சாதாரண மக்கள்கூட, இவ்வுலகத்தின் தலைசிறந்த நூல்களிலிருந்து ஒவ்வொரு நாளும், தொடர்ந்து சிறிது நேரம் படித்து வந்தாலே, தரமான கல்வி ஞானம் பெறலாம் என ஹார்வர்ட்(Harvard) பல்கலைக்கழகத்தின் நீண்டகால தலைவர், முனைவர் சார்லஸ் W. எலியட்(Charles W. Eliot) நம்பினார். 1910ஆம் ஆண்டு, வரலாறு, அறிவியல், விஞ்ஞானம், தத்துவம் மற்றும் நுண்கலை நூல்களிலிருந்து சிலபகுதிகளை தேர்வுசெய்து தொகுத்து, ‘தி ஹார்வர்ட் கிளாசிக்ஸ்’(The Harvard Classics) என்ற 50 பாக புத்தக தொகுப்பை வெளியிட்டார். ஒவ்வொரு புத்தகமும், ‘ஒரு நாளில் பதினைந்து நிமிடங்கள்’ என்ற தலைப்பில், எலியட்டின் ‘வாசிப்பு வழிகாட்டி’ ஒன்றை உள்ளடக்கியதாய் இருந்தது. அதில், அவ்வருடம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 8 முதல் 10 தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கங்களை வாசிக்கும்படியாக சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.

அதைப்போலவே, தினமும் பதினைந்து நிமிடங்கள் நாம் தேவனுடைய வார்த்தையை வாசிப்பதில் செலவுசெய்தால் எப்படியிருக்கும்? நாம் சங்கீதக்காரனோடு சேர்ந்து, “என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும். மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்,” எனக் கூறுவோமாக (சங் 119. 36-37).

ஒரு நாளைக்கு பதினைந்து நிமிடங்கள் என்றால், ஒரு வருடத்திற்கு தொண்ணூற்றியோறு மணி நேரங்களாகிறது. ஆனால், நாம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு மணிநேரம் எவ்வளவு நேர்த்தியாய் வாசிக்கிறோம் என்பதைவிட, தொடர்ந்து விடாமுயற்சியோடு ஒவ்வொரு நாளும் வாசித்து வருகிறோமா, என்பதே முக்கியம். ஒருவேளை நாம் ஒரு நாள் அல்லது ஒரு வாரம் கூட வாசிக்க தவறிவிட்டாலும், மறுபடியும் வாசிக்க ஆரம்பித்து தொடரலாம். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் நமக்கு போதித்து, நம்முடைய மனதில் உள்ள வார்த்தையை இருதயத்திற்கு கொண்டு சேர்த்து, பின்பு அது நம்முடைய கரங்களையும் கால்களையும் சென்றடைந்து, நம்மை, ஒரு மருரூபத்திற்குளாக அழைத்துச் செல்லும்.

“கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்கு போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக்காத்துக்கொள்வேன்” (வச. 33).