எங்களது ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா  நடைபெற்ற போது,  நான் மிகவும் அவமானத்துக்குள்ளான அந்த நிகழ்வு நடை பெற்றது. எங்கள் வேதாகமக் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நண்பர்களால் நிறைந்த அந்த விழாவில், நான், என்னுடைய செய்திக் குறிப்புகளோடு, பேச்சாளர் மேசையை அணுகிய போது, அங்கு அமர்ந்திருந்த மிகப் பெரிய கூட்டத்தைப் பார்த்தேன், என்னுடைய கண்கள், முதல் வரிசையில், அதிக கவனத்தோடு, தங்களுடைய பட்டமளிப்பு உடையில் அமர்ந்திருந்த மதிப்புமிக்க பேராசிரியர்கள் மீது சென்றது. உடனடியாக என்னுடைய உணர்வுகள் மரத்தது, என்னுடைய  நாவு வறண்டது, என்னுடைய மூளை செயலற்றது, முதல் வார்த்தைகள் தடுமாறின, நான் ஏதேதோ சொந்த வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பித்தேன், என்னுடைய உரையில் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதயே உணராதிருந்தேன், நடுக்கத்தோடு பக்கங்களைப் புரட்டினேன், என் வாய் அர்த்தமற்ற வார்த்தைகளை உளறியது, அனைவரும் அதிர்ச்சியுற்றனர். எப்படியோ என்னுடைய பேச்சை முடித்து விட்டு, என்னுடைய நாற்காலியில் வந்து அமர்ந்தேன், தரையைப் பார்த்துக் கொண்டிருந்தேன், நான் செத்து விட விரும்பினேன்.

எனினும் அவமானப்படுதலை தாழ்மைக்கு வழி நடத்தும் ஒரு நல்ல காரியமாகக் கருதலாம், ஏனெனில் அது தேவனுடைய இருதயத்தைத் திறக்கும் சாவி எனலாம். “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” என வேதாகமம் கூறுகின்றது (யாக். 4:6). அவர் தழ்மையுள்ளவர்களின் மேல் கிருபையைப் பொழிகின்றார். “சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன்” (ஏசா.66:2) என்று தேவன் சொல்கின்றார். நாம் தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தும் போது, அவர் நம்மை உயர்த்துவார் (யாக். 4:10).

அவமானப்படுதலும் வெட்கமும் நம்மை தேவனிடம் கொண்டு வருகின்றன, அவர் நம்மை சரிபடுத்துவார். நாம் கீழே விழும் போதும் அவருடைய கரத்தில் விழுவோம்.