ஸ்டீவன் (Steven) என்றழைக்கப்படும் ஒரு இளம் ஆப்பிரிக்க அகதிக்கு எந்த நாடும் சொந்தமில்லை. தான் மொசாம்பிக் (Mozambique) அல்லது ஜிம்பாப்வே (Zimbawe) நாட்டில் பிறந்திருக்கக்கூடும் எனக் கூறும் அளவிற்கு தான் பிறந்த தேசம் கூட அவனுக்குத் தெரியவில்லை. தன் தகப்பனைக் குறித்தும் அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை, தாயையோ இழந்துவிட்டான். உள்நாட்டுப் போரின் போது அவனுடைய தாய் அங்கிருந்து தப்பித்து தேசம் தேசமாய் தெருவோர வியாபாரம் செய்து, அலைந்து திரிந்துள்ளாள். எவ்வித அடையாள அட்டையுமின்றி, பிறந்த இடத்தைக் கூட அறியாமல் தவித்துக் கொண்டிருந்த ஸ்டீவன், ஒரு நாள் ஓர் பிரிட்டிஷ் காவல் நிலையத்திற்கு சென்று தன்னை கைது செய்யுமாறு வேண்டினான். ஒரு குடிமகனுக்குரிய உரிமைகளோ, நன்மைகளோ ஏதுமின்றி தெருவில்கூட வசிக்க வழியின்றி தவிப்பதைக் காட்டிலும் சிறையிலிருப்பதே மேல் என அவனுக்குத் தோன்றியது.

சொந்த தேசமின்றி வாழும் அவலநிலையை மனதில் வைத்துக்கொண்டுதான், பவுல் எபேசியருக்கு கடிதம் எழுதினான். ஏனெனில் அந்நியராக, புறம்பானவர்களாக வாழ்வதின் நிலையைக் குறித்து யூதரல்லாத அவனுடைய வாசகர்களுக்கு நன்கு தெரியும் (2:12). கிறிஸ்துவுக்குள் ஜீவனையும், நம்பிக்கையையும் பெற்ற பின்பு தான் (1:13) பரலோக ராஜியத்தை சேர்ந்தவர்களாக வாழ்வதின் அர்த்தத்தை கண்டறிந்தார்கள் (மத். 5:3). பிதாவை வெளிப்படுத்த வந்த இயேசுவின் மூலம் அவருடைய விசாரிப்பையும், அவருக்குள் தங்களுக்குண்டான அடையாளத்தையும் கற்றறிந்தார்கள் (மத். 6:31-33).

நம்முடைய நினைவிலிருந்து கடந்த கால ஞாபகங்கள் மறைந்து போகும் பொழுது, நம்பிக்கை என்பது புதிய விதிமுறை ஆகிறது; ஏனெனில் விரக்தியும், நம்பிக்கையின்மையும் பழைய வாழ்க்கைக்குரியது என்று பவுல் உணர்ந்தான்.

நாம் இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தைக் கொண்டு, தேவனுடைய குடும்பத்தின் அங்கதினராக சேர்த்துக்கொள்ளப்பட்டோம் என்றும், அதினால் சகலவித உரிமைகளையும், நன்மைகளையும் பெற்றவர்களாக அவருடைய பாதுகாப்பில் வாழக் கிருபைபெற்றுள்ளோம் என்பதை அறிந்துகொள்வோமாக.