முன் ஒரு பொழுதும் இல்லாத அளவிற்கு தற்பொழுது உலகம் மின்னணுவியல் தொழில் நுட்பத்தால் இணைக்கப்பட்டிருந்தாலும், மனிதர்கள் கூடிவரும்பொழுது ஏற்படும் உணர்வை எதினாலும் ஈடுகட்ட இயலாது. நாம் ஒருவரொடொருவர் சிரித்து மகிழும்பொழுது நம்மை அறியாமலேயே மற்ற மனிதரின் முகத்தில் தோன்றும் அசைவுகள்மூலம் அவரது உள் உணர்வுகளை உணர்ந்து கொள்ளுகிறோம். ஒருவரையொருவர் நேசிக்கும் குடும்ப அங்கதினர்களோ அல்லது சினேதிதர்களோ யாராக இருந்தாலும், நேருக்கு நேர் சந்தித்துத் தம் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள்.

தேவன் அவரது ஜனங்களைத் தலைமை தாங்கி நடத்திசெல்வதெற்கென்று தெரிந்தெடுத்த மோசேக்கும் அவருக்கும் இடையே இந்த நேருக்கு நேரான உறவை காணலாம். அநேக ஆண்டுகளாக மோசே தேவனை பின்பற்றுவதில் மிகவும் உறுதியோடும், நம்பிக்கையோடும் இருந்தான். அவன் வழி நடத்தி வந்த ஜனங்கள் விக்கிரக ஆராதனைக்கு உட்பட்டு, அவனுக்கு விரோதமாக எழும்பின பொழுதும்கூட அவன் தொடர்ந்து தேவனைப் பின்பற்றினான். தேவனை ஆராதிப்பதற்குப் பதிலாக இஸ்ரவேல் ஜனங்கள் பொன்னிலான ஒரு கன்றுக்குட்டியை ஆராதனை செய்தபொழுது (யாத். 32) தேவனை சந்திக்க பாளயத்திற்கு வெளியே மோசே ஒரு கூடாரத்தைப் போட்டான். ஜனங்களோ தூரத்திலிருந்து அக்காட்சியைக் காண வேண்டும் (யாத். 33:7-11). தேவ பிரசன்னத்தின் அடையாளமாக கூடாரத்தின் மேல் அக்கினி ஸ்தம்பம் இறங்கின பொழுது, மோசே ஜனங்கள் சார்பில் தேவனோடு பேசினான். தேவனது பிரசன்னம் அவர்களோடு செல்லும் என்று தேவன் வாக்குப் பண்ணினார் (வச. 14).

இயேசுவின் சிலுவை மரணத்தினாலும், உயிர்த்தெழுதலினாலும், இப்போது நமக்காக தேவனோடு பேச மோசேயைப் போன்ற ஆட்கள் நமக்கு தேவை இல்லை. பதிலாக சீஷர்களோடு இயேசு கொண்டிருந்த உறவைப்போல நாமும் கிறிஸ்துவின் மூலமாக தேவனோடு அன்பான உறவு கொள்ளலாம் (யோவா. 15:16). இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஒருவன் அவனது சினேகிதனோடு பேசுவது போல நாமும் தேவனோடு பேசலாம்.