என் சிறு குழந்தை முதலாவது ஒரு எலுமிச்சைப் பழத்தின் துண்டினை கடிக்கும் போது அவன் மூக்கைக் சுழித்துக் கொண்டு நாக்கை nவிளே தள்ளி, கண்களை இறுக மூடிக் கொண்டு புளிக்குது என்றான்.

நான் இந்த பழத்தின் துண்டினைப் மனதிற்குள் சிரித்துக் கொண்டே குப்பையில் எறிந்து விட எண்ணி அதை எடுக்கப் போனேன். “வேண்டாம்” என சேவியர் வேகமாக சமையலறையிலிருந்து என்னை விட்டுச் சென்று வேண்டும் என்று சொல்லி அந்த புளிக்கும் சுவைத்தான். புளிப்பு அவனுக்குப் பிடித்தது. கடைசியில் பழத்தின் தோல் என்னிடம் கொடுத்துவிட்டு வெளியே போனான். ஏன் வாழ்வின் இனிமையான நொடிகளில் என் சுவை நரம்புகள் பராபட்சத்துடன் செயல்படுகின்றன. என் வாழ்வில் சுவையற்ற நொடிகளை நான் தவிர்ப்பது, கசப்பான சோதனைகளில் வெறுப்பை பகிர்ந்து கொண்ட யோபுவின் மனைவியை நினைவுபடுத்துகிறது.

யோபு கடினமான சுழல்களிலும் கஷ்டங்களிலும் நிச்சயமாக மகிழ்ந்திருக்கவில்லை. ஆனாலும், இருதயத்தைப் பிழிகின்ற சூழல்களிலும் தேவனை மகிமைப்படுத்த முடிந்தது (யோபு 1:1-22). வேதனை மிகுந்த பருக்களால் வாதிக்கப்பட்டபோது, யோபு அந்த வேதனையைச் சகித்தான் (2:7-8) அவனுடைய மனைவி தேவனை விட்டு விடும்படி சொன்ன போதும் (வச. 9) யோவு துன்பங்களிலும், அவமானங்களிலும் தேவன் மீது நம்பிக்கையாயிருந்தான் (வச. 10).

வாழ்வில் புளிப்பான சந்தர்பங்களைத் தவிர்த்துவிட எண்ணுவது இயல்புதான். நாம் காயப்படும் போது தேவனைக் குற்றப்படுத்த தூண்டப்படுகிறோம். ஆனால், தேவன் நம் சோதனைகளில் மூலம் அவர் பேரில் நம்பிக்கையாயிருக்கவும் அவரைச் சார்ந்து வாழவும் அவரிடம் யாவற்றையும் அர்ப்பணிக்கவும், துன்பங்கள் வழியே பாதுகாக்க வல்லவராயிருக்கிறார் என்பதையும் நமக்குக் கற்றுக் தருகிறார். யோபுவைப் போன்று கசப்பான சோதனை வேலைகளை இனிமையான அனுபவமாக எடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும், தேவன் மீதுள்ள நம்பிக்கையை அவை உறுதிப்படுத்த உதவுகின்றன என எடுத்துக் கொள்வோம்.