எனது பேத்திக்கு ஜான் பிலிப் சௌசா அணிவகுப்பு ராகங்களில் ஒன்று மிகவும் பிடிக்கும். சௌசா அமெரிக்க ஐக்கிய நாட்டில் 19ம் நூற்றாண்டின் பின் பகுதியில் வாழ்ந்த இசை அமைப்பாளர், அணிவகுப்புப் பாடல்களை இயற்றுவதில் மன்னன் என்று கருதப்பட்டார். எனது பேத்தி மோரியா எந்த ஒரு அணிவகுப்பிலும் இல்லை. அவள் 20 மாதக் குழந்தைதான்; அவளுக்கு அந்த ராகம் மிகவும் பிடிக்கும். அதிலுள்ள சில வரிகளின் ராகத்தைப் போன்று வாயினால் ஓசையும் எழுப்புவாள். அந்த ராகத்தை மகிழ்ச்சியான நேரங்களோடு அவள் சம்பந்தப்படுத்தி சிந்திப்பாள். நாங்கள் குடும்பமாகக் கூடி வரும்பொழுது அனேக சத்தங்களின் ஊடாக, கரங்களைத் தட்டி, இந்தப் பாடலை வாய் திறவாமல் பாடுவோம். எங்களது ஓசைக்கு தகுந்தவாறு பேரக் குழந்தைகள் வட்டமாக நின்று நடனமாடுவார்கள். அது எப்பொழுதுமே மகிழ்ச்சியின் உச்சத்திலிருக்கும், குழந்தைகளின் சிரிப்பொலியுடன் முடிவு பெறும்.

இந்த மகிழ்ச்சியின் சத்தம் “கர்த்தரை மகிழ்ச்சியுடன் ஆராதனை செய்யுங்கள்” சங்கீதம் 100:2 என்ற சங்கீதத்தை நினைவுகூர என்னை வலியுறுத்துகிறது. சாலொமோன் ராஜா தேவாலயத்தை பிரதிஷ்டை செய்தபொழுது இஸ்ரவேல் மக்கள் துதியுடன் ஆராதனை செய்தார்கள் (2 நாளா. 7:5,6). அவர்கள் பாடிய பாட்டுகளில் சங்கீதம் 100ம் ஒன்றாக இருந்திருக்கலாம்: “பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்; மகிழ்ச்சியுடன் கர்த்தருக்கு ஆராதனை செய்து, ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதி முன் வாருங்கள். அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்” (சங். 100:1,3,4) என்று அந்த சங்கீதம் அறிவிக்கிறது. “கர்த்தர் நல்லவர். அவருடைய கிருபை என்றென்றைக்கும் உள்ளது” (வச. 5).

நமது தேவன் நம்மை நேசிக்கிறார். அதற்கு மாறுத்தரமாக நாமும் கர்த்தரை கெம்பீரமாய்ப் பாடுவோம் (சங். 100:1).