தான் எடுத்த சில தவறான தீர்மானங்களினால், கிட்டா, அயல் நாடொன்றில், ஆறு வருடங்களை சிறையில் கழிக்க நேரிட்டது. அவள் விடுதலையானபோது அவளுக்கு போவதற்கு ஓரிடமும் இல்லை. அவள் தன் வாழ்க்கை முடிந்ததென்று நினைத்தாள். அவள் குடும்பத்தினர் அவள் தன் சொந்த தேசத்திற்கு வருவதற்கு டிக்கெட் எடுக்கத் தேவையான பணத்தை சேகரித்து அனுப்பினர். அதுவரை ஒரு அன்புள்ள தம்பதியர் அவளுக்கு தங்க இடமும் உணவும் கொடுத்து உதவியதால் அவர்களின் அன்பினால் தொடப்பட்டாள். ஆகவே அவர்கள், அவளை நேசித்து அவள் வாழ்வதற்கு அவளுக்கு இரண்டாம் தருணம் கொடுக்க விரும்பும் ஆண்டவரைக்குறித்த நற்செய்தியை சொன்னபோது, கவனமாகக் கேட்டாள்.

கிட்டா வேதாகமத்திலுள்ள விதவை நாகோமியை எனக்கு நினைவுபடுத்தினாள். அந்நிய தேசத்தில் தன் கணவனையும் இரண்டு மகன்களையும் இழந்து, தன் வாழ்க்கை முடிந்ததென்று நினைத்தாள் (ரூத். 1). ஆனால், தேவன் நகோமியை மறக்கவில்லை… தன் மருமகள் ரூத்தின் அன்பினாலும், போவாஸ் எனும் தேவனுக்குப் பயந்த மனிதனின் தயவினாலும் நகோமி தேவனுடைய அன்பைக் கண்டு இரண்டாம் தருணமொன்றைப் பெற்றுக்கொண்டாள் (4:13-17).

அதே தேவன் இன்றும் நம்மேல் கரிசனையுள்ளவராகவே இருக்கிறார். மற்றவர்கள் நம்மேல் அன்புகாட்டும்பொழுதெல்லாம், நாம் தேவனுடைய பிரசன்னத்தை உணர்கிறோம். நமக்கு அதிகம் அறிமுகமில்லாதவர்கள் உதவும்போது தேவனுடைய கிருபையை அறிகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக தேவன் நமக்கு ஒரு புது ஆரம்பத்ததைத்தர விரும்புகிறார். நாமும் நகோமியைப்போல் நமது அனுதின வாழ்க்கையில் தேவனுடைய கரத்தைக் கண்டு, அவருடைய அன்புக்கு முடிவே கிடையாது என்று அறிந்துகொள்ள வேண்டும்.