சிங்கப்பூர் தீவில் (இருபத்தைந்து மைல் நீளமும், பதினைந்து மைல் அகலமும் கொண்டது) மிகவும் அரிதான விசாலமான வெளியில் அமையப் பெற்ற ஒரு தேவாலயத்தில் நான் ஆராதித்து வருகிறேன். சில நாட்களுக்கு முன்பு, எங்கள் நாட்டில் வந்து பணி புரியும் வெளி நாட்டினர் ஒவ்வொரு ஞாயிறும் ஆலய வளாகத்தில் வந்து கூடுவதை வழக்கமாக்கியுள்ளனர். எங்களில் சிலர் இந்த பார்வையாளர்கள் விட்டுச் செல்லும் குப்பைகளால் எரிச்சலடைந்து, கூச்சலிட்டனர். வேறு சிலர், அந்த ஆலய வளாகத்தை விட்டுச் செல்லாமல் இருந்து, இது நம்முடைய விருந்தோம்பலை அந்நிய கூட்டத்தினருக்குக் காட்டக் கூடிய ஒரு தெய்வீக வாய்ப்பாகக் கருதினர்.

இஸ்ரவேலரும் இத்தகைய ஒரு பிரச்சனையை அவர்கள் காலத்தில் சந்தித்தனர். அவர்கள் தங்கள் புதிய தேசத்தில் குடியமர்ந்த போது தங்கள் அருகிலிருக்கும் அந்நியரோடு எப்படி பழகுவது என்பதான ஒரு பிரச்சனை எழுந்தது. ஆனால் தேவன் அவர்களிடம் உன்னிடத்தில் வாசம் பண்ணுகிற அந்நியனைச் சுதேசி போல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறது போல அவனிலும் அன்புகூருவீர்களாக (லேவி. 19:34) என்று கட்டளையாகச் சொன்னார். தேவன் அவர்களுக்குக் கொடுத்த அநேக சட்டங்களில், அந்நியரைக் குறித்து அவர்களை தவறாக நடத்தவோ அல்லது ஒடுக்கவோ கூடாது என்றும் அவர்களை நேசித்து உதவுவீர்களாக என்றும் சொல்லுகிறார் (யாத். 23:9 ; உபா. 10:19). நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இயேசுவும் இதனையே செய்யும்படி கட்டளையாகக் கொடுக்கின்றார். உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோல, பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று கட்டளையிட்டார் (மாற். 12:31).

நாம் இப்புவியில் சிலகாலம் தங்கிச் செல்லும் பிரயாணிகள் என்பதை நினைத்து, தேவனின் அன்பு இருதயத்தைப் போல, பிறரையும் நம்மைப் போல நேசிப்போம். தேவன் நம்மை தம்முடைய சொந்த ஜனங்களாக நேசித்து நடத்துகின்றாரே.