1950-1960களில் ஆட்ரி ஹெப்பர்ன், நட்டாலி வுட் மேலும் தெபோரா ஹெர் என்ற ஹாலிவுட் நடிகைகளின் நிகழ்ச்சிகள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி, பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன. ஆனால், இந்த நடிகைகளின் நிகழ்ச்சிகள் சிறந்து விளங்குவதற்குக் காரணம்; அந்த நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியான இசைக் குழுவினர் இயற்றிய மிக இனிமையான பாடல்கள்தான். அவை அந்த நடிகைகளின் திரைப்படங்கள் வெற்றி பெற உண்மையான காரணமாக இருந்தது. அந்த மூன்று பிரசித்திபெற்ற நடிகைகளுக்காக, திரைக்குப்பின்னால் ஒலி கொடுத்தது மார்னி நிக்சன்தான். ஆனால், அவளது முக்கியமான பங்களிப்பை நீண்ட காலமாக ஒருவரும் கண்டு கொள்ளவுமில்லை, அவளைப் புகழவுமில்லை.

கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் மிக முக்கியமான பணிகளை முன்னின்று செயல்படுத்துபவர்களை, அப்போஸ்தலனாகிய பவுல் தம் ஊழியத்தில் அதிகமாக சார்ந்திருந்தார். ரோமருக்கு எழுதிய நிருபத்தில் வல்லமையோடு தேவ செய்தி வெளிப்பட காரணமாக இருந்தவர் பவுலுடைய எழுத்தர் தெர்தியுவாகும் (ரோம. 16:22). பவுல் அப்போஸ்தலனுக்கும், ஆதித் திருச்சபைக்கும், எப்பாபிராவின் ஊக்கமான ஜெபம்தான் முக்கிய அஸ்திபாரமாக இருந்தது (கொலோ. 4:12-13). களைப்படைந்த பவுல் அப்போஸ்தலன் ஒய்வு எடுத்துக் கொள்ளத்தக்கதாக லீதியாள் அவளது வீட்டை திறந்து கொடுத்தாள். கிறிஸ்துவுக்குள் உடன் ஊழியர்களான இவர்களின் உதவி இல்லாமல் பவுல் திறம்பட உழியம் செய்திருக்க முடியாது (வச. 7-18).

தேவனுடைய ஊழியத் திட்டத்தில் நாம் செய்யும் பணி ஒருவேளை வெளிப்படையாக பிறர் பார்க்கத்தக்கதாக இல்லாவிட்டாலும், நாம் அவருக்கு உண்மையாகக் கீழ்ப்படிந்து அவருடைய ஊழியத்தில் அமைதியாக பங்கெடுக்கும் பொழுது, தேவன் நம்மேல் பிரியமாய் இருக்கிறார் (1 கொரி. 15:58) அவ்வாறு நாம் செய்யும் பொழுது, அந்த ஊழியம் தேவனுக் மகிமையாகவும், பிறரை அவரண்டை வழிநடத்துவதாகவும் இருப்பதால், நமது ஊழியம் அர்த்தமுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.