“நான் உண்மையாகவே பயப்படுகிறேன்” என்று இரக்க உணர்வை தூண்டுகிற ஒரு குறிப்பை பதின் வயதினரான ஒரு பெண் அவளுக்கு நடந்த பரிசோதனையின் முடிவு பற்றி அவளது முக நூலில் பதிவு செய்தாள். அவளது வீட்டிலிருந்து மூன்று மணி நேர பயணத்திற்கு அப்பாலிருந்த ஒரு மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் அவளை பாதித்திருந்த மிக மோசமான வியாதியைப்பற்றி செய்த பல பரிசோதனைகளுக்கான முடிவை எதிர் நோக்கி அவள் கவலையுடன் காத்திருந்தாள். ஒருவேளை மருத்துவமனையில் சேர வேண்டிய சூழ்நிலை வந்துவிடுமோவென்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிற தேவையற்ற நிகழ்வுகள், நமது வாழ்க்கையை அச்சுறுத்தும் பொழுது, வாலிபர்களாக இருந்தாலும் அல்லது வயோதிபவர்களாக இருந்தாலும், யார்தான் பயப்பட மாட்டார்கள்? உதவிக்காக நாம் யாரிடம் போவோம்? இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளில் நமக்கு தைரியத்தை அளிக்க வேத வசனங்கள்மூலமாக நாம் ஆறுதலை பெற முடியும்.

நமது சோதனைகள், துன்பங்கள் மத்தியில் தேவன் நம்மோடு கூட வருகிறார் என்ற உண்மை நமக்கு நம்பிக்கை அளிக்கலாம். “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான்; உனது வலது கையைப்பிடித்து பயப்படாதே, நான் உனக்கு துணை நிற்கிறேன்” என்ற ஏசாயா 41:13 கூறுகிறது.

நாம் நமது கஷ்டங்களை, துன்பங்களை ஜெபத்தின் மூலம் தேவனுக்கு தெரியப்படுத்தும் பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான விவரிக்க இயலாத சமாதானத்தை தேவன் நமக்கு அருளுகிறார் (பிலி. 4:6-7).

நாம் உண்மையிலேயே பயப்படுகிற சூழ்நிலைகளைக் கடந்து வர, தேவனுடைய வாக்கு மாறா பிரசன்னமும், “எல்லாப் புத்திக்கும் மேலான அவரது சமாதானமும்” (வச. 7), நமக்கு அருளப்பட்டு, அப்படிப்பட்ட சூழ்நிலைகளை நாம் நம்பிக்கையுடன் சந்திக்க தேவன் பெலன் அருளுகிறார்.