில் ஏற தடையாயிருந்தது, மறக்கப்பட்ட வளைவுகளால் அவள் ரயிலிலிருந்து கீழே இறங்க முடியாமல் போய் விடுகிறது. சில நேரங்களில், சாராவுக்கு உதவி தேவைப்படுவதால் ரயில்வே ஊழியர்களுக்கு அவள் ஒரு தொல்லையாகிவிடுகிறாள். அனேக நேரங்களில் அவளுக்கு அழுகையே வந்துவிடும்போல் இருந்தது.

மனித உறவுகளை ஆளும் அனேக வேதாகம சட்டங்கங்களில் “உன்னில் நீ அன்புகூறுவதுபோல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக” என்பதே பிரதானமானது. (லேவி. 19:18, ரோம. 13:8-10). இப்படிப்பட்ட அன்பு நம்மை பொய், திருட்டு மற்றும் வஞ்சனை செய்வதிலிருந்து தடுக்கிறதுமல்லாமல் (லேவி. 19:11,14), நாம் செயல்படுவதையே மாற்றிவிடுகிறது.  ஊழியர்களை நியாயமான முறையில் நடத்த வேண்டும் (வச. 13). ஏழைகளுக்கு தாராளமாகக் கொடுக்க வேண்டும்(வ 9-10).  சாராவின் விஷயத்தில், லிஃப்டை சரிசெய்து, வளைவுகளை வெளியே இழுத்து விடுபவர்கள், பொறுத்தமற்ற வேலையை செய்யவில்லை மாறாக மற்றவர்களுக்கு முக்கியமான சேவை செய்கிறார்கள்.

வேலையை ஊதியத்திற்காகவோ அல்லது தனிப்பட்ட ஆதாயத்திற்காகவோ செய்வதாகக் கருதினால், மற்றவர்கள் எரிச்சலூட்டுவதாகவே நினைப்போம். நம்முடைய வேலைகளை அன்பு செலுத்துவதற்கான வாய்ப்பாக கருதினால், நம்முடைய அன்றாட பணிகள் புனித நிறுவனமாக மாறிவிடும்.

ஏமாற்றப்பட வேண்டாம்

வெட்டுக்கிளி, புள்ளிகளுள்ள வெளிப்புற இறக்கைகளுடனும், பறக்கும் போது ஒளிரும் தன்மையுள்ள மஞ்சள் நிறத்தில் மைப்பூச்சுப்போல படிந்திருக்கும் இறக்கைகளையுமுடைய ஒரு அழகிய பூச்சி. ஆனால் அதனுடைய அழகு சிறிது ஏமாற்றக்கூடியதாயிருக்கிறது. இந்தப் பூச்சி பயிர்களை ஆக்கிரமித்து, சுற்றுசூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய திறன் கொண்டது. வெட்டுக்கிளி, கோதுமை, மக்காச்சோளம், மற்றும் பிற தாவரங்கள் அடங்கிய பச்சை நிறமான பகுதிகளை தின்றுவிடும். அவைகள் இந்தத் தாவரங்களிலுள்ள சாறுகளை உறிஞ்சி அவைகளை பயனற்றவைகளாக்கி விடும்.

ஆதாம் மற்றும் ஏவாளின் கதையில், நாம் ஒரு வித்தியாசமான அச்சுறுத்தலைப்பற்றி காண்கிறோம். சர்ப்பமாகிய சாத்தான், இந்த தம்பதியர், தேவனுக்கு கீழ்படியாமலும், அவர்கள் தடைசெய்யப்பட்ட பழத்தை சாப்பிட்டால் தேவர்களைப்போல இருப்பார்கள் என்றும் சொல்லி, ஏமாற்றினான் (ஆதீ. 3:1-7). ஆனால் ஏன் ஒரு சர்ப்பத்திற்கு செவிகொடுக்க வேண்டும்?. அவனுடைய வார்த்தைகள் ஏவாளைக் கவர்ந்ததா அல்லது அவனில் வேறு எதுவும் கவர்ச்சிகரமாக இருந்ததா?. சாத்தான் மிகவும் அழகுள்ளவனாக சிருஷ்டிக்கப்பட்டான்  என்று வேதம் சொல்லுகிறது. (எசே. 28:12). ஆயினும் சாத்தான் தான் ஏவாளைக் கவர்ந்திழுக்க பயன்படுத்திய அதே சோதனையினால் தானும் விழுந்தான். : “நான் உன்னதமானவருக்கு ஒப்பாவேன்” (ஏசா. 14:14, எசே. 28:9).

இப்பொழுது சாத்தானுக்கு இருக்கும் எந்த அழுகும் ஏமாற்றத்தான் பயன்படுகிறது (ஆதி. 3:1, யோவா. 8:44, 2 கொரிந்தியர் 11:14). அவன் விழுந்ததைப்போல, மற்றவர்களையும் வளரவிடாதப்படி கீழே இழுக்க பார்க்கிறான். ஆனால் அவனைக்காட்டிலும் வல்லமையுள்ளவர் நம் அருகில் இருக்கிறார். நம் அழகான மீட்பர் இயேசுவிடம் நாம் ஓடலாம்.