நியூயார்க் நகரில் உள்ள ஓர் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடிலில் உள்ள மாட்டுத்தொழுவத்தில், பிறந்த பச்சிளம் குழந்தையை யாரோ விட்டுவிட்டுச் சென்றனர். நிச்சயமாக கண்டெடுக்கப்படுவான் என்ற நம்பிக்கையில் துணியில் சுற்றி அக்குழந்தையை ஓர் இளம் பெண் மனம் நொந்து விட்டுவிட்டிருக்க வேண்டும். அவளை நாம் எளிதில் நியாயம் தீர்க்கலாம், ஆனால் அக்குழந்தைக்கு வாழ ஓர் வாய்ப்பளிக்கப் பட்டிருப்பதை எண்ணி நன்றி கூறலாம்.

என் வாழ்வில் இச்சம்பவம் வெறும் கதையல்ல. நான் ஒரு தத்தெடுத்து வளர்க்கப்பட்ட குழந்தை. என் பிறப்பை பற்றிய சம்பவங்கள் எனக்கு தெரியாது. ஆனால் நான் ஒரு போதும் கைவிடப்பட்டவனாக உணரவேயில்லை. எனக்கு இரண்டு தாயார். இருவரும் நான் நன்கு வாழவேண்டும் என்று எண்ணினர். ஒரு தாய் எனக்கு உயிர் கொடுத்தார்கள்; மற்றவர் அவரது வாழ்க்கையை எனக்குள் விதைத்தார்கள்.

யாத்திராகமத்தில் இப்படிப்பட்ட ஓர் அன்பான தாயாரை நாம் பார்க்கலாம். இஸ்ரவேலரில் பிறக்கும் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுவிடும் படி பார்வோன் ராஜா கட்டளையிட்டான் (1:22). அதனால் மோசேயுடைய தாயார் அவளால் இயன்ற வரை அக்குழந்தையை ஒளித்து வைத்தாள். ஆனால் மூன்று மாதம் ஆன பின்பு குழந்தையை ஒர் தண்ணீர் புகாத கூடையில் வைத்து நைல் நதியில் விட்டுவிட்டாள். இளவரசியால் அக்குழந்தை மீட்டெடுக்கப்பட்டு, பார்வோனின் அரண்மனையில் வளர்க்கப்பட்டு, பின்னர் யூத மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கும்படியான தேவ திட்டம் நன்றாகவே நிறைவேறியது.

செய்வதறியாது தவிக்கும் ஓர் இளம் தாய் தன் குழந்தை வாழும்படியாக முயற்சித்தால், தேவன் அங்கிருந்து செயல் படத் தொடங்குவார். ஏனெனில் எண்ணி முடியாத மிகவும் ஆச்சரியப்படதக்க வழிகளில் செயல்படுவது தேவனுடைய இயல்பு.