2015 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதத்தில் என்னுடைய வீட்டிலிருந்து இரண்டு மணி நேர பயணத் தொலைவிலுள்ள ஒரு பல்கலைகழகத்திற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தேன். என்னுடைய பட்டமளிப்பு முடிந்து மீண்டும் நான் வீட்டிற்கு வர இயலாததென உணர்ந்தேன். என் சிந்தனைகள் வட்டமிட்டன. எப்படி வீட்டை விட்டுச் செல்வது? என்னுடைய குடும்பம்? என்னுடைய தேவாலயம்? ஒரு வேளை தேவன் என்னை வேறொரு மாநிலம் அல்லது தேசத்திற்கு அழைத்தால் என்னவாகும்? என என் சிந்தனையில் ஓடியது.

மோசேயிடம் தேவன் ‘‘நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா” என்று சொன்னபோது மோசே பயந்தான் (யாத். 3:10). நானும் மிகவும் பயந்தேன். நான் என்னுடைய வசதி எல்லையை விட்டுச் செல்ல விரும்பவில்லை. ஆனால் மோசே கீழ்ப்படிந்து தேவனைப் பின்பற்றினான். ஆனாலும் அதற்கு முன் தேவனை வினாவவும், வேறொருவரை தனக்குப் பதிலாக அனுப்பும்படியும் கேட்டபின் தான், தேவனுக்குக் கீழ்ப்படிந்தான் (வச. 11-13; 4:13).

மோசேயின் எடுத்துக்காட்டிலிருந்து, நமக்கொரு தெளிவான அழைப்பு இருக்கும் பொழுது நாம் எதைச் செய்யக் கூடாதென்பதைக் கற்றுக்கொள்கிறோம். ஆனால் நாம் சீடர்களைப் போல இருக்க முயற்சிப்போம். இயேசு அவர்களை அழைத்த போது, அவர்கள் யாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள் (மத். 4:20-22; லூக். 5:28). பயம் வருவது இயல்புதான். ஆனால் தேவத் திட்டத்தை நம்பலாம்.

வீட்டை விட்டு அதிகத் தொலைவில் செல்வதென்பது கடினமாகத்தானிருந்தது. ஆனால் நான் தொடர்ந்து தேவனைத் தேட ஆரம்பித்தபோது, அவர் எனக்கு கதவுகளைத் திறந்தார். அது, நான் தேவன் குறித்த இடத்தில்தான் இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்தியது.

வசதி எல்லையிலிருந்து நம்மை வெளியேற்றி, வழி நடத்தப்படும்போது நாம் மோசேயைப் போன்று தயக்கத்தோடு செல்லலாம் அல்லது சீடர்களைப் போன்று மனப்பூர்வமாகச் செல்லலாம். சில வேளைகளில் நம்முடைய வசதி வாழ்க்கையை விட்டு சில நூறு மைல்கள் அல்லது ஆயிரம் மைல்கள் கூட செல்ல நேரலாம். அது எத்தனை கடினமானதாயினும் தேவனைப் பின்பற்றுவது மதிப்பு மிக்கது.