“சிகாகோ கப்ஸ்” பேஸ்பால் அணியானது ஒரு நூற்றாண்டுக்கு பிறகு முதன்முதலாக 2016ல் தான்  உலகத்தொடரை வென்றது. அதன் வெற்றிப்பேரணியில் 50 லட்சம் பேர் கலந்துகொண்டார்கள். உலக சாம்பியன்களைக் கொண்டாடும் வகையில் நகரில் ஊர்வலமாகச் செல்லத் திரண்டார்கள்.

வெற்றிப் பேரணிகள் நவீனக் காலக் கண்டுபிடிப்புகள் கிடையாது. ரோமர்கள் போரில் வெற்றிபெறும்போது வெற்றி பேரணி நடத்துவார்கள், பண்டைய காலத்தில் அது பிரபலம். மக்கள் கூட்டத்தில் மிதந்தபடி தன்னுடைய படைகளோடும் சிறைப்பிடித்து வந்தவர்களோடும் தளபதிகள் பேரணியாகச் செல்வார்கள்.

“கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி கிறுஸ்துவுக்குள்” சிறைப்பட்டவர்களாக நடத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று இந்தப் பேரணியை மனதில்வைத்துத்தான் கொரிந்து சபைக்கு பவுல் எழுதியிருக்கவேண்டும் (2 கொரி. 2:14). கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் இங்கு சிறைப்பட்டவர்களாகக் காட்டப்படுவது சுவாரஸ்யமானது. கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் அந்தப் பேரணியில் கட்டாயமாகக் கலந்துகொள்ள நிர்பந்திக்கப்படாமல், உயிர்த்தெழுந்து, வெற்றிபெற்ற கிறிஸ்துவின் தலைமையின்கீழ் மனதாரப் பங்குபெறுகிறவர்களாகக் காணப்படுவார்கள். கிறிஸ்து தாம் வெற்றிபெற்றதன்மூலம் தம்முடைய ராஜ்யத்தைக் கட்டி எழுப்புவதையும், நரகத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளப் போவதில்லை என்பதையும் கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டாடுகிறோம்.

சிலுவையில் இயேசு வெற்றிபெற்றார், அதனால் விசுவாசிகளுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது என்று அறிவிக்கும்போது, “அவரை அறிகிற அறிவின் வாசனையை” எங்கும் பரவச்செய்வதற்கு நாம் உதவுகிறோம். (2 கொரி. 2:14). இந்த வாசனை சிலருக்கு இரட்சிப்பின் நிச்சயத்தை உறுதிப்படுத்துகிற நற்வாசனையாக இருக்கலாம் அல்லது அவர்களுடைய தோல்விக்கான வாசனையாக இருக்கலாம். எப்படியிருந்தாலும், கண்ணுக்குப் புலப்படாத இந்த வல்லமையான வாசனையானது நாம் செல்கிற இடங்களிளெல்லாம் நுகரப்படும்.

கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள், அவர் வெற்றியோடு உயிர்த்தெழுந்ததை அறிவிப்பார்கள், அந்த வெற்றிதான் உலகத்திற்கு இரட்சிப்பைப் பெற்றுத்தந்துள்ளது.