சில நாட்களில், ஒரே கருப்பொருள் அதனூடாய் கடந்து வருவதை நாம் காணலாம். சமீபத்தில் அப்படிப்பட்டதான நாட்களை நான் எதிர்கொண்டேன். எங்கள் பாஸ்டர், ஆதியாகமம் 1ஆம் அதிகாரத்திலிருந்து போதிக்க தொடங்கும் முன், பூக்கள் மலர்வதை, காலதாமதமற்ற 2 நிமிட பிரமிக்கத்தக்க தொடர் புகைப்பட தொகுப்பாக காட்டினார். அதன் பிறகு, நான் வீட்டிலே சமூக ஊடகத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தபோது, பூக்களை பற்றின அநேக பதிவுகளை காண நேர்ந்தது. மேலும், நாங்கள் தோப்பிலே நடக்கையில், இளவேனிற் காலத்து வண்ணமயமான காட்டுப் பூக்கள் எங்கும் சூழ்ந்திருக்க கண்டோம்.

பூக்களையும், பலவகை தாவரங்களையும் (அவை வளர்வதற்கு நிலத்தையும்) சிருஷ்டிப்பின் மூன்றாம் நாளிலே தேவன் படைத்தார். மேலும் அந்நாளிலே, தேவன் இரண்டுமுறை அது “நல்லது” என அறிவித்தார் (வச:24,31). சொல்லப்போனால், தன்னுடைய தலைசிறந்த படைப்பாகிய மனுஷனை சிருஷ்டித்து முடித்தபின், தேவன் தான் படைத்த எல்லாவற்றையும் கண்டு, “அது மிகவும் நன்றாயிருக்கிறது,” என்றார்.

சிருஷ்டிப்புக் கதையிலே, தன் சிருஷ்டிப்பைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்த ஓரு சிருஷ்டிகரையே நாம் காண்கிறோம். சிருஷ்டிப்புப் பணியை அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு செய்தார். அதன் பிரதிபலிப்பாகத்தான் வியப்பளிக்கும் வகைகளோடு கூடிய வண்ணமயமான இவ்வுலகை அவர் வடிவமைத்தார். மேலும், தன் சிருஷ்டிப்பின் தலைசிறந்த படைப்பை இறுதியாக சிருஷ்டித்தார். “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார்” (வச. 27). அவருடைய சாயலை சுமக்கிற நாம், அவருடைய அழகிய கைவண்ணத்தினால் உருவாக்கப்பட்டு ஆசீர்வாதிக்கப்பட்டுள்ளோம்.