2014 ஆம் ஆண்டு ஒன்பது வயது நிரம்பிய வில்லி, அவர்களுடைய வீட்டு முற்றத்திலிருந்து கடத்தப்பட்டான். அவன் தனக்கு விருப்பமான “எல்லாத் துதியும்” என்ற சுவிசேஷகத் துதி பாடல் ஒன்றினைத் திரும்பத் திரும்ப பாடிக் கொண்டேயிருந்தான். அந்த மூன்று மணி நேர கடும் போராட்டத்தில், வில்லியை அமைதியாக இருக்கும்படி கடத்தல்காரர்கள் விடுத்த கட்டளையையும் பொருட்படுத்தாமல் அவன் பாடிக் கொண்டேயிருந்தான். கடைசியாக, கடத்தல்காரர்கள் வில்லியை காரைவிட்டு வெளியேற்றினர். பின்பு, வில்லி அந்த எதிர்பாராத அநுபவத்தை விளக்கிய போது, அவன் தன் பயத்தின் மத்தியிலும் விசுவாசத்தைக் கைவிடாமல் பாடியதைக் கேட்ட கடத்தல் காரர்கள் குழப்பமடைந்தனர், என்றான்.

பயங்கரச் சூழலில் வில்லி செயல்பட்ட விதம், பவுலும் சீலாவும் பகிர்ந்து கொண்ட ஓர் அநுபவத்தைப் போலுள்ளது. வாரினால் அடிக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்ட பின்பு அவர்கள், “ஜெபம் பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள். காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும் படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டன; எல்லாருடைய கட்டுகளும் கழன்று போயிற்று” (அப். 16:25-26).

இந்த அதிசயமான வல்லமையின் வெளிப்பாட்டைக் கண்ட சிறைச் சாலைக்காரன் பவுலும் சீலாவும் ஆராதித்த தேவனாகிய கர்த்தரை விசுவாசித்தான். அவனோடு, அவன் வீட்டாரனைவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள் (வச. 27-34) அன்று இரவு துதியின் வழியாக ஆவிக்குரிய கட்டுகளும், மாம்சக் கட்டுகளும் தெறிப்புண்டன.

பவுல், சீலா மற்றும் வில்லியின் அநுபவங்களைப் போன்று நமக்கு கண்களால் காணக்கூடிய அநுபவம் இல்லாமலிருக்கலாம். ஆனால் அவருடைய ஜனங்களின் துதிக்கு அவர் செவி கொடுப்பார் என்பதைத் தெரிந்து கொள்வோம். அவர் அசையும் போது, சங்கிலிகள் தெறிப்புண்டு போம்.