கிழக்காசிய விளையாட்டுகளின் மாரத்தான் போட்டியில் சிங்கப்பூர் வீரர் ஆஷ்லி லூயி எல்லோரையும் முந்திக்கொண்டு இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார். ஆனால், ஏதோ தவறு நடந்துவிட்டதாக உணர்ந்த அவர் தனக்கு முன் இருந்த வீரர்கள் தவறான திருப்பத்தை எடுத்ததால் பின்தங்கியதை உணர்ந்தார். அவர்களுடைய பிழையை தனக்கு சாதகமாக்கிகொண்டு ஆஷ்லி தொடர்ந்திருக்கலாம், ஆனாலும், அவருக்குள் காணப்பட்ட போட்டி நேர்மை மனப்பான்மை அப்படி வெல்வது ஒரு உண்மையான வெற்றியாய் இராது என்று உணர்த்திற்று. மற்றவர்களைவிட வேகமாய் ஓடி ஜெயிக்கவேண்டுமேயன்றி மற்றவர்களின் பிழையின் காரணமாக ஜெயிக்கக்கூடாது என்று நினைத்தார். தனக்குள் எழுந்த இவ்வுணர்வின் நிமித்தமாக தன்னுடைய ஓட்டத்தின் வேகத்தை சற்றே குறைத்து பின்னே வருபவர்கள் இணைந்துகொள்ள இடங்கொடுத்தார்.

பந்தயத்தின் முடிவில் தோல்வியை சந்தித்த ஆஷ்லி பதக்க வாய்ப்பை இழந்தாலும். தன் நாட்டு மக்களின் உள்ளத்தை வென்றார். அவருடைய நேர்மையுணர்வை பாராட்டி அவருக்கு ஒரு சர்வதேச விருதும் வழங்கப்பட்டது. கிறிஸ்தவன் என்பதற்கு இவருடைய ஒரு செயல் ஒரு சான்றாக அமைந்ததோடு, “இவரால் எப்படி இதைச் செய்யமுடிந்தது?” என்ற கேள்வியையும் அநேகருடைய மனதில் எழுப்பியிருக்கும்.

ஆஷ்லியின் இச்செயல் என்னுடைய நம்பிக்கையை, கிரியைகளின் மூலமாக வெளிப்படுத்த எனக்கு ஒரு சவாலாக அமைகின்றது. நல்லெண்ணத்துடன் அன்பையும் மன்னித்தலையும் வெளிப்படுத்தச் செய்யப்படும் சின்னசின்ன காரியங்களும் தேவனை மகிமைப்படுத்தும். இதனைத்தான் பவுல் எளியநடையில் உரைக்கிறார்: “…உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக (தீத்து 2:8).

பிறருக்கு நாம் செய்யும் நன்மையான கிரியைகள், ஆவியானவர் நமக்குள் இருப்பதால் நம்மால் வேறுபட்டு வாழமுடியும் என்பதை, உலகிற்கு வெளிப்படுத்தும். அவபக்தியையும் லெளகீக இச்சைகளையும் வெறுத்து, மக்களை தேவன்பால் திருப்பக்கூடிய ஒரு உத்தமமான வாழ்க்கை வாழ்ந்திட தேவன் நமக்கு கிருபையளிப்பார்”