மைக் என்பவரோடு பணிபுரியும் அநேகர், கிறிஸ்தவத்தைப் பற்றி சிறிதே அறிந்திருந்தனர், அவர்கள் அதற்காக வருத்தப்படவும் இல்லை. ஆனால், மைக் தேவனை அறிவார் என்பதை அவர்கள்     அறிந்திருந்தனர். கிறிஸ்து உயிர்த்தெழுதல் பண்டிகை நெருங்கி    வந்த போது ஒரு நாள் ஒருவர், உயிர்த்தெழுதலுக்கும் பஸ்காவிற்கும் ஒரு தொடர்பு உண்டு என்று கேள்விப்பட்டிருக்கின்றேன், ஆனால் அது என்ன என்பதை அறியேன், “ஹே, மைக்! இந்த நல்ல காரியத்தைப் பற்றி உனக்குத் தெரியுமா? பஸ்கா என்பது என்ன?” என்று கேட்டார்.

எனவே, மைக் விளக்கினார். இஸ்ரவேல் ஜனங்களை தேவன் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்தார் என்பதையும், 10 வாதைகளைப் பற்றியும், ஒவ்வொரு வீட்டிலும் நடைபெற்ற தலைப் பிள்ளைச் சங்காரத்தைப் பற்றியும் விளக்கினார்.  ஒவ்வொரு வீட்டின் நிலைக்கால்களிலும் பலிசெலுத்தப்பட்ட ஆட்டின் இரத்தம் பூசப்பட்டிருந்தால், சங்கார தூதன் அவற்றைக்   கடந்து சென்று விடுவான் என்பதையும் விளக்கினார். பின்னர், அதே பஸ்கா நாட்களில், இயேசு கிறிஸ்து நம் அனைவருக்காகவும் பலியாக்கப் பட்ட ஆட்டுக் குட்டியானார் என்றும் விளக்கினார், திடீரென மைக், ஹே, நான் சாட்சியாக இருக்கின்றேன்! என்று உணர்ந்தார்.

அப்போஸ்தலனாகிய பேதுரு, தேவனைப் பற்றி அறியாத ஒரு சபைக்கு ஆலோசனை கொடுக்கும் போது, “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள் (1 பேதுரு 3:15) என்கின்றார்.

மைக் தன்னுடைய விசுவாசத்தைக் குறித்து தெளிவாக          இருந்தபடியால், அவன் தன்னுடைய விசுவாசத்தைக் குறித்து இயல்பாக “சாந்தத்தோடும் வணக்கத்தோடும்” (வ.15) கூற முடிந்தது.

நாமும், பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு, எளிய முறையில் வாழ்க்கைக்கு மிகவும் தேவையான முக்கியமான செய்தியான, தேவனைக் குறித்த நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்ள முடியும்.