புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்ததும், பதினான்கு வயது நிரம்பிய    சந்தீப், ஒவ்வொரு மாலையும் பஸ்ஸிலிருந்து குதித்து, தன்னுடைய வீட்டினை அடையும் வரை நடனமாடிக் கொண்டேச் செல்வான். அவனுடைய தாயார் அதனை பதிவு செய்து, அதனை, பள்ளிக்கு பின் நடன நேரம், என்று நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார்.  அவன் நடனமாடுகின்றான் ஏனெனில், அவன் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவிக்கின்றான், தன்னுடைய ஒவ்வொரு அசைவினாலும் “மற்றவர்களையும் மகிழ்ச்சியாக்குகின்றான்”. ஒரு நாள், குப்பை சேகரிக்கும் பணியிலிருந்த இரண்டு பேர், தங்களுடைய பரபரப்பான வேலையின் மத்தியிலும், இந்த இளைஞனோடு சுழன்று, அசைந்து, நடனமாடி மற்றவர்களையும் நடனமாட அழைத்தனர். இம்மூவரும் சேர்ந்து, ஒருவரையொருவர் தொற்றிக் கொள்ளும் உண்மையான மகிழ்ச்சியினைத் தெரிவித்தனர்.

நிலைத்திருக்கும், முழுமையான மகிழ்ச்சியைத் தரக்கூடியவர் தேவன் ஒருவரே என்பதை சங்கீதம் 149 விளக்குகின்றது. தேவனுடைய பிள்ளைகள் இணைந்து “கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்” (வ.1) என்று சங்கீதக்காரன் உற்சாகப் படுத்துகின்றார்.  

அவர் இஸ்ரவேல் ஜனங்களை “தன்னை உண்டாக்கினவரில் மகிழவும்”, “தங்கள் ராஜாவில் களிகூரவும் கடவர்கள்” (வ.2) என்று அழைக்கின்றார். அவர் நம்மை நடனத்தோடும், இசையோடும் தேவனை ஆராதிக்கும்படி அழைக்கின்றார் (வ.1-3). ஏனெனில், “கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்;        சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்” (வ.4).

நாம் ஆராதிக்கும் நம்முடைய தந்தை, நம்மைப் படைத்தார், அவரே இந்த உலகத்தையும் காத்து வருபவர். அவர் நம்மில் மகிழ்ச்சியடைகின்றார், ஏனெனில் நாம் அவருடைய நேசப் பிள்ளைகள். அவரே நம்மை வடிவமைத்தவர், நம்மை          அறிந்திருக்கின்றார், அவரோடு உறவாடும்படி நம்மை அழைக்கின்றார்.  இது எத்தனை பெரிய கனம்! என்றும்        உயிரோடிருக்கின்ற, நமது அன்பின் தேவனே நம்முடைய மாறாத மகிழ்ச்சிக்குக் காரணர். நம்மைப் படைத்தவர், ஒவ்வொரு நாளையும் நமக்கு ஈவாகத் தந்து, நம்மோடு எப்பொழுதும் இருக்கின்றதற்காக நாம் மகிழ்ந்து களிகூருவோம்.