Archives: ஏப்ரல் 2020

நாம் தேவனைத் துதிப்போம்!

எஸ்தரின் அலைபேசியின் அலாரம் ஒவ்வொரு நாள் மாலையிலும் 3:16 க்கு அடிக்கின்றது, அது அவளுடைய துதி இடைவெளி. தேவன் செய்த நன்மைகளுக்காக அவள் நன்றி கூறுகின்றாள். அவள் நாள் முழுவதும் தேவனோடு பேசிக் கொண்டே இருந்தாலும், இந்த இடைவெளியை அவள் விரும்புகின்றாள், ஏனெனில் தேவனோடு அவள் கொண்டுள்ள உறவைக் கொண்டாட இது உதவியாய் இருக்கின்றது.

அவளுடைய இந்த மகிழ்ச்சியான பக்தியினால் ஈர்க்கப்பட்ட நானும், ஒவ்வொரு நாளும், ஒரு திட்டமான நேரத்தை ஒதுக்கி, கிறிஸ்து நமக்காக சிலுவையில் நிறைவேற்றிய தியாகத்தை எண்ணி நன்றிகூறவும், இன்னமும் இரட்சிக்கப் படாதவர்களுக்காகவும் ஜெபிக்கும்படி திட்டமிட்டேன். கிறிஸ்துவின் விசுவாசிகள் யாவரும் அனுதினமும் அவரைத் துதிப்பதை விட்டு விட்டு, மற்றவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்து விட்டால் என்னவாகும் என்று அதிசயித்தேன்.

அவரை ஆராதிக்கும் ஓசையின் அழகிய அலைகள் நகர்ந்து, பூமியின் கடைமுனை மட்டும் செல்கின்றது என்பதாக சங்கீதம் 67 சொல்கின்றது. சங்கீதக்காரன் தேவனுடைய இரக்கத்திற்காக கெஞ்சுகின்றார், எல்லா ஜாதிகளுக்குள்ளும் அவருடைய மகத்துவமான நாமத்தை விளங்கப்பண்ணும்படி தெரிவிக்கின்றார் (வச. 1-2). அவர், “தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக” (வச. 3) என்று பாடுகின்றார். சர்வ வல்லவரின் அரசாட்சியையும், அவருடைய உண்மையான வழி நடத்துதலையும் அவர் கொண்டாடுகின்றார் (வச. 4). தேவனுடைய மிகப் பெரிய அன்பிற்கும், அளவற்ற ஆசிர்வாதங்களுக்கும் சாட்சியாக இருந்து, தேவனுடைய பிள்ளைகளை அவரைத் துதிக்கும்படி வழி நடத்துகின்றார் (வச. 5-6).

அவருக்கு அன்பான பிள்ளைகளின் மீது, தேவன் தொடர்ந்து உண்மையுள்ளவராய் இருப்பது, நம்மையும் அவரை போற்றச் செய்கின்றது. நாம் அப்படிச் செய்யும் போது, மற்றவர்களும் அவர் மீது நம்பிக்கை வைக்கவும், அவருக்கு மரியாதை செலுத்தவும், அவரைப் பின்பற்றவும் அவரே தேவனென்று ஆராதிக்கவும் நம்மோடு சேர்ந்து கொள்வர்.

தண்ணீரின் வழியே

“த ஃப்ரீ ஸ்டேட் ஆஃப் ஜோன்ஸ்” (The Free State of Jones ) என்ற திரைப் படம், நியூட்டன் நைட் என்பவர், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நடத்திய உள் நாட்டு யுத்தத்தைக் குறித்து விவரிக்கின்றது. ஐக்கிய ஆட்சியிலிருந்து பிரிந்த சிலரும், சில அடிமைகளும் யுனியன் இராணுவத்திற்கு உதவியாயிருந்தனர், பின்னர் யுத்தம் முடிந்தபோது, அடிமைகளின் எஜமானர்களையும் எதிர்த்தனர். அநேகர் நைட்டைத் தங்களுக்குத் தலைவராகக் கொண்டனர், ஐக்கிய ஆட்சியிலிருந்து பிரிந்த நைட்டின் உயிரை இரு அடிமைகள் காப்பாற்றினர், அவர்கள், அவரை யாரும் எளிதில் செல்ல முடியாத, அடர்ந்த காட்டுக்குள் இருந்த சதுப்பு நிலப் பகுதிக்கு எடுத்துச் சென்றனர், ஐக்கிய ஆட்சியாளரின் படைகளிடமிருந்து தப்பிச் சென்ற போது, அவருடைய காலில் ஏற்பட்ட காயத்தையும் குணப்படுத்தினர், இந்த அடிமைகள் மட்டும் அவரைக் கைவிட்டிருந்தால், அவர் மரித்திருப்பார்.

