தேவனை அணிந்து கொள்ளுதல் என்ற புத்தகத்தின் ஆசிரியரான லாரன் வின்னர், நாம் அணிந்துள்ள உடை, நாம் யார் என்பதை அமைதியாக பிறருக்கு அறிவிக்கும் என்று கூறுகிறார். நாம் உடுத்தியிருக்கும் ஆடை, நமது வேலை, நமது சமுதாயம், நமது மனநிலை, நமது உணர்வுகள், மேலும் சமுதாயத்தில் நமது தரம் ஆகியவைகளைக் குறிப்பிட்டுக் அடையாளம் காட்டும். ஒரு விளம்பரத்திற்கான கவர்ச்சி வாசகத்தை உடைய “டீ” ஷர்ட், குறிப்பிட்ட பணிக்குரிய உடை, ஒரு சீருடை அல்லது கிரீஸ் படிந்த ஜீன்ஸ் இவை எவற்றை வெளிப்படுத்துகின்றன என்பதை சிந்தித்துப் பாருங்கள். “ஆடைகளை எப்படியாக ஒருவரது நிலையை அமைதியாக வெளிப்படுத்துகிறதோ அதுபோல, ஒவ்வொரு கிறிஸ்தவனும் வார்த்தைகளே இல்லாமல் அமைதியாக பிறரை ஈர்க்கக் கூடிய முறையில் இயேசுவைப்பற்றிய நற்செய்தியை வெளிப்படுத்த வேண்டும்” என்று லாரன் எழுதியுள்ளார்.
பவுல் அப்போஸ்தலன் கூறுவதுபோல நாமும் வார்த்தைகளினாலன்றி அமைதியாக இயேசுவை வெளிக்காட்டுபவர்களாக இருக்கலாம். “துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேனாமல் இருந்து கர்த்தராகிய இயேசுவை தரித்து கொள்ளுங்கள்” என்று ரோமர் 13:14 கூறுகிறது. அதன் அர்த்தம் என்ன? நாம் கிறிஸ்தவர்களாகும் பொழுது, கிறிஸ்துவின் அடையாளத்தைப் பெறுகிறோம். “விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறோம்” (கலா. 3:26,27) அதுதான் நமது நிலைமை. ஆகிலும் ஒவ்வொருநாளும் நாம் அவரது குணங்களை தரித்துக்கொள்ள வேண்டும். இயேசுவைப் போல வாழ நாம் முயற்சி எடுத்து அவரை அறிகிற அறிவிலும், கீழ்ப்படிதலிலும் வளர்ந்து நம்மை ஒரு காலத்தில் அடிமைப்படுத்தியிருந்த பாவத்தை விட்டுத் திரும்ப வேண்டும்.

நமக்குள் கிரியை செய்கிற பரிசுத்த ஆவியினால், தேவனுடைய வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதாலும், ஜெபத்தாலும், பிற விசுவாசிகளோடு ஐக்கியம் கொள்ளுவதாலும், கிறிஸ்துவுக்குள் நாம் வளர முடிகிறது (யோவா. 14:26). பிறர் நமது வார்த்தைகளையும், செயல்களையும் கவனிக்கும் பொழுது கிறிஸ்துவைப் பற்றி நாம் என்ன கூறுகிறோம்?