நடு இரவில் விழித்துக் கொண்டேன். நான் அரைமணி நேரம் கூட தூங்கியிருக்க மாட்டேன். எனக்கு தூக்கம் வருவதாகவும் இல்லை. என்னுடைய சிநேகிதியின் கணவன் மருத்துவ மனையில் படுத்திருக்கிறார், அவரை பயப்படுத்தும் செய்தி வந்தது,” கேன்சர் மீண்டும் வந்துவிட்டது, அது, மூளையையும், முதுகுத் தண்டையும் பாதித்துள்ளது” என்பதுதான் அந்த செய்தி. என்னுடைய சிநேகிதியின் நிலை, என்னை முற்றிலும் பாதித்தது. எத்தனை பெரிய சுமை! நான் விழித்திருந்து ஜெபிக்க ஆரம்பித்தேன், என் ஆத்துமாவில் சற்று ஆறுதல் அடைந்தேன். நான் அவர்களுக்காக அழகாக பாரம் கொண்டேன் என்றே சொல்ல வேண்டும். இது எப்படி நடந்தது?

மத்தேயு 11:28-30 வசனங்களில், இயேசு சோர்வடைந்த நம்முடைய ஆத்துமாவிற்கு இளைப்பாறுதலை வாக்களிக்கின்றார். இது சற்று வித்தியாசமானது. நாம் குனிந்து, அவருடைய நுகத்தை ஏற்றுக் கொண்டு, அவருடைய பாரத்தை நாம் அரவணைக்கும் போது, இந்த இளைப்பாறுதல் கிடைக்கிறது (வச. 30). இதைத் தெளிவு படுத்துகின்றது. “என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது “என்றார் இயேசு. நம் முதுகிலுள்ள பாரச் சுமையை இயேசு தூக்கிக் கொள்ள நாம் அனுமதித்து விட்டு, அவருடைய நுகத்தில் நம்முடைய தோளைக் கொடுக்கும் போது, அவரோடு இணைந்து, அவர் தருகின்ற சுமையைச் சுமக்கிறவர்களாகின்றோம், அவருடைய நுகத்திற்கு நாம் குனியும் போது, நாம் அவருடைய பாடுகளையும் பகிர்ந்து கொள்கின்றோம், அதன் மூலம் அவர் தரும் ஆறுதலிலும் பங்கடைகிறோம் (2 கொரி. 1:5).

என்னுடைய சிநேகிதியின் மீது கொண்டுள்ள கரிசனை, பெரிய பாரமாயிருக்கிறது. ஆனாலும், அதனை ஜெபத்தின் மூலம் தேவனிடம் கொண்டு வரும் படி, தேவன் தயை புரிந்ததால், நான் நன்றியுள்ளவளாயிருக்கிறேன். கொஞ்ச கொஞ்சமாக என் கவலை தணிந்து, நான் தூங்கி விட்டேன். காலை எழுந்த போது, அந்த அழகிய பாரம், இலகுவான நுகத்தின் அடியில் இலேசான சுமையாக மாறியது, இயேசுவோடு நடக்க ஆரம்பித்தேன்.