நான் எனது ஐம்பத்திநான்காம் வயதில் மில்வாக்கீ மாரத்;தான் ஓட்டத்தில் இரண்டு இலக்குகளோடு பங்கெடுத்தேன். ஒன்று அந்த ஓட்டத்தை முடிக்க வேண்டும் இரண்டாவது, அதனை ஐந்து மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும். ஒருவேளை நான் முதல் 13.1 மைல்கள் தூரத்தைக் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் போலவே இரண்டாம் பகுதியும் அமையுமாயின், நான் எடுத்துக்கொள்ளும் நேரம் மிகவும் வியப்பூட்டுவதாக இருக்கும். ஆனால், இந்த ஓட்டம் மிகவும் சோர்வடையச் செய்யும் ஒன்று இரண்டாம் பகுதியின் போது தேவையான பெலனைப் பெற்றுக் கொள்ளவே முடியவில்லை. நான் எல்லைக் கோட்டினை எட்டும் போது, என்னுடைய நிலையான ஓட்டம் தளர்ந்து, வேதனை மிகுந்த நடையாக மாறிவிடும்.

ஓடும் ஓட்டத்தில் மட்டும்தான் இரண்டாம் பகுதிக்கு பெலப்படுத்தும் ஆற்றல் தேவையா? இல்லை. அது வாழ்க்கையின் ஓட்டத்திற்கும் தான். சோர்வினால் தளர்ந்த மக்கள் தேவையான சகிப்புத் தன்மையைப் பெற்றுக்கொள்ளவும் பெலனற்று சோர்ந்த மக்களுக்கு ஆறுதலையும், ஊக்கத்தையும் கொடுக்கவும் தேவனுடைய உதவி தேவை. ஏசாயா 40:27-31ல் காணப்படுகின்ற அழகிய தீர்க்கதரிசன வார்த்தைகள் எக்காலத்திற்கும் பொருத்தமான வார்த்தைகள். அது வெறுப்படைந்து, வலுவிழந்த மக்களிடம் தேவன் அவர்களை விட்டு விடவுமில்லை, அவர்கள் மீது கரிசனையோடிருக்கிறாரெனக் கூறுகின்றது (வச. 27) நம்முடைய ஏக்கங்கள் தேவனுடைய பார்வையைவிட்டு தவறிவிடவில்லை. சோர்ந்து போகிறவர்களுக்கு அவர் பெலன் கொடுக்கின்றார், ஆறுதல் அளிக்கின்றார். தேவனுடைய எல்லையில்லாத வல்லமையும், ஆழ்ந்த அறிவும் நம்மைத் தேற்ற உறுதியளிக்கின்றன (வச. 28).

இரண்டாம் நிலைக்குத் தேவையான ஆற்றலைக் குறிக்கும் வசனங்கள் 29-31. இந்த வார்த்தைகள் நமக்குத் தரப்பட்டவை. நாம் நம் குடும்பத்தினரை கவனிக்கும் பொறுப்பிலுள்ளோமா? பொருளாதாரத் தேவையாலும், உடல்ரீதியானத் தேவையாலும் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கின்றோமா? உறவினர்களால் ஏற்பட்ட மன அழுத்தமா? ஆவிக்குரிய போராட்டங்களா? வேதவசனங்களை தியானம் செய்து, ஜெபத்தில் அவருடைய பதிலுக்காக காத்திருக்கின்றவர்களுக்கு அவருடைய பெலன் கொடுக்கப்படும்படி காத்திருக்கின்றது.