கவிஞர் கார்ல் சான்ட்பெர்க், முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனைப் பற்றி, “மனித குலத்தின் வரலாற்றில் இரும்பின் உறுதியையும், பட்டின் மென்மையையும் ஒருங்கே பெற்ற ஒரு மனிதன், இருதயத்திலும், மனதிலும் பயங்கரமான புயலையும், சொல்லமுடியாத அமைதியையும் ஒருங்கே பெற்றிருக்கின்றார்” என்றார். விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களிடம் தன் அரச அதிகாரத்தை லின்கன் சம நிலையில் பயன் படுத்தினார் என்பதை “இரும்பும் பட்டும்” என்பதால் விளக்குகின்றார். 

சரித்திரத்தில் ஒரேயொருமனிதன் தான் வலிமையையும், மென்மையையும் மற்றும் அதிகாரத்தையும் இரக்கத்தையும் சமமாக பயன்படுத்தினார். அவர் தான் இயேசு கிறிஸ்து. யோவான் 8 ஆம் அதிகாரத்தில், மதத்தலைவர்கள் விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை கல்லெறிந்து கொல்லும்படி கொண்டு வந்த போது, இயேசு அவர்களிடம் வலிமையையும், மென்மையையும் காண்பித்தார். இரத்த வெறி கொண்ட ஒரு கூட்டத்தினரின் கோரிக்கையை வலிமையாக எதிர் நோக்கினார். குற்றம் கண்டு பிடிக்கும் அவர்களின் கண்களை, அவர்களுக்கு நேராகவே திருப்பினார். அவர் அந்த கூட்டத்தினரிடம், “உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக்கடவன்” (வச. 7) என்றார். பின்னர், இயேசு, தனது மென்மையான இரக்கத்தை அப்பெண்ணிடம் காட்டி, “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனி பாவம் செய்யாதே” என்றார் (வச. 11).

இயேசு காட்டிய வலிமையையும், மென்மையையும் நாமும் பிறரிடம் காட்டும் போது தான், தேவன் நம்மையும் இயேசுவைப் போன்று மாற்றுகின்றார் என்பதை வெளிப்படுத்த முடியும். மென்மையான இரக்கத்தையும், வலிமையான நீதியையும் நாம் செயல் படுத்திக்காட்டும் போது தான் தேவனுடைய இருதயத்தை இவ்வுலகிற்கு காண்பிக்க முடியும்.