பதினெட்டு வயது வாலிபன் ஒருவன் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றதினால், வேறு மதப் பின்னணியைச் சேர்ந்த அவனுடைய குடும்பத்தினர் அவனை விரட்டிவிட்டார்கள். இருப்பினும், கிறிஸ்தவ சமுதாயம் அவனை வரவேற்று அவனுடைய படிப்பைத் தொடர்வதற்கு அவனுக்கு உற்சாகமளித்தது, அவனுடைய பொருளாதார தேவைகளையும் சந்தித்தது. பின்நாட்களில், அவனுடைய சாட்சி ஒரு பத்திரிக்கையிலே வந்ததால், அவன் கூடுதலாய் உபத்திரவப்பட்டான்.

ஆனாலும், அந்த வாலிபன் தன் குடும்பத்தினரை கவனியாமலில்லை. உடன்பிறந்தவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அவன் குடும்ப விஷயங்களில் தலையிடக்கூடாது என்று சட்டம்போட்டாலும், அவன் அப்பாவை பார்த்துப்பேச தவறியதில்லை. அப்பா நோயுற்றபோது, உறவினரின் அவமதிப்பை பொருட்படுத்தாமல், அவரை கவனித்துக் கொண்டான், விரைவில் குணமடையவும் ஜெபித்தான். அப்பா பூரண குணமடைந்ததும், அந்த மகன்மேல் குடும்பத்தார் அக்கறை காட்டத் தொடங்கினர். காலப்போக்கில், அவனுடைய அன்பான சாட்சி அவர்களுடைய உள்ளத்தை உருக்க ஆரம்பித்தது – குடும்பத்தில் சிலர் இயேசுவைப் பற்றி அறிந்துகொள்ளவும் விரும்பினர்.

கிறிஸ்துவை பின்பற்றவேண்டும் என்று நாம் எடுக்கின்ற தீர்மானம் நமக்கு சங்கடங்களை கொண்டுவரலாம். “தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும். என பேதுரு எழுதியிருக்கிறார்.,
(1 பேது. 2:19). நம்முடைய விசுவாசத்தின் காரணமாக பேதுரு கஷ்டங்களையும், பாடுகளையும் அனுபவித்திடும்போது, “…கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார் (வச. 21) என்பதினாலேயே அப்படி செய்கிறோம்.

மற்றவர்கள் இயேசுவை அவமதித்தபோதும், “அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
(வச. 23). நம்முடைய பாடுகளில் இயேசுவே நமக்கு மாதிரியாக இருக்கிறார். பாடுகளில் பெலனடைய நாம் இயேசுவை அண்டலாம்.