எங்கள் சமூகத்தினரிடையே அகதிகளின் வருகை, எங்கள் பகுதி தேவாலயங்களின் புதிய வளர்ச்சிக்கு வழி வகுத்தது. இந்த வளர்ச்சி சவால்களைக் கொண்டு வந்தது. ஆலய அங்கத்தினர்கள் புதிய நபர்களை எப்படி வரவேற்பது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் புதிய நபர்கள் இவர்கள் அறியாத கலாச்சாரம், புதிய மொழி, மாறுபட்ட ஆராதனை முறைகளை அனுசரிக்க வேண்டியுள்ளது. இந்த மாற்றங்கள் சில விகற்பமான சூழல்களை உருவாக்கும்.

புரிந்து கொள்ளாமையும், ஒத்துழையாமையும் மக்கள் அதிகமுள்ள இடங்களில் காண்கிறோம். அதற்கு ஆலயம் ஒரு விதி விலக்கல்ல. நாம் நம்முடைய மாறுபாடுகளை நல்ல முறையில் கையாளாவிடில், அவைகள் கடினப்பட்டு பிரிவினைகள் உண்டாகிவிடும். நிரந்தர பிரிவினைக்குள்ளாகிவிடுவார்கள்.

எருசலேமிலுள்ள ஆதி திருச்சபை வளர்ந்து வந்த போது ஒரு சர்ச்சை உருவாகி, அது கலாச்சாரம் சார்ந்த தவறான கோடு வழியே வெடித்தது. கிரேக்க மொழி பேசும் யூதர், எபிரேய மொழி பேசும் யூதர்களைக் குற்றப்படுத்தினர். கிரேக்கர்கள் தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லை (அப். 6:1) என்று குற்றம் சாட்டினார்கள். எனவே அப்போஸ்தலர்கள், பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழு பேரை உங்களில் தெரிந்து கொள்ளுங்கள் (வச. 4) என்றனர். அவர்கள் தேர்ந்தெடுத்த ஏழு பேரும் கிரேக்க பெயருடையவர்கள் (வச. 5). இவர்களனைவரும் கிரேக்கர்கள், புறக்கணிக்கப்பட்ட கூட்டத்திலுள்ள உறுப்பினர்கள். அவர்கள் தங்கள் பிரச்சனைகளை நன்கு புரிந்து கொள்வார்கள். அப்போஸ்தலர்கள் ஜெபம் பண்ணி அவர்கள் மேல் கைகளை வைத்தார்கள். தேவ வசனம் விருத்தியடைந்தது. (வச. 6-7).

வளர்ச்சி என்பது சவால்களைப் பகுதியாகக் கொண்டு வரும். ஏனெனில் அங்கு பாரம்பரிய கட்டுகள் உடைக்கப்பட்டு உறவுகள் வளருகின்றன. நாம் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலைத் தேடும்போது நாம் ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் கண்டு கொள்வோம். மேலும் அசாத்தியமான பிரச்சனைகள் வளர்ச்சிக்குகந்த சந்தர்ப்பங்களாக மாற்றப்படும்.