பிரசித்திப் பெற்ற இசையமைப்பாளரான கெஸப்பி வெர்டி (1813-1901) இளைஞனாக இருந்த போது, எப்படியாகிலும் அங்கீகாரம் பெற்றுவிட வேண்டும் என்ற தணியாத தாகம், அவரை வெற்றிக்கு கொண்டு சென்றது. வாரன் வியர்ஸ்பீ அவரைக்குறித்து எழுதும் போது,”வெர்டி முதல் முறையாக இசை நிகழ்ச்சி நடத்திய போது, அந்த இசையமைப்பாளர் திரை மறைவில் நின்று கொண்டு, பார்வையாளர்களில் ஒருவரின் முகத்தையே கண்காணித்துக் கொண்டிருந்தார். அவர் தான் மிகப் பெரிய இசையமைப்பாளரான ரோசினி. வெர்டியைப் பொருத்தமட்டில், அரங்கத்தில் இருந்தவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் அல்லது ஊளையிடுகிறார்கள் என்பது பிரச்சனையல்ல, அவர் விரும்பியதெல்லாம், மிகப் பெரிய இசையமைப்பாளரின் முகத்தில், அங்கீகரிக்கும் ஒரு புன்னகையையே” என்றார்.

யாருடைய அங்கீகாரத்தை நாம் தேடுகிறோம் ? பெற்றோருடையதையா ? எஜமானுடையதையா? நாம் அன்பு செலுத்துபவரிடமிருந்தா? பவுலிடம் இதற்கு ஒரு பதில் இருந்தது. “சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத் தக்கதாய்,தேவன் எங்களை உத்தமரென்று எண்ணியபடியே, நாங்கள், மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்” (1 தெச. 2:4) என்றார்.

தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறல் என்பது என்ன? இதற்கு அடிப்படை தேவை இரண்டுள்ளது. மற்றவர்களின் பாராட்டைப் பெற வேண்டும் என்ற ஆவலிலிருந்து விடுபடல், நம்மை நேசித்து, நமக்காகத் தம்மையே கொடுத்த கிறிஸ்துவைப் போல நம்மை மாற்றும் படி, பரிசுத்த ஆவியானவரிடம் நம்மை ஒப்புக்கொடுத்தல். தேவனுடைய நோக்கத்தை நம்மில்,நம் மூலமாக முழுமையாக நிறைவேற்ற நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, மிக முக்கியமானவரின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வோம், ஒரு நாள், அவருடைய முகத்தில் நம்மை அங்கீகரிக்கும் புன்னகையைக் காண்போம்.