யூதாவின் ஜனங்கள் காயமுற்றவர்களாய், கைவிடப்பட்டவர்களாய், உதவியற்றவர்களாய் எதிரிகளைச் சந்தித்து வந்தனர். இஸ்ரவேலரை அசீரியர்கள் மேற்கொண்டனர். ஒரு நாள் அவர்கள் (யூதா) எதிரிகளால் மேற்கொள்ளப்படுவர் என ஏசாயா தீர்க்கதரிசி சொல்லியிருந்தார், பாபிலோனியர்கள் அவர்களை மேற்கொண்டனர். யூதாவுக்கு உதவி செய்யவும், அவர்களைக் கைவிடாமல், மீட்கும்படியாகவும் ஒரு தேவன் தேவை. தேவனுடைய உறுதியளிக்கும் வாக்குத்தத்தங்களைப் பெற்ற போது அவர்களின் நம்பிக்கை அவர்களை எப்படி முன்னோக்கிச் செல்ல தூண்டியிருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார். ”பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்” (ஏசா.43:5) என்கின்றார் தேவன். எத்தனை பெரிய ஆபத்துக்களை அவர்கள் சந்திக்க நேரிட்டாலும், எவ்வளவு வேதனைகளை அவர்கள் சகித்தாலும் தேவன் அவர்களோடு இருக்கின்றார். அவர்கள் “தண்ணீர்களைக் கடக்கும் போது” அவர்களோடு இருப்பார், அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு நடத்திச் செல்வார் (வச. 2), அவர் “அக்கினியில் நடக்கும் போது” கூடவே நடந்து வருவார், சுட்டெரிக்கும் நெருப்பிலும் அவர்களுக்கு உதவுகின்றார் (வச. 2).

தேவன் தன்னுடைய பிள்ளைகளின் கூடவே இருந்து அவர்களைப் பாதுகாக்கின்றார், வழிநடத்துகின்றார், அவர் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை, வாழ்விலும், மரணத்திலும் கைவிடுவதில்லை என்பதாக வேதாகமம் முழுவதிலும் காண்கின்றோம். நீ கடினமான இடத்தில் இருந்தாலும் தேவன் உன்னோடு இருக்கின்றார், அவர் உன்னை தண்ணீரைக் கடக்கச் செய்வார்.

நம்முடைய தந்தை பாடுகின்றார்

மற்றவர்களுக்குப் பாடல்கள் பாடுவதன் மூலம் அவர்களை ஊக்கப்படுத்துவது பீட்டருக்கு மிகவும் விருப்பமானது. ஒரு நாள் அவனுக்குப் பிடித்தமான உணவுவிடுதியில் மதிய உணவு சாப்பிட்டோம், அப்பொழுது அவன் உணவு பரிமாறுபவர் மிகவும் களைப்பாக இருப்பதைக் கண்டான், அவளிடம் சில கேள்விகளைக் கேட்டான், பின்னர் அவளை உற்சாகப் படுத்தும்படி பிரசித்திப் பெற்ற பாடல் ஒன்றைப் பாடினான். “நல்லது, அன்புள்ள நண்பா, நீ எனக்கு இந்த நாளை மகிழ்ச்சியாக மாற்றினாய், மிக்க நன்றி” என்று அவள் ஒரு சிரிப்புடன் கூறிக் கொண்டே, எங்களது உணவு தேவையைக் குறித்துக் கொண்டாள்.

