நான் என்ன செய்தேன்? இது என் வாழ்வை மிகவும் களிகூரச் செய்த நேரமாயிருந்திருக்க வேண்டும். அதிலும் நான் தனிமையில் தள்ளப்பட்ட நேரம், என்னுடைய கல்லூரி படிப்பிற்குப் பின்னர் எனக்கு கிடைத்த முதல் வேலை. நான் வளர்ந்த பட்டணத்திலிருந்து சில நூறு மைல்களுக்கப்பால் உள்ள ஓர் இடத்தில் கிடைத்தது. ஆனால் அந்த முதல் அடியின் சுகம் சீக்கிரத்தில் மறைந்தது. எனக்கு ஒரு சிறிய தங்கும் இடம் கிடைத்தது. அதில் இருக்கைகள் மற்றும் படுக்கைகள் இல்லை. அந்தப் பட்டணம் நான் இதற்கு முன் அறியாத இடம். அங்கு யாரையும் எனக்குத் தெரியாது. அந்த வேலை எனக்கு ஆர்வமளிப்பதாக இருந்தும், தனிமை என்னை மிகவும் வாட்டியது.

ஓர் இரவில் நான் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தேன். நான் என்னுடைய வேதாகமத்தைத் திறந்தேன். சங்கீதம் 16ல் நிலைத்து விட்டேன். அதில் வசனம் 11ல் தேவனுடைய சமூகத்தில் பரிபூரண ஆனந்தம் உண்டு எனக் கூறுகிறது. நான், தேவனே இந்த வேலை எனக்குச் சரியானது தான். ஆனால் நான் தனிமையை உணருகிறேன். தயவு கூர்ந்து நான் உம்முடைய சமூகத்தை உணரும்படிச் செய்யும் என ஜெபித்தேன். நான் இந்த வேண்டுதலை வெவ்வேறு வகைகளில் சில வாரங்களாகச் செய்தேன். சில இரவுகள் கடந்த போது என்னுடைய தனிமை உணர்வு சற்று தணிந்தது. நான் தேவனுடைய பிரசன்னத்தை ஆழ்ந்து அனுபவிக்க ஆரம்பித்தேன். சில இரவுகளில் தனிமையாகப் பிரிக்கப்பட்ட வேதனையை இன்னும் உணர்கிறேன்.

நான் இந்த வார்த்தையை மீண்டும் வாசிக்கும் போது, ஒவ்வொரு இரவும் என் இருதயம் இந்த வசனத்தில் நிலைத்து விடும். தேவன் படிப்படியாக என் நம்பிக்கையை ஆழப்படுத்தினார். அவருடைய உண்மையை, இதற்கு முன் அனுபவியாத விதத்தில் உணர்ந்தேன். என்னுடைய வேலை, என்னுடைய இருதயத்தை நான் அவரிடம் ஊற்றும்படியாக கொடுக்கப்பட்ட வேலை என்பதைக் கற்றுக் கொண்டேன். அவருடைய வாக்கின் மீது நம்பிக்கை வைத்து, அவருடைய ஆவியில் என்னை நிரப்பும்படி, நான் பொறுமையாக அவருடைய செயலுக்காகக் காத்திருக்கின்றேன்.