‘‘இல்லை! இல்லை! இல்லை!” நான் கத்தினேன். அது ஒன்றும் உதவவில்லை. சிறிதளவும் உதவவில்லை. தண்ணீரை அடைப்பதற்கு நான் எடுத்த புத்திசாலித்தனமான தீர்வு வேலை செய்யவில்லை. நான் என்ன நினைத்தேனோ அதற்கு நேர் மாறாகவே நடந்தது. நான் அந்த கைப்பிடியை கீழே தள்ளிய போதே என் தவறைத் தெரிந்து கொண்டேன். தண்ணீர் நிரம்பி வழிய நான் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றேன்.

எத்தனை நேரம் நம் குழந்தைகள் பாலை ஊற்றும்போது தவறுதலாக எல்லா இடங்களிலும் பாலைக் கொட்டியிருக்கின்றனர். எத்தனை முறை இரண்டு லிட்டர் சோடா பாட்டில் பெட்டிக்குள் சுழன்று வெடித்து விபரீத விளைவுகளை ஏற்படத்தியிருக்கின்றது.

திரவங்களைக் கொட்டுதல் நல்ல காரியமல்ல. ஆனால் இதிலும் ஒரு விதிவிலக்கு உள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல் தேவனுடைய பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு நிரம்பி வழியும் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும்படி சொல்கின்றார் (ரோம. 15:13). நாம் எப்பொழுதும் மகிழ்ச்சி, சமாதானம், மற்றும் நம்பிக்கையினால் நிரம்பி வழியும்படி நிரப்பப்பட விரும்புவோம். பரலோகத் தந்தையின் மீதுள்ள நம்பிக்கையாலும், ஞானத்தாலும் மிக அதிகமாக நிரப்பப்பட்டு நிரம்பி வழியும்படிச் செய்வோம். அதனை தேவன் நம் வாழ்வின் வெளிச்சமான அழகிய காலங்களில் அப்படிச் செய்வார். நம் வாழ்க்கையாகிய கோப்பை சிறிய அசைவிற்கும் நிரம்பி வழியும். எப்படியாயினும் நம் வாழ்வில் மேலோங்கி நிற்கும் நம்பிக்கை நிரம்பி வழிந்து நம்மைச் சுற்றியுள்ளவர்களை நனைக்கும்படி இருக்கட்டும்.