புகழ்ச்சியின் உச்ச நிலையையோ அல்லது தாங்கள் உயிரோடிருக்கும் காலத்திலேயே சாதனைபடைத்த மக்களை தங்கள் காலத்திலேயே சரித்திரம் படைத்தவர்கள் என சொல்வதுண்டு. பேஸ் பால் விளையாட்டினை தொழிலாகக் கொண்ட எனது நண்பர் உலக அளவில் அநேக விளையாட்டு வீரர்களைச் சந்தித்திருக்கிறார். அவர்களில் அநேகர் தங்கள் மனத்தளவில் மட்டும் சரித்திரம் படைக்கின்றனர் என்றார். தங்களைக் குறித்து பெருமை கொண்டவர்களாக இருக்கின்றனர். பெருமை அழிவிற்கு வழி வகுக்கின்றது. பெருமை நம்மைப்பற்றிய கண்ணோட்டத்தைத் திரித்துவிடுகிறது. தாழ்மை உண்மையான கண்ணோட்டத்தைத் தருகிறது.

நீதிமொழிகளை எழுதியவர் அழிவுக்கு முன்னானது அகந்தை. விழுதலுக்கு முன்னானது மன மேட்டிமை (16:18) என்கின்றார். சுய கவுரவம் என்ற கண்ணாடியின் முன் நின்று நம்மைப் பார்க்கும் போது, சிதைந்து போன வடிவத்தைக் காட்டுகிறது. நம்மை உயர்த்தும் போது, அது விழுதலுக்கு வழி வகுக்கிறது.

அகங்காரம் என்ற நச்சுவிற்கு எதிர் மருந்து என்னவெனின், தேவனிடமிருந்து வரும் உண்மையான தாழ்மை. அகங்காரிகளோடே கொள்ளைப் பொருளைப் பங்கிடுவதைப் பார்க்கிலும் சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாய் இருப்பது நலம் (வச. 19).

இயேசுவும் தன்னுடைய சீடர்களுக்கு, உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால் அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே மனுஷக்குமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் (மத். 20:26-28) எனக் கூறினார்.

நம்முடைய சாதனைகளுக்கும் வெற்றிகளுக்கும் பாராட்டுகளைப் பெறுவதில் தவறில்லை. இதில் சவால் என்னவெனில் தன்னைப் பின்பற்றும்படி அழைத்தவரையே நோக்கிக் கவனித்தலே. அவர் கூறுவது நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் (மத். 11:29).