லாஸ் ஏஞ்சல்ஸ் பட்டணத்தின் தெருக்களின் வழியே, ஒரு வீடற்ற மனிதன், போதைக்கு அடிமையாகி போராடிக் கொண்டிருந்தபோது, ஒரு “நள்ளிரவு சேவைமையத்” திற்குச் சென்று உதவி கேட்டான். இவ்வாறு பிரையனின் மீட்புக்கு நேரான நீண்டபயணம் துவங்கியது.

இந்த செயலின் போது, இசைமீது தனக்கிருந்த ஆவலை பிரையன் மீண்டும் கண்டு கொண்டான். தெருக்களில் வாழும் இசை மீட்டும் இசைக் கலைஞர்களின் குழுவில் சேர்ந்தான். அவர்கள் பிரையனிடம் ஹன்டல் என்பவர் எழுதிய ‘மேசியா’ என்ற பாடலைத் தனிப்பாடலாக பாடுமாறு கேட்டுக் கொண்டார்கள். அந்தப் பாடல் “இருளில் நடக்கிற ஜனங்கள்” என ஆரம்பமாகும். இஸ்ரவேல் ஜனங்களின் சரித்திரத்தில் அவர்கள் ஓர் இருண்ட காலத்தைச் சந்தித்த போது, ஏசாயா தீர்க்கதரிசி இந்த வார்த்தைகளை எழுதினார். அவர், “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசா. 9:2) என்ற வார்த்தைகளை பாடினார். நியூயார்க் பட்டணத்திலுள்ள ஒரு பத்திரிக்கையிலே ஓர் இசைக் கலைஞனான பிரையனின் பாடலைக் குறித்து அந்தப் பாடலின் வரிகள் அவனுடைய சொந்த வாழ்க்கையிலிருந்தே எடுக்கப்பட்டவை போலிருந்தன” என விமர்சிக்கப்பட்டிருந்தது.

சுவிசேஷத்தை எழுதிய மத்தேயுவும் இதே பகுதியைக் குறிப்பிட்டுள்ளார். ஒருவரையொருவர் ஏமாற்றி வாழும் வாழ்வின் மத்தியிலிருந்து இயேசுவினால் அழைக்கப்பட்ட மத்தேயு, ஏசாயாவின் இந்த

தீர்க்கதரிசன வார்த்தைகள் இயேசுவின் மூலம் நிறைவேற்றப்பட்டதை விளக்குகின்றார். “யோர்தானின் அக்கரையிலிருந்த” ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகளை இயேசு “புறஜாதிகளின் கலிலேயாவுக்கு” இயேசு எப்படிக் கொண்டு வந்தார் என்று மத்தேயு விளக்குகின்றார் (மத். 4:13-15).

ராயனின் வரிவசூல் குண்டர்களில் ஒருவனான மத்தேயு (மத். 9:9), போதைக்கு அடிமையாகி தெருவில் திரிந்த பிரையன் அல்லது நம்மைப் போன்றவர்கள், ஒளிக்கும் இருளுக்குமுள்ள வித்தியாசத்தை நம் வாழ்வில் காட்ட ஒரு தருணம் கிடைக்குமென்று யார் நினைத்திருக்கக்கூடும்.