செப்பனியா புத்தகத்தை திறந்தோமானால், அங்கு தேவன் பாடுவதை விரும்புகிறார் என்பதாகக் காண்கின்றோம். இங்கு தீர்க்கதரிசி தன்னுடைய வார்த்தைகளினால் ஒரு அழகிய காட்சியை காண்பிக்கின்றார், அவர் தேவனை ஒரு இசைஞராகவும், அவர் தன்னுடைய பிள்ளைகளோடு சேர்ந்து பாட விரும்புகின்றார் எனவும் வர்ணிக்கின்றார். மேலும், “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (3:17) .என்கின்றார். அவருடைய இரக்கத்தினால் மாற்றம் பெற்றவர்களோடு எப்பொழுதும் தேவனாகிய கர்த்தருடைய பிரசன்னம் இருக்கும் என்று தேவன் வாக்களிக்கின்றார், மேலும், அதோடு நின்றுவிடவில்லை, அவர் தன்னுடைய பிள்ளைகளை, “நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு” (வ.14) என்கின்றார்.

ஒரு நாள், நாம் தேவனோடு கூட இருப்போம் என்பதை கற்பனை செய்து பார்க்க முடிகின்றது, அப்பொழுது, இரட்சகராகிய இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தவர்கள் யாவரும் அவரோடு இருப்பார்கள். நம்முடைய பரலோக பிதா, நம்மோடு சேர்ந்து பாடும் பாடல்களைக் கேட்பதற்கும், அவருடைய அன்பினையும், அவர் நம்மை அங்கிகரித்து, ஏற்றுக் கொண்டதையும் அநுபவிப்பது எத்தனை அற்புதமாக இருக்கும்.

சவால்களை நோக்கி ஓடு

தன்னுடைய நண்பனின் மோட்டார் வாகனத்தைத் திருடிச் சென்ற இளைஞர்களை டேவிட் துரத்திச் சென்றான், அவன் எந்த திட்டத்தோடும் செயல்படவில்லை, அவன் அதனை எப்படியாகிலும் திருப்பிக் கொண்டு வந்து விட வேண்டும் என்று மட்டும் தான் நினைத்தான். ஆச்சரியப்படும் படியாக இவன் வருவதைக் கண்ட அந்த மூவரும் பைக்கைப் போட்டு விட்டு, ஓடிவிட்டனர். டேவிட் நிம்மதியடைந்தவனாய், தன்னுடைய முயற்சியைக் குறித்து திருப்தியடைந்தவனாய், அந்த பைக்கை எடுத்துக் கொண்டு திரும்பினான், அப்பொழுது தான், அவனுடைய பெலசாலியான நண்பன் சந்தோஷ், அவர்களுக்குப் பின்னாக, மிக அருகில் பின்தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைக் கண்டான்.

தங்களுடைய பட்டணம் பகைவரின் படைகளால் சூழப்பட்டிருப்பதைக் கண்ட எலிசாவின் வேலைக்காரன், பயந்தான், அவன் எலிசாவிடம் ஓடி, “ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம்” என்றான். எலிசா அவனை அமைதிப் படுத்தினான், “பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” என்றான். பின்னர், தேவன் அந்த வேலைக்காரனின் கண்களைத் திறந்தார், “எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும், இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்”
(வச. 15-17).

நீ இயேசுவைப் பின்பற்றிச் செல்ல போராடிக் கொண்டிருக்கும் போது, சில வேளைகளில் பாதுகாப்பற்ற சூழலையும் கடக்க வேண்டியுள்ளது, அப்பொழுது நீ உன் பாரம்பரியத்தையும், உன்னுடைய பாதுகாப்பையும் இழக்க நேரலாம், ஏனெனில் நீ சரியானதைச் செய்ய தீர்மானித்துள்ளாய். இது எப்படி முடியப் போகின்றதோ என்று எண்ணி தூக்கத்தையும் இழக்கலாம். ஆனால், நீ தனியாக இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள். உனக்கு முன்னால் இருக்கும் பிரச்சனையைக் காட்டிலும் நீ வலிமையானவனும், திறமையானவனுமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, இயேசு உன்னோடு இருக்கின்றார். உன்னுடைய பகைவர் எல்லாரைப் பார்க்கிலும், அவருடைய வல்லமை பெரிது. பவுல் கேட்டதைப் போன்று, “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாய் இருப்பவன் யார்?” (ரோம.8:31), நாமும் கேட்டுக் கொள்வோம். உண்மையிலேயே யார் நமக்கு எதிராய் நிற்கக் கூடும்? ஒருவரும் இல்லை. தேவனோடு கூட, உன்னுடைய பிரச்சனையை நோக்கி ஓடு.