திரைப்படம் தயாரிக்கும் வைலி ஓவர்ஸ்ட்ரீட் என்பவர், நிலாவின் நேரடிக் காட்சியை, தனது வலிமைவாய்ந்த தொலை நோக்கி வழியே பார்க்கும்படி மற்றவர்களுக்குக் காண்பித்தார்.  மிக அருகில் தெரிந்த அக்காட்சியை அநேகர், ஆச்சரியத்தோடு வியந்து பார்த்தனர். இத்தனை மகிமை பொருந்திய காட்சியைப் பார்க்கும் போது, “நம்மைக் காட்டிலும் மிகப் பெரிய பொருட்கள் இருக்கின்றன என்பதை நினைக்கும் போது, அது நம்மை ஆச்சரியத்தால் நிறைக்கின்றது” என்று அவர் விளக்கினார்.

சங்கீதக்காரனாகிய தாவீது, தேவனுடைய பரலோக ஒளியைக் கண்டு வியக்கின்றார். “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும் போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?” என்கின்றார் (சங்.8:3-4).

தாவீதின் இந்த தாழ்மையான கேள்வி, நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு கண்ணோட்டத்திற்கு கொண்டு செல்கின்றது. தேவன் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைத்த பின்னர், அங்கு சூரியனும் சந்திரனும் தேவையில்லை. அபோஸ்தலனாகிய யோவான் கூறுவதைப் போல, தேவனுடைய பிரகாசமான மகிமையே ஒளியைத் தருகின்றது. “நகரத்திற்கு வெளிச்சம் கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக் குட்டியானவரே அதற்கு விளக்கு…………..அங்கே இராக்காலம் இல்லை.” (வெளி. 21:23-25).

இதனை நினைக்கும் போது எத்தனை ஆச்சரியமாக இருக்கின்றது! அவருடைய பரலோக மகிமையை நாம் இப்பொழுதும்             அநுபவிக்கலாம். உலகிற்கு ஒளியாக வந்த கிறிஸ்துவை நாம் தேடும் போது நாம் அந்த மகிமையைக் காணமுடியும். ஓவெர்ஸ்ரீட் கூறியதை போல, “நாம் அடிக்கடி மேல் நோக்கிப் பார்ப்போமாக” அவ்வாறு நாம் செய்யும் போது தேவனைக் காண்போம